Just In
- 10 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 15 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...
இங்கிலாந்து நாட்டில் அண்மையில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு ஜாக்பாட் அடித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிபு பவுல் (Shibu Paul). 32 வயது நிரம்பிய இவர் சவுண்ட் இன்ஜினியர் ஆவார். இவர் தற்போது அவரது மனைவியுடன் இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகின்றார். இவர்கள் இருவருமே கடந்த வருடம்தான் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர்.
ஷிபுவின் மனைவி லின்னெட் ஜோசப் (28) இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் சிட்டி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர். ஆனால், ஷிபு பவுலுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவர் இங்கிலாந்தில் வேலை தேடி வந்துக் கொண்டிருந்திருக்கின்றார்.
தற்போது கொரோனா வைரஸ் பதற்றம் இங்கிலாந்திலும் நீடித்து வருகிறது. இதனால்தான் ஷிபு நீண்ட நாட்களாக தேடியும் வேலை கிடைக்காத சூழலே நிலவி வருகின்றது. அதேசமயம், விடா முயற்சியாக இணையத்தின் வாயிலாக பல்வேறு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பணிக்காக அவர் விண்ணப்பித்து வருகின்றார்.
இந்நிலையில்தான் ஷிபுவிற்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் கார் பரிசாக கிடைத்துள்ளது. இதனை, பிஓடிபி (Best of the Best) எனும் அமைப்பே அவருக்கு வழங்கியிருக்கின்றது. இது அண்மையில் லக்கி டிராவ் நிகழ்வினை விமான நிலையம் மற்றும் ஆன்லைன் வாயிலாக நிகழ்த்தியது. இதில், ஷிபு பவுல் கலந்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இந்தநிலையிலேயே ஷிபு தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி உருஸ் காரைப் பெற்றிருக்கின்றார். இந்த காருடன் அந்நாட்டு மதிப்பில் 20,000 யூரோக்கள் ஷிபுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 17 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது தோராயமாக வழங்கப்பட்டுள்ள மதிப்பாகும்.
காரை ஷிபுவின் கையில் கொடுத்த பின்னரும் அவர் அதை நம்பவே இல்லை. பல முறைய நெறியாளர்களிடம் உண்மையாக இந்த கார் எனக்குதானா என பல முறைக் கேட்பதை வீடியோவில் நம்மால் காண முடிகின்றது. ஆரம்பத்தில் பிஓடிபி குழுவினர், உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்து இருக்கு என கூறியதில் இருந்து, காரை ஒப்படைத்தது வரை, ஷிபு பரவசத்துடனே காணப்பட்டார்.
ஷிபு-லின்னெட் தம்பதியினர் இதற்கு முன்பு வரை மிகவும் வழக்கமான கார்களில் ஒன்ரான டொயோட்டா யாரிஸ் காரையே பயன்படுத்தி வந்தனர். இனி இவர்களின் பயணம் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரிலேயே இருக்கும். இது ஒரு மிகப்பெரிய அப்கிரேஷன் ஆகும். இந்த கார் பல இளைஞர்களின் கனவு வாகனமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தான் பிஓடிபி ஷிபுவிற்கு பரிசாக வழங்கியுள்ளது.
பிஓடிபி ஓர் கார் மற்றும் லைஃப் ஸ்டைல் குறித்த போட்டிகளை நிகழ்த்தி வரும் இங்கிலாந்து நிறுவனம் ஆகும். இது கடந்த 1999ம் ஆண்டில் இருந்து இப்போட்டியை நடத்தி வருகின்றது. இந்த போட்டியில் இந்தியர்கள் பலர் இதற்கு முன்பாக பல விலையுயர்ந்த பரிசைத் தட்டிச் சென்றிருக்கின்றனர். இந்த வரிசையில் தற்போது கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டு ஷிபு இடம்பிடித்திருக்கின்றார்.
இந்நிறுவனம், இங்கிலாந்தில் மட்டுமின்றி அரபு போன்ற நாடுகளிலும் இப்போட்டியை நடத்தி வருகின்றது. அங்கும் ஒரு சில இந்தியர்கள் அதன் பரிசுகளை வென்றிருக்கின்றனர். இது பலரின் வாழ்க்கையை ஓர் நிறுவனமாக இருந்து வருகின்றது. உருஸ் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
குறிப்பாக, திரை நட்சத்திரங்கள் இக்காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இக்கார், இந்தியாவில் ரூ. 3.1 கோடி மதிப்பில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதுவே, ஆன்-ரோடு மதிப்பில் வாங்கினால் அதன் விலை ரூ. 4 கோடியைத் தொட்டுவிடும்.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்