Just In
- 6 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 6 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 8 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 9 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கேரள மாநிலத்தில் மின்சார ஆட்டோக்களுக்கு வந்த சோதனைய பாருங்க... இப்படிகூட நடக்குமா? பாவம் அந்த டிரைவருங்க!
மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்ற வேலையில் கேரள மாநிலத்தில் விநோத சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.
உலகம் முழுவதிலம் மின்சார வாகன பயன்பாடு ஊக்குவிக்கப்பட்ட வருகின்றது. இந்தியாவிலும் மக்களை மின் வாகன பயன்பாட்டின் ஈர்க்கும் முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, ஒரு சில மாநிலங்கள் சிறப்பு மானியம் மற்றும் வரிச் சலுகைகளை வழங்கி வருகின்றன.
இம்மாதிரியான சூழ்நிலையில் குறிப்பிட்ட நகரத்தில் மின்சார வாகனங்களை இயக்குவதற்கு தடை ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலேயே இந்த முரண்பாடான நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. எலெக்ட்ரிக் ஆட்டோரிக்ஷாக்களே இந்த சிக்கலில் சிக்கியிருக்கின்றன.
கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 167 இ-ஆட்டோரிக்ஷாக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் 63 வாகனங்கள் ஆட்டோக்கள் மாவட்டத்தின் கார்பரேஷன் எல்லைக்குள் இயங்குகின்றன. இவர்களுக்கான ஆட்டோ ஸ்டாண்ட் ஒதுக்குவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் பல முறை ஆட்டோ ஸ்டாண்டிற்கான கோரிக்கையை முன் வைத்தும் அது நிராகரிக்கப்பட்டிருப்பதாக மாத்ருபூமி செய்தி தளம் வெளியிட்டுள்ளது.
இதுதவிர, வழக்கமான ஆட்டோக்களை இயக்கும் டிரைவர்கள் சிலர் பொது இடங்களில் இ-ஆட்டோக்களை நிறுத்தி வைத்திருந்தால், அங்கு ஆட்டோக்களை நிறுத்தக்கூடாது என விரட்டுவதாகவும் கூறப்படுகின்றது. இதனால், அறிவிக்கப்படாத தடையை தாங்கள் சந்தித்து வருவதாக கோழிக்கோடு பகுதியில் இருக்கும் மின்சார ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.
ஒரு பக்கம் அரசு சார்பில் பழைய ஆட்டோக்களை பயன்பாட்டில் இருந்து அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மறுபக்கம் இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற தடைகள் மின்சார ஆட்டோ ஓட்டுநர்களை ஒதுக்கி வைக்கின்றன. இதனால் அனைத்து தரப்பிலும் அவர்கள் இன்னல்களைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.
குறிப்பாக, கோழிக்கோடு பகுதியில் சவாரி செய்ய முடியாமல் அவர்களின் பொருளாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்த பிரச்னை கடந்த சில மாதங்களாகவே நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கேரள மாநிலத்தில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்திருப்பதால், தேர்தல் முடிவிற்கு பின்னரே சுமூகமான தீர்வு எட்டப்படும் என தெரிகின்றது.
"தற்போது கோழிக்கோடு நகரத்தில் 4 ஆயிரத்திற்கும் ஆட்டோக்கள் பயன்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. இவற்றில் தற்போது 400 ஆட்டோக்கள் நிறுத்துவதற்கே ஸ்டாண்ட்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் புதிய ஆட்டோக்கள் சேருமானால் ஏற்கனவே இருக்கும் ஆட்டோக்கள் வெளியேறும் நிலை உருவாகும். இதனால், அவர்களும் பாதிக்கப்படுவார்கள்" என நகரத்தின் ஆட்டோரிக்ஷா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கூறியிருக்கின்றார்.
குறிப்பு: புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?