Just In
- 3 min ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- 3 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
Don't Miss!
- Movies Pa Vijay: ஒரேயொரு சூரியன் மாதிரி.. ஒரேயொரு அப்படிபோடு பாடல்.. பா. விஜய் உற்சாகம்!
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு நோயாளியாலும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!
கொரோனா நோயாளிகளை தேடி தேடிக் கண்டுபிடிக்கும் பேருந்துகளை களத்தில் இறக்கியிருக்கின்றது கர்நாடகா அரசு. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் அறிவிக்கப்படாத போரைத் தொடுத்து வருகின்றன. ஒரு பக்கம் இந்த வைரசுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும், மறு பக்கம் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவலும் ஒரு சேர பரவிக் கொண்டிருக்கின்றன. எனவே, இதில் எதை நம்புவது என மக்கள் குழம்பி தவித்து வருகின்றனர்.
அதேசமயம், வைரஸ் பாதிப்பு முந்தையக் காலங்களைக் காட்டிலும் தற்போது அதி வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அதிலும், கடந்த இரு வாரங்களில் கொரோனா வைரஸ் பரவிய வேகம், காட்டு தீ பரவும் வேகத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கின்றது. இதனால், நாடும், நாட்டு மக்களும் கடும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.
மேலும், முந்தையக் காலங்களைக் காட்டிலும் தொற்று விகிதம் அதிகரித்திருப்பதன் காரணத்தால் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அதேசமயம், மருத்துவ கருவிகள் மட்டுமின்றி மருத்துவமனைப் பற்றாக்குறையும் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது.
எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாற்றி யோசிக்கும் விதமாக அந்தந்த மாநில அரசுகள் தன்னிச்சையாக சில தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் உருவாக்கப்பட்டதுதான் ரயில் பெட்டி தனி மருத்துவமனை வார்டு மற்றும் பேருந்து மருத்துவமனை உள்ளிட்டவை.
அதாவது, பொது போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்டு பேருந்துகளை தற்காலிக மருத்துவமனைகளாக அந்தந்த மாநில அரசுகள் தொடங்கியிருக்கின்றன. இந்திய ரயில்வேத்துறை தனது ரயில் பெட்டிகளை தற்காலிக மருத்துவமனை மற்றும் வார்டுகளாக மாற்றியதன் பின்னர் இந்த நடவடிக்கையில் ஒரு மாநில அரசுகள் இறங்கியிருக்கின்றன.
சீனாவைப் போல் இந்தியா வளர்ந்த நாடு அல்லாத காரணத்தல் இங்கு குறைந்த நாட்களில் கொரோனாவிற்காக தனி மருத்துவமனை கட்ட முடியாத நிலை இருக்கின்றது. அதேசமயம், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தற்காலிக மருத்துவமனை உருவாக்குவற்கான சாத்திய கூறுகளும் இல்லை.
இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டுமே இம்மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
ஆனால் இப்போது தென் மாநிலங்களிலும் இந்த தனித்துவமான முயற்சிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், முன்னதாக கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநில அரசுகள் பேருந்துகளை தற்காலிக மருத்துவமனைகளாகவும், கோவிட்-19 பரிசோதனை மையங்களாகவும் மாற்றின.
இதைத்தொடர்ந்து, இதே முயற்சியை தற்போது கர்நாடக அரசும் மேற்கொண்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலை ஆங்கில செய்தி தளம் ஈடி ஆட்டோ வெளியிட்டுள்ளது.
அது வெளியிட்டுள்ள தகவலின்படி, கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி போக்குவரத்துகழக பேருந்துகள், காய்ச்சல் மற்றும் கோவிட்-19 பற்றிய ஆய்வுகளை செய்யும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றியமைத்திருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த பேருந்துகள் அம்மாநிலத்தின் கொரோனா தொற்று அதிகம் காணப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அங்கு அனைத்துவிதமான, அதாவது லேசானா காய்ச்சல் இருப்பதாக கருதப்படுபவர்களின் மாதிரிகளும்கூட சேகரிக்கப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட இருக்கின்றது.
இந்த சிறப்பு மாற்றியமைக்கப்பட்ட பேருந்து மருத்துவமனைகளை அம்மாநில முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா, மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார். இவை ஏற்கனவே களத்தில் இருக்கும் மருத்துவமனைகளுடன் இணைந்து கோவிட்-19 வைரஸ் மாநிலத்தில் பரவாமல் தடுக்கும் பணியை மேற்கொள்ள இருக்கின்றது.
இந்த பேருந்தில் தனி வார்டு மற்றும் சிகிச்சை வழங்குவதற்கான தனியறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு மருத்துவர், மூன்று செவிலியர்கள் மற்றும் ஒரு லேப் டெக்னீசியன் ஆகியோர் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
இதுதவிர, தன்னார்வலர்களையும் இந்த சிறப்பு பணியில் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள், பேருந்து மருத்துமனைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியிடன் நிற்க வைத்தல் மற்றும் சிகிச்சைக்காக உள் நுழைந்த உடன் கடைப்பிடிக்க வேண்டியவை உள்ளிட்டவற்றைப் பற்றிய அறிவுரைகளை வழங்குவர்.