Just In
- 46 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Movies நீங்கள் என் படத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. ஹரியிடம் ஓபனாக சொன்ன கமல் ஹாசன்
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
முதல் வலது-கை ட்ரைவ் சந்தையாக புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரை பெறும் இந்தியா!! அறிமுக தேதி அறிவிப்பு!
புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் காரின் இந்திய அறிமுகம் தகவல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது. அதனை பற்றியும் இந்த பிஎம்டபிள்யூ காரை பற்றியும் இந்த செய்தியில் பார்ப்போம்.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரிஸ் க்ரான் கூபே காரின் நீண்ட-வீல்பேஸ் வெர்சனாக வெளிவரும் இந்த புதிய கார் இந்திய சந்தையில் வருகிற 2021 ஜனவரி 21ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் இந்தியா 3 சீரிஸ் வரிசையில் நீண்ட-வீல்பேஸ் வெர்சன் காரை பெறும் முதல் வலது-கை ட்ரைவிங் கொண்ட சந்தையாக விளங்கவுள்ளது.
110மிமீ-ல் நீண்ட வீல்பேஸ் மட்டுமில்லாமல் மொத்த பரிமாண அளவுகளில் வழக்கமான 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் காரை விட 120மிமீ நீளமானதாகவும் சற்று உயரமானதாகவும் இந்த புதிய கார் வடிவமைக்கப்படுகிறது. மற்றப்படி தோற்றத்தில் இரண்டிற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது.
உட்புறத்திலும் அதேதான் ஓட்டுனருக்கும் முன் இருக்கை பயணிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் தெரியாது. ஆனால் பின் வரிசை இருக்கைகளில் அமரும் பயணிகள் சில மாற்றத்தை உணர்வார்கள். அதாவது கால்களை நன்கு மடக்கி நீட்ட கூடுதலாக இடம் இருக்கும்.
ஏனெனில் இந்த பகுதி இந்த புதிய பிஎம்டபிள்யூ காரில் 43மிமீ பெரியதாக்கப்பட்டுள்ளது. அதேபோல் நன்கு குஷின் வைக்கப்பட்ட இருக்கையில், எளிமையாக கண்ட்ரோல் செய்யும் விதத்திலான கதவுகள் வழியாக பின் இருக்கை பயணிகள் அமர்வார்கள்.
மற்றப்படி எல்இடி ஹெட்லைட்கள் & டெயில்லைட்கள், பனோராமிக் சன்ரூஃப், கேபினை சுற்றிலும் விளக்குகள், பல நிலைகளை கொண்ட க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், 8.8 இன்ச்சில் பிஎம்டபிள்யூவின் ஐட்ரைவ் இன்ஃபோடெயின்மெண்ட் தொடுத்திரை போன்றவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.
அதேபோல் வழங்கப்படும் 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் (258எச்பி) மற்றும் 2.0 லிட்டர் டர்போ-டீசல் (190எச்பி) என்ஜின் தேர்வுகளிலும் எந்த மாற்றமும் இருக்காது. பரிமாண அளவுகளை பொறுத்த வரையில், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்திய லைன்-அப்பில் 3 சீரிஸ் மற்றும் 5 சீரிஸ் மாடல்களுக்கு நடுவில் 3-சீரிஸ் கரான் லிமௌசைன் கார் நிலைநிறுத்தப்படவுள்ளது.
ரூ.42.30 லட்சத்தில் இருந்து ரூ.49.30 லட்சம் வரையிலான விலைகளுடன் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த பிஎம்டபிள்யூ செடான் காருக்கு விற்பனையில் டஃப் கொடுக்கக்கூடியவைகளாக மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ் மற்றும் ஜாகுவார் எக்ஸ்இ கார்கள் தற்சமயம் நம் நாட்டில் விற்பனையில் உள்ளன.
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!