Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 7 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 7 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 10 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...
இங்கிலாந்து நாட்டில் அண்மையில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு ஜாக்பாட் அடித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிபு பவுல் (Shibu Paul). 32 வயது நிரம்பிய இவர் சவுண்ட் இன்ஜினியர் ஆவார். இவர் தற்போது அவரது மனைவியுடன் இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகின்றார். இவர்கள் இருவருமே கடந்த வருடம்தான் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர்.
ஷிபுவின் மனைவி லின்னெட் ஜோசப் (28) இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் சிட்டி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர். ஆனால், ஷிபு பவுலுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவர் இங்கிலாந்தில் வேலை தேடி வந்துக் கொண்டிருந்திருக்கின்றார்.
தற்போது கொரோனா வைரஸ் பதற்றம் இங்கிலாந்திலும் நீடித்து வருகிறது. இதனால்தான் ஷிபு நீண்ட நாட்களாக தேடியும் வேலை கிடைக்காத சூழலே நிலவி வருகின்றது. அதேசமயம், விடா முயற்சியாக இணையத்தின் வாயிலாக பல்வேறு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பணிக்காக அவர் விண்ணப்பித்து வருகின்றார்.
இந்நிலையில்தான் ஷிபுவிற்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் கார் பரிசாக கிடைத்துள்ளது. இதனை, பிஓடிபி (Best of the Best) எனும் அமைப்பே அவருக்கு வழங்கியிருக்கின்றது. இது அண்மையில் லக்கி டிராவ் நிகழ்வினை விமான நிலையம் மற்றும் ஆன்லைன் வாயிலாக நிகழ்த்தியது. இதில், ஷிபு பவுல் கலந்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இந்தநிலையிலேயே ஷிபு தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி உருஸ் காரைப் பெற்றிருக்கின்றார். இந்த காருடன் அந்நாட்டு மதிப்பில் 20,000 யூரோக்கள் ஷிபுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 17 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது தோராயமாக வழங்கப்பட்டுள்ள மதிப்பாகும்.
காரை ஷிபுவின் கையில் கொடுத்த பின்னரும் அவர் அதை நம்பவே இல்லை. பல முறைய நெறியாளர்களிடம் உண்மையாக இந்த கார் எனக்குதானா என பல முறைக் கேட்பதை வீடியோவில் நம்மால் காண முடிகின்றது. ஆரம்பத்தில் பிஓடிபி குழுவினர், உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்து இருக்கு என கூறியதில் இருந்து, காரை ஒப்படைத்தது வரை, ஷிபு பரவசத்துடனே காணப்பட்டார்.
ஷிபு-லின்னெட் தம்பதியினர் இதற்கு முன்பு வரை மிகவும் வழக்கமான கார்களில் ஒன்ரான டொயோட்டா யாரிஸ் காரையே பயன்படுத்தி வந்தனர். இனி இவர்களின் பயணம் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரிலேயே இருக்கும். இது ஒரு மிகப்பெரிய அப்கிரேஷன் ஆகும். இந்த கார் பல இளைஞர்களின் கனவு வாகனமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தான் பிஓடிபி ஷிபுவிற்கு பரிசாக வழங்கியுள்ளது.
பிஓடிபி ஓர் கார் மற்றும் லைஃப் ஸ்டைல் குறித்த போட்டிகளை நிகழ்த்தி வரும் இங்கிலாந்து நிறுவனம் ஆகும். இது கடந்த 1999ம் ஆண்டில் இருந்து இப்போட்டியை நடத்தி வருகின்றது. இந்த போட்டியில் இந்தியர்கள் பலர் இதற்கு முன்பாக பல விலையுயர்ந்த பரிசைத் தட்டிச் சென்றிருக்கின்றனர். இந்த வரிசையில் தற்போது கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டு ஷிபு இடம்பிடித்திருக்கின்றார்.
இந்நிறுவனம், இங்கிலாந்தில் மட்டுமின்றி அரபு போன்ற நாடுகளிலும் இப்போட்டியை நடத்தி வருகின்றது. அங்கும் ஒரு சில இந்தியர்கள் அதன் பரிசுகளை வென்றிருக்கின்றனர். இது பலரின் வாழ்க்கையை ஓர் நிறுவனமாக இருந்து வருகின்றது. உருஸ் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
குறிப்பாக, திரை நட்சத்திரங்கள் இக்காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இக்கார், இந்தியாவில் ரூ. 3.1 கோடி மதிப்பில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதுவே, ஆன்-ரோடு மதிப்பில் வாங்கினால் அதன் விலை ரூ. 4 கோடியைத் தொட்டுவிடும்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!