Just In
- 37 min ago இந்தியாவே காத்துகிடந்த 4 சூப்பர் பைக்குகளை அறிமுகம் செய்த அப்ரில்லா! பிராண்ட் அம்பாஸிட்டரான ஹிந்தி நடிகர்!
- 1 hr ago வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
- 2 hrs ago ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
- 7 hrs ago கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
Don't Miss!
- Finance ஆதார் கார்டு மோசடி.. சிக்குனா "சிக்கன்" ஆகிடுவீங்க!
- Lifestyle ராம நவமி 2024 ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் சிறப்பு என்ன தெரியுமா?
- News சென்னையில் லிஸ்ட் போட்டு பாஜகவே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தாக்கிய நிர்மலா சீதாராமனின் கணவர்!
- Sports IPL 2024 : ஐபிஎல் தொடரில் எந்த ஆல் - ரவுண்டரும் செய்யாத சாதனையை செய்த சுனில் நரைன்
- Movies அடக்கடவுளே.. எம்ஜிஆரை தொட முயற்சி செய்து அடி வாங்கியிருக்கேன்.. ராமராஜன் சொன்ன பகீர் தகவல்!
- Technology மிரட்டிவிட்டாப்ல மோட்டோ.. பட்ஜெட்ல pOLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 12GB ரேம்.. QUAD ஷூட்டர்.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
சபாஷ்... தங்கு தடையில்லாமல் புதிய கார்களை டெலிவிரி கொடுக்க கியா எடுத்த துணிச்சலான முடிவு!
கொரோனா பிரச்னை ஒரு புறம் இருந்து வரும், இந்தியர்களுக்கு தங்கு தடையில்லாமல் தனது புதிய கார்களை டெலிவிரி கொடுப்பதற்காக துணிச்சலான முடிவு ஒன்றை கியா மோட்டார் நிறுவனம் எடுத்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் தென்கொரியாவை கியா மோட்டார் நிறுவனம் இந்திய கார் வாடிக்கையாளர்களின் மனதில் வெகு சீக்கிரத்தில் இடம்பிடித்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டது.
அந்நிறுவனத்தின் முதல் கார் மாடலாக வந்த செல்டோஸ் எஸ்யூவிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதுடன் இந்தியாவின் சூப்பர் ஹிட் மாடலாக மாறி இருக்கிறது. இதைத்தொடர்ந்து கார்னிவல் என்ற பிரிமீயம் எம்பிவி கார் மாடலையும் கொண்டு வந்தது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
கியா கார்னிவல் எம்பிவி காருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த உற்சாகத்துடன் அடுத்த சில மாதங்களில் மூன்றாவது மாடலாக சொனெட் என்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க உள்ளது. செல்டோஸ் காரைவிடை விலை குறைவான தேர்வாக இருக்கும் என்பதால், இப்போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அடுத்து எர்டிகா காருக்கு போட்டியாக புதிய எம்பிவி கார் மாடலையும் கொண்டு வருவதற்கான திட்டத்தை கையில் வைத்துள்ளது கியா மோட்டார். இந்த நிலையில், கியா கார்கள் மீதான ஈர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், அந்நிறுவனத்தின் செல்டோஸ், கார்னிவல் காருக்கு காத்திருப்பு காலம் அதிகரித்து வருகிறது.
கியா நிறுவனத்தின் கார் ஆலை ஆந்திர மாநிலம், அனந்த்பூரில் அமைந்துள்ளது. கொரோனா பிரச்னை காரணமாக, கார் உற்பத்திப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அண்மையில்தான் மீண்டும் துவங்கி இருக்கிறது. மேலும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான பாதுகாப்பு விதிகள் கடைபிடிக்கப்படுவதால், உற்பத்தி முழு அளவில் நடக்கவில்லை.
கார் உற்பத்தி முழு அளவை எடுத்துவதற்கு ஓரிரு மாதங்கள் ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், செல்டோஸ், கார்னிவல் கார்களுக்கான காத்திருப்பு காலம் அதிகரிக்கும். அத்துடன், அடுத்த சில மாதங்களில் சந்தைக்கு கொண்டு வரப்பட இருக்கும் சொனெட் எஸ்யூவியின் உற்பத்தியும் சேர்ந்தால், பல மாதங்கள் காத்திருப்பு காலம் நீளும் நிலை ஏற்படும்.
இதனை மனதில் வைத்து, அனந்த்பூர் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு கியா மோட்டார் திட்டமிட்டுள்ளது. கொரோனாவால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், பல கார் நிறுவனங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை ஒத்திப்போட்டு வருகின்றன.
ஆனால், கியா மோட்டார் நிறுவனம் துணிச்சலாக ஆலை விரிவாக்கத் திட்டத்தை கையில் எடுத்து முதலீடு செய்ய இருக்கிறது. தற்போது கியா கார் நிறுவனத்தின் அனந்த்பூர் ஆலையில் ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.
இதனை மேலும் அதிகரிக்கும் விதமாக, அனந்த்பூர் ஆலையில் ரூ.400 கோடி அளவுக்கு புதிதாக முதலீடு செய்ய இருப்பதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கியா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த புதிய முதலீடு மூலமாக நூற்றுக்கணக்கானோருக்கு நேரடியாகவும், மறைமுறைகமாகவும் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, 2,400 பேருக்கு கியா மோட்டார் நிறுவனம் பயிற்சி அளித்திருப்பதுடன், அதில் 1,589 பேர் கியா நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். உதிரிபாகங்கள் சப்ளையர்கள் மூலமாக 14,000 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
இந்த காரை வாங்க ஏகப்பட்ட பேர் லைன் நின்னாங்க! ஆனா இன்னிக்கு 100 பேர் கூட இதை வாங்கல, ஏன் தெரியுமா?
-
இனி மூக்கை மூடிக்கிட்டே கழிவறைக்கு செல்ல வேண்டாம்! வருகிறது புது டெக்னாலஜி!
-
பெட்ரோல் பைக்கிற்கு பதிலாக எலக்ட்ரிக் பைக்கை வாங்க எத்தனை பேர் ரெடி? மார்க்கெட்டில் சேல்ஸில் இருக்கும் பைக்ஸ்!