Just In
- 1 hr ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 2 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- 2 hrs ago நடிகர் தனுஷ் ஓட்டு போட வந்த காரின் விலை என்ன தெரியுமா? இவ்வளவு காஸ்ட்லியான காரா இது?
- 4 hrs ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Movies கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாஜக எம்பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த கேரள போலீஸ்... எதற்காக தெரிஞ்சா ஆடிப்போய்டுவீங்க..!
பாஜக எம்பி மீது கேரள போலீஸார் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கான காரணம்குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
வரி, அரசாங்கத்தின் நிர்வாக நிதி ஆதாரத்திற்கான முக்கிய அங்கமாகும். அரசர்கள் காலம் தொட்டு வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்து தற்போது வரை நீடித்து வருகின்றது இந்த வரி. இதனை, நாட்டின் பொருளாதாரத்தையும், வலத்தையும் அதிகரிக்கச் செய்வதற்காகவே மக்களிடமிருந்து அரசு வசூலித்து வருகின்றது.
இருப்பினும், இதனை எதற்காக வசூலிக்கின்றோம் என்பதையே உணராத ஒரு சில அரசியல் தலைவர்கள், தங்களின் வெளியூர் சுற்றுப் பயணத்திற்காகவும், வீண் விளம்பரங்களுக்காகவும் செலவிட்டு வருகின்றனர். பலர், தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வரியைக் கூட செலுத்தாமல் அரசினை ஏமாற்றி வருகின்றனர்.
வரி வசூலிப்பதில், அரசு இரு முறைகளை கையாண்டு வருகின்றது. நேர்முகம் மற்றும் மறைமுகம் ஆகிய இருமுறைகளின்படியே இவ்வரி வசூல் செய்யப்படுகின்றது.
இதில் வருமான வரி, நிறுவன வரி, சொத்து வரி, நன்கொடை வரி, நில வரி, தொழில் வரி, வங்கி பண மாறுதல் வரி இவையனைத்தும் நேர்முக வரியில் அடங்கும்.
இதேபோன்று உற்பத்தி வரி, சுங்க வரி, விற்பனை வரி, சேவை வரி, மதிப்பு கூட்டு வரி, பொருள் மற்றும் சேவை வரி, பயணிகள் வரி, ஆடம்பர வரி ஆகியவை மறைமுக வரியில் அடங்கும்.
அடேங்கப்பா வரி விதிப்பில் இத்தனை இருக்கா என கேட்கிறீர்களா..? நமக்கு மட்டுமில்லைங்க இது ஒரு சில அரசியல் முக்கிய புள்ளிகளுக்குக்கூட தெரிய வாய்ப்பில்லை.
ஆனால், இதைப் பற்றி நன்கு அறிந்த பலர் இதனை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதைப் பற்றி முதலில் தெரிந்து வைத்துக் கொள்கின்றனர். அதிலும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய தொழிலதிபர்களே இத்தகைய செயலில் அதிகம் ஈடுபடுகின்றனர். இதனை அரசாங்கம் லேசாக எடுத்துக் கொள்வதில்லை.
அந்தவகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு தற்போதைய பாஜக எம்பியாக இருக்கும் சுரேஷ் கோபி செய்த வரி ஏய்ப்பு விவகாரம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
மேலும், இதற்காக அவர்மீது கேரள போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சுரேஷ் கோபி திரைப்பட நடிகரும்கூட, மாநிலங்களவை எம்பி-யாக இருக்கும் இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் ஆவார். இவர், தமிழில் பிரபல நடிகர் விக்ரமின் 'ஐ' படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அதில், கதாநாயகி மற்றும் ஹீரோவுக்கான மருத்துவர் கதாபத்திரத்திலும் தோன்றியிருப்பார்.
திரையுலகில் பெயர்போன இவர், அண்மையில் சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான ஆடி-யின் க்யூ7 என்ற மாடலை வாங்கினார். இந்த காரை பொய்யான ஆவணங்களைக் கொண்டு புதுச்சேரி ஆர்டிஓ-வில் பதிவும் செய்துள்ளார்.
குறிப்பாக, இந்த காரின் அதிகபட்ச வரியைக் குறைப்பதற்காகவே இவர் இவ்வாறு, கேரள மாநிலத்தின் ஆர்டிஓ-வை தவிர்த்துவிட்டு புதுச்சேரியில் பதிவு செய்ததாக கூறப்படுகின்றது.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் யூனியன் பிரதேசங்களில் வரி பல மடங்கு குறைவு. உதாரணமாக, ஆடி போன்ற சொகுசு கார்களுக்கு தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக போன்ற சாதாரண மாநிலங்களில் பதிவு செய்தால் ரூ. 20 லட்சம் வரை வரியாக செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், புதுச்சேரியில் ரூ. 1 லட்சமே போதுமானது.
எனவே, பெரும்பாலான கோடீஸ்வரர்கள் பொய்யான ஆவணங்களைத் தயார் செய்து புதுச்சேரியில் குடியிருப்பதாக கூறி அங்கு வாகனத்தைப் பதிவு செய்துவிட்டு மற்ற மாநிலங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதே பாணியை கேரளாவைப் பூர்விமாகக் கொண்ட சுரேஷ் கோபி வரி ஏய்ப்பு செய்வதற்காக பயன்படுத்தியுள்ளார். அவருடைய ஆடி க்யூ7 காரின் மதிப்பு ரூ. 80 லட்சம் ஆகும். இதனை, கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதமே அவர் பதிவு செய்துவிட்டார். நீண்ட காலமாக நடைபெற்று இந்த வழக்கில் தற்போது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநில போக்குவரத்துத்துறை, வெளி மாநிலத்தில் பதிவு செய்து உள் மாநிலத்தில் இயக்கப்பட்டு வரும் வாகனங்கள்மீது தனிக் கவனம் செலுத்தி வருகின்றது. அதன்படி, அத்தகைய வாகனங்கள் சாலையில் பிடிபட்டால் உரிய ஆவணங்கள் கோரப்படுகின்றது. அதில், ஏதேனும் முரண்பாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால் அந்த வாகனத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
அந்தவகையில், தொடரப்பட்ட வழக்குகளில் முக்கிய வழக்காக சுரேஷ் கோபியின் விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து கேரள மோட்டார் வாகனத்துறை ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியநிலையில், அதற்கு தக்க விளக்கம் அவர் சார்பில் அளிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
ஆகையால், அவர்மீது நடவடிக்கை எடுக்கும்விதமாக அவர்மீது கடந்த செவ்வாய்கிழமை அன்று திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையை அம்மாநில போலீஸார் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து, பாஜக எம்பி சுரேஷ் கோபி, நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தற்போது வெளியே வந்துள்ளார்.
இருப்பினும், அவரது குற்றம் நிரூபிக்கப்படுமேயானால், அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்த குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
மேலும், அவருடைய விலையுயர்ந்த சர்ச்சைக்குரிய காரும் பறிமுதல் செய்யப்படும். கடந்த காலங்களில், இதுபோன்ற சம்பவங்களில் பல்வேறு வாகனங்களை போக்குவரத்துத்துறைப் போலீஸார் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுபோன்று பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவது முதல்மறையல்ல, ஏற்கனவே இதுபோல சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியிருக்கின்றது.
அந்தவகையில், பாஜக கட்சியைச் சேர்ந்த ஓர் பிரமுகர் டிராஃபிக்கில் இருந்து தப்பிப்பதற்காக துப்பாக்கியை நீட்டியச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்த தகவலை கீழே காணலாம்.
அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களில் ஒரு சிலர் தாங்கள்தான் அரசாங்கம் என்பதைப் போன்று பல நேரங்களில் நடந்துக் கொள்வதை நம்மால் காண முடிகின்றது. தாங்கள் மக்களின் நலனுக்காக பணியாற்றவே நியமிக்கப்பட்டுள்ளோம் என்பதை பல நேரங்களில் அவர்கள் மறந்து விடுகின்றனர். மேலும், அந்த செயலுக்கான பலனாக சட்ட சிக்கலிலும் அவர்கள் சிக்கிக் கொள்கின்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், பிலிஃபட் என்னும் பகுதியில் பாஜக கட்சியைச் சேர்ந்த ஓர் அரசியல் பிரமுகர் செய்த செயல் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், அரசியல் பிரமுகர் பயணித்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிப்பதற்காக, அவர் வைத்திருந்த துப்பாக்கியை நீட்டி, பொதுமக்கள் அனைவரையும் மிரட்டும் தோணியில் நடந்துக் கொண்டுள்ளார். அரசியல்வாதியின் இந்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக, டோல் கேட்டில் கட்டணம் செலுத்தாமல் ஓசியில் செல்வதற்காக ஊழியர்களைத் தாக்கியது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டுவிட்டு போலீஸாரிடம் வாக்குவாதம் செய்வது உள்ளிட்ட பல்வேறு அட்ராசிட்டிகளை அரசியர்கள் மேற்கொண்டு வந்தநிலையில் இது முற்றிலும் விநோதமான செயலாக இருக்கின்றது.
அதேசமயம், இந்த அரசியல்வாதியின் செயலை சட்ட விரோதம் மற்றும் மிகப்பெரிய அச்சுறுத்தலை விளைவிக்கின்ற வகையிலான செயலாகவே பார்க்கப்படுகின்றது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவை கீழே காணலாம்...
வீடியோவில் முறைகேடாக நடந்துக் கொண்ட பாஜக அரசியல் பிரமுகரை மக்கள் சூடிக் கொண்டு காட்டமாக நடந்துக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேசமயம், அவர் சென்ற சாலையில், அவரின் கார் மட்டுமின்றி பொதுமக்களுடை கார்களும் ஏராளமாக சாலையில் நிற்பதை நம்மால் காண முடிகின்றது.
இந்த போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்கவே பாஜக கட்சியைச் சேர்ந்த, அந்நபர் இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அவர் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, சட்ட விரேதமாக செயல்பட்ட அரசியல்வாதி மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்மீது எந்தெந்த பிரிவுகளின்கீழ் வழக்குபதியப்பட்டுள்ளது என்ற தகவல் முழுமையான தகவல் கிடைக்கவில்லை.
அதேசமயம், அவர் பயன்படுத்திய துப்பாக்கியிற்கு உரிய ஆவணங்கள் இருக்கின்றதா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. ஒருவேளை, அந்த துப்பாக்கியிற்கு உரிய அனுமதி பெறவில்லை என்றால், அரசியல் பிரமுகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. ஏன், அவரை சிறையில்கூட அடைக்கலாம்.
இதுபோன்று, போக்குவரத்து நெரிசல் மற்றும் விதிமீறல்களில் இருந்து தப்பிப்பதற்காக அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் சிலர் தங்களின் வாகனங்களில் சைரன் மற்றும் ப்ளாஷர் மின் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர்.
இது, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி குற்றமாகும். அவசர கால வாகனங்கள் மற்றும் போலீஸார் வாகனங்களில் மட்டுமே இத்தகைய கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சைரன், ப்ளாஷர் மற்றும் விஐபி ஸ்டிக்கர்கள் போன்றவற்றை ஒட்டிக்கொண்டு விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேப்போன்று, பொதுமக்களில் பலரும் போலியாக போலீஸ், பத்திரிக்கையாளர், அட்வகேட் போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீஸின் கெடுபிடியில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். தற்போது வாகனங்களில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவது குற்றம் என மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக நம்பர் பிளேட்டுகளில் பதிவெண்ணகளைத் தவிர வேறெந்த எழுத்துக்களும் இடம்பெறக் கூடாது என்பதே அதன் முக்கிய கருத்தாகும்.
இருப்பினும், இதுகுறித்து பலர் அறியாமல், இந்த தவறை செய்து போலீஸாரிடம் சிக்கிக்கொள்கின்றனர்.
அதேசமயம், பொதுவெளியில் துப்பாக்கிப் போன்ற எந்தவொரு ஆயுதங்களையும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற வகையில் பயன்படுத்தக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு கூறுகின்றது. மீறினால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்துகின்றது. இதனடிப்படையிலேயே பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய பாஜக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.