Just In
- 39 min ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 58 min ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 2 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 3 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
Don't Miss!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- News சென்னையில் பிரபல ‛பப்’ மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.. மெட்ரோ பணிகள் காரணமா! பகீர் தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மின்சாரமயமாகிறது உலகம்... 2030ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு அதிரடி தடை?
இங்கிலாந்தை தொடர்ந்து ஜப்பானிலும் 2030ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படலாம் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐசி இன்ஜின் மூலம் இயங்கும் பெட்ரோல், டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலை கடுமையாக மாசுபடுத்துகின்றன. அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பெரும் தொகையை செலவிட வேண்டியுள்ளது. எனவே உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து வருகின்றன.
அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் போன்ற வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளுமே இந்த விஷயத்தில் ஆர்வமாக உள்ளன. இதில், இங்கிலாந்து அரசு வரும் 2030ம் ஆண்டு முதல், ஐசி இன்ஜினில் இயங்கும் புதிய பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனை தடை செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
முதலில் 2040ம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல், டீசல் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது 2035ம் ஆண்டாக குறைக்கப்பட்டு, இறுதியில் 2030ம் ஆண்டு முதல் தடை என அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த வரிசையில் ஜப்பானும் இணையவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த சுமார் 15 ஆண்டுகளில், அனைத்து வாகனங்களும் 100 சதவீதம் முழுமையாக மின்சாரமயமாக வேண்டும் என ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது. அத்துடன் 2050ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக உருவெடுக்கவும் ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்குகளை எட்டும் விதமாக வரும் 2030களின் மையப்பகுதியில் இருந்து ஜப்பானில் விற்பனை செய்யப்படும் அனைத்து புதிய வாகனங்களும், எலெக்ட்ரிக் அல்லது ஹைப்ரிட் வாகனங்களாகதான் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்படலாம். இதற்கான உறுதியான நடவடிக்கைகளை ஜப்பான் எடுக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஐசி இன்ஜின் மூலம் இயங்கும் வாகனங்களை, புதிய வாகனங்களின் சந்தையில் இருந்து படிப்படியாக வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிய வாகன சந்தையில், எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்கள் மட்டுமே இருப்பது உண்மையில் குறிப்பிடத்தகுந்த ஒரு மாற்றமாக இருக்கும்.
ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் தலைசிறந்து விளங்குகிறது. இதற்கு அந்த நிறுவனத்தின் ப்ரையஸ் ஹைப்ரிட் (Toyota Prius) காரை ஒரு உதாரணமாக சொல்ல முடியும். அத்துடன் ஜப்பானை சேர்ந்த மற்ற ஒரு சில நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில், உலகின் மிகச்சிறந்த உற்பத்தியாளர்களாக திகழ்ந்து வருகின்றன.
ஜப்பான் நிறுவனங்கள் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், ஜப்பானின் உள்நாட்டு சந்தையில் சமீப காலமாக ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. 2018ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019ம் ஆண்டில் ஜப்பானில், ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பதிவு சரிவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சவாலை கடந்து, ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஜப்பான் ஊக்குவிக்கவுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் வரும் 2030ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனைக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசும், பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன.
Note: Images used are for representational purpose only.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!