Just In
- 1 hr ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 3 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 5 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 8 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News எதிர் எதிர் துருவம்.. சர்ப்ரைஸ் மீட்டிங்.. நேருக்கு நேர் சந்தித்து அளவளாவிய தமிழிசை - பிரேமலதா!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவிகரம் நீட்டியது கியா மோட்டார்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உதவிக்கரம் நீட்டி உள்ளது கியா மோட்டார் நிறுவனம். இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வாகன நிறுவனங்கள் பெரிய அளவிலான உதவிகளை செய்யத் துவங்கி இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. பெருமளவு நிதி உதவிகளை வழங்குவது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு இருப்பதுடன், மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில், தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. அதன்படி, ஆந்திர மாநில முதல்வரின் நிவாரண நிதிக்காக ரூ.2 கோடியை வழங்கி இருக்கிறது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ரூ.2 கோடிக்கான காசோலையை கியா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கூகின் ஷிம் நேரில் சந்தித்து வழங்கினார்.
மருத்துவ உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த நிதி உதவி பயன்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், தனது வாடிக்கையாளர்களுக்கு தேவையான பல உதவித் திட்டங்களையும் அறிவித்துள்ளது. அதன்படி, இலவச சர்வீஸ் திட்டத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்கான கூடுதல் கால அவகாசத்தை வழங்கி இருக்கிறது.
தனது கார் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் உதவிகளை அறிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளிலும் கியா மோட்டார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
மேலும், கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரசு மற்றும் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கியா மோட்டார் தெரிவித்துள்ளது.
இதேபோன்று, கியா மோட்டார் நிறுவனத்தின் தாய் நிறுவனமாக செயல்படும் ஹூண்டாய் மோட்டார்ஸ் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. முக கவசங்களை இறக்குமதி செய்து மருத்துவப் பணியாளர்களுக்கு வழங்குவதற்கான முயற்சிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.