Just In
- 44 min ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Sports
ரஹானே மட்டும் அந்த முடிவை எடுத்து இருந்தால்.. ஆடிப் போன ஆஸி.. வெளியான ரகசியம்!
- News
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெங்களூர்வாசிகளே... முதல்ல பார்க்கிங் செய்ய இடம் இருக்கா?... இல்லைனா புது கார் வாங்கறது மறந்துடுங்க!
பெங்களூர் நகரில் வாகனங்கள் சாலையோரங்களில் பார்க்கிங் செய்யப்படுவதால் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை தடுப்பதற்கு அதிரடி விதிமுறையை கொண்டு வருவது குறித்து கர்நாடக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக விளங்கும் பெங்களூர் நகரில் வாகனப் பெருக்கம் வெகுவாக அதிகரித்து விட்டது. மேலும், புதிய வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், காற்று மாசுபாடு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், பெங்களூர் நகரில் வாகனப் பெருக்கத்தால் எங்கு பார்த்தாலும் பார்க்கிங் பிரச்னை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதற்கு தீர்வு காண்பதற்காக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில், 'பார்க்கிங் விதிமுறைகள் 2.0' என்ற தலைப்பில் ஆலோசனை நடந்தது. இதில், கர்நாடக அரசின் மூத்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சாலைகளில் கார்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி, புதிதாக கார் வாங்குவோர், அதனை நிறுத்துவதற்கு இடம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அத்தாட்சி இருந்தால் மட்டுமே அந்த காருக்கு பதிவு செய்ய அனுமதிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த முடிவு குறித்து அடுத்தக் கட்ட ஆலோசனையின்படி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாட அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய விதிமுறை புத்தாண்டில் புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், கார் விற்பனை குறைய வாய்ப்பு இருப்பதால், கார் நிறுவனங்களுக்கும், டீலர்களுக்கும் இந்த விதிமுறையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில், சாலையோரத்தில் பார்க்கிங் செய்யப்படுவது ஓரளவு கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக அமையும்.