Just In
- just now 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- 1 hr ago இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- 2 hrs ago சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- 8 hrs ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...
இங்கிலாந்து நாட்டில் அண்மையில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு ஜாக்பாட் அடித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிபு பவுல் (Shibu Paul). 32 வயது நிரம்பிய இவர் சவுண்ட் இன்ஜினியர் ஆவார். இவர் தற்போது அவரது மனைவியுடன் இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகின்றார். இவர்கள் இருவருமே கடந்த வருடம்தான் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர்.
ஷிபுவின் மனைவி லின்னெட் ஜோசப் (28) இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் சிட்டி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர். ஆனால், ஷிபு பவுலுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவர் இங்கிலாந்தில் வேலை தேடி வந்துக் கொண்டிருந்திருக்கின்றார்.
தற்போது கொரோனா வைரஸ் பதற்றம் இங்கிலாந்திலும் நீடித்து வருகிறது. இதனால்தான் ஷிபு நீண்ட நாட்களாக தேடியும் வேலை கிடைக்காத சூழலே நிலவி வருகின்றது. அதேசமயம், விடா முயற்சியாக இணையத்தின் வாயிலாக பல்வேறு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பணிக்காக அவர் விண்ணப்பித்து வருகின்றார்.
இந்நிலையில்தான் ஷிபுவிற்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் கார் பரிசாக கிடைத்துள்ளது. இதனை, பிஓடிபி (Best of the Best) எனும் அமைப்பே அவருக்கு வழங்கியிருக்கின்றது. இது அண்மையில் லக்கி டிராவ் நிகழ்வினை விமான நிலையம் மற்றும் ஆன்லைன் வாயிலாக நிகழ்த்தியது. இதில், ஷிபு பவுல் கலந்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இந்தநிலையிலேயே ஷிபு தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி உருஸ் காரைப் பெற்றிருக்கின்றார். இந்த காருடன் அந்நாட்டு மதிப்பில் 20,000 யூரோக்கள் ஷிபுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 17 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது தோராயமாக வழங்கப்பட்டுள்ள மதிப்பாகும்.
காரை ஷிபுவின் கையில் கொடுத்த பின்னரும் அவர் அதை நம்பவே இல்லை. பல முறைய நெறியாளர்களிடம் உண்மையாக இந்த கார் எனக்குதானா என பல முறைக் கேட்பதை வீடியோவில் நம்மால் காண முடிகின்றது. ஆரம்பத்தில் பிஓடிபி குழுவினர், உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்து இருக்கு என கூறியதில் இருந்து, காரை ஒப்படைத்தது வரை, ஷிபு பரவசத்துடனே காணப்பட்டார்.
ஷிபு-லின்னெட் தம்பதியினர் இதற்கு முன்பு வரை மிகவும் வழக்கமான கார்களில் ஒன்ரான டொயோட்டா யாரிஸ் காரையே பயன்படுத்தி வந்தனர். இனி இவர்களின் பயணம் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரிலேயே இருக்கும். இது ஒரு மிகப்பெரிய அப்கிரேஷன் ஆகும். இந்த கார் பல இளைஞர்களின் கனவு வாகனமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தான் பிஓடிபி ஷிபுவிற்கு பரிசாக வழங்கியுள்ளது.
பிஓடிபி ஓர் கார் மற்றும் லைஃப் ஸ்டைல் குறித்த போட்டிகளை நிகழ்த்தி வரும் இங்கிலாந்து நிறுவனம் ஆகும். இது கடந்த 1999ம் ஆண்டில் இருந்து இப்போட்டியை நடத்தி வருகின்றது. இந்த போட்டியில் இந்தியர்கள் பலர் இதற்கு முன்பாக பல விலையுயர்ந்த பரிசைத் தட்டிச் சென்றிருக்கின்றனர். இந்த வரிசையில் தற்போது கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டு ஷிபு இடம்பிடித்திருக்கின்றார்.
இந்நிறுவனம், இங்கிலாந்தில் மட்டுமின்றி அரபு போன்ற நாடுகளிலும் இப்போட்டியை நடத்தி வருகின்றது. அங்கும் ஒரு சில இந்தியர்கள் அதன் பரிசுகளை வென்றிருக்கின்றனர். இது பலரின் வாழ்க்கையை ஓர் நிறுவனமாக இருந்து வருகின்றது. உருஸ் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
குறிப்பாக, திரை நட்சத்திரங்கள் இக்காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இக்கார், இந்தியாவில் ரூ. 3.1 கோடி மதிப்பில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதுவே, ஆன்-ரோடு மதிப்பில் வாங்கினால் அதன் விலை ரூ. 4 கோடியைத் தொட்டுவிடும்.
-
டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
-
சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா