Just In
- 34 min ago ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி
- 3 hrs ago ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- 4 hrs ago தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- 6 hrs ago என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
Don't Miss!
- Finance 1 கிலோ காளான் ரூ. 1.5 லட்சமா.. சமைச்ச வீடே மணக்கும்..என்னனு பாருங்க!
- Technology Vodafone-க்கு கும்பிடு.. மொத்தமா முடிச்சு விட்டாச்சு.. ஒரே திட்டம்தான்.. டேட்டா, கால்களுக்கு லிமிட் இல்ல!
- Lifestyle காமதா ஏகாதசி 2024 எப்போது? தேதி, நேரம், பூஜை குறித்த தகவல்கள்...
- News தமிழ்நாட்டில் நாளை வாக்குப் பதிவு... இப்படியும் 20 கட்சிகள் களத்தில் இருப்பது தெரியுமா?
- Movies அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...
இங்கிலாந்து நாட்டில் அண்மையில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு ஜாக்பாட் அடித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிபு பவுல் (Shibu Paul). 32 வயது நிரம்பிய இவர் சவுண்ட் இன்ஜினியர் ஆவார். இவர் தற்போது அவரது மனைவியுடன் இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகின்றார். இவர்கள் இருவருமே கடந்த வருடம்தான் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர்.
ஷிபுவின் மனைவி லின்னெட் ஜோசப் (28) இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் சிட்டி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர். ஆனால், ஷிபு பவுலுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவர் இங்கிலாந்தில் வேலை தேடி வந்துக் கொண்டிருந்திருக்கின்றார்.
தற்போது கொரோனா வைரஸ் பதற்றம் இங்கிலாந்திலும் நீடித்து வருகிறது. இதனால்தான் ஷிபு நீண்ட நாட்களாக தேடியும் வேலை கிடைக்காத சூழலே நிலவி வருகின்றது. அதேசமயம், விடா முயற்சியாக இணையத்தின் வாயிலாக பல்வேறு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பணிக்காக அவர் விண்ணப்பித்து வருகின்றார்.
இந்நிலையில்தான் ஷிபுவிற்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் கார் பரிசாக கிடைத்துள்ளது. இதனை, பிஓடிபி (Best of the Best) எனும் அமைப்பே அவருக்கு வழங்கியிருக்கின்றது. இது அண்மையில் லக்கி டிராவ் நிகழ்வினை விமான நிலையம் மற்றும் ஆன்லைன் வாயிலாக நிகழ்த்தியது. இதில், ஷிபு பவுல் கலந்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இந்தநிலையிலேயே ஷிபு தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி உருஸ் காரைப் பெற்றிருக்கின்றார். இந்த காருடன் அந்நாட்டு மதிப்பில் 20,000 யூரோக்கள் ஷிபுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 17 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது தோராயமாக வழங்கப்பட்டுள்ள மதிப்பாகும்.
காரை ஷிபுவின் கையில் கொடுத்த பின்னரும் அவர் அதை நம்பவே இல்லை. பல முறைய நெறியாளர்களிடம் உண்மையாக இந்த கார் எனக்குதானா என பல முறைக் கேட்பதை வீடியோவில் நம்மால் காண முடிகின்றது. ஆரம்பத்தில் பிஓடிபி குழுவினர், உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்து இருக்கு என கூறியதில் இருந்து, காரை ஒப்படைத்தது வரை, ஷிபு பரவசத்துடனே காணப்பட்டார்.
ஷிபு-லின்னெட் தம்பதியினர் இதற்கு முன்பு வரை மிகவும் வழக்கமான கார்களில் ஒன்ரான டொயோட்டா யாரிஸ் காரையே பயன்படுத்தி வந்தனர். இனி இவர்களின் பயணம் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரிலேயே இருக்கும். இது ஒரு மிகப்பெரிய அப்கிரேஷன் ஆகும். இந்த கார் பல இளைஞர்களின் கனவு வாகனமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தான் பிஓடிபி ஷிபுவிற்கு பரிசாக வழங்கியுள்ளது.
பிஓடிபி ஓர் கார் மற்றும் லைஃப் ஸ்டைல் குறித்த போட்டிகளை நிகழ்த்தி வரும் இங்கிலாந்து நிறுவனம் ஆகும். இது கடந்த 1999ம் ஆண்டில் இருந்து இப்போட்டியை நடத்தி வருகின்றது. இந்த போட்டியில் இந்தியர்கள் பலர் இதற்கு முன்பாக பல விலையுயர்ந்த பரிசைத் தட்டிச் சென்றிருக்கின்றனர். இந்த வரிசையில் தற்போது கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டு ஷிபு இடம்பிடித்திருக்கின்றார்.
இந்நிறுவனம், இங்கிலாந்தில் மட்டுமின்றி அரபு போன்ற நாடுகளிலும் இப்போட்டியை நடத்தி வருகின்றது. அங்கும் ஒரு சில இந்தியர்கள் அதன் பரிசுகளை வென்றிருக்கின்றனர். இது பலரின் வாழ்க்கையை ஓர் நிறுவனமாக இருந்து வருகின்றது. உருஸ் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
குறிப்பாக, திரை நட்சத்திரங்கள் இக்காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இக்கார், இந்தியாவில் ரூ. 3.1 கோடி மதிப்பில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதுவே, ஆன்-ரோடு மதிப்பில் வாங்கினால் அதன் விலை ரூ. 4 கோடியைத் தொட்டுவிடும்.
-
மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்
-
திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
-
டாடா மோட்டார்ஸை இந்த விஷயத்தில் யாராலும் சமாளிக்க முடியல!! விற்பனையில் நம்பர் 1, 2 இடங்களில் டாடா தான்!