Just In
- 1 hr ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- 2 hrs ago தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- 3 hrs ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 3 hrs ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவிகரம் நீட்டியது கியா மோட்டார்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உதவிக்கரம் நீட்டி உள்ளது கியா மோட்டார் நிறுவனம். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வாகன நிறுவனங்கள் பெரிய அளவிலான உதவிகளை செய்யத் துவங்கி இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. பெருமளவு நிதி உதவிகளை வழங்குவது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பதுடன், மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அதன்படி, ஆந்திர மாநில முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.2 கோடியை வழங்கி இருக்கிறது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ரூ.2 கோடிக்கான காசோலையை கியா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூகின் ஷிம் நேரில் சந்தித்து வழங்கினார்.
மருத்துவ உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த நிதி உதவி பயன்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல உதவித் திட்டங்களையும் அறிவித்துள்ளது. அதன்படி, இலவச சர்வீஸ் திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான கூடுதல் கால அவகாசத்தை வழங்கி இருக்கிறது.
தனது கார் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் உதவிகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளிலும் கியா மோட்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மேலும், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கியா மோட்டார் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, கியா மோட்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக செயல்படும் ஹூண்டாய் மோட்டார்ஸ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. முக கவசங்களை இறக்குமதி செய்து மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
நடிகர் தனுஷை வைத்து படம் எடுத்தவர் இன்று விலையுயர்ந்த காரில்!! ஷோரூமுக்கு குடும்பத்துடன் போய்ட்டாரு!