Just In
- 8 min ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 55 min ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 1 hr ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
- 2 hrs ago ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
Don't Miss!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
விரைவில் இந்தியாவில் இருந்து விடைபெறும் பிரபல கார்கள்... என்ன இந்த காருமா லிஸ்ட்ல இருக்கு..?
இந்தியாவை விட்டு விடைபெற்ற பிஎஸ்4 கார்களைப் பற்றிய தகவலை இந்த தொகுப்பில் காணலாம்.
இந்தியாவின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக மாசுறுதல் மாறியிருக்கின்றது. குறிப்பாக, காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இதற்கு தினம்தோறும் புதிய எண்ணிக்கையைப் பெற்று வரும் வாகனங்களின் அடர்த்தியும், அதில் இருந்து வெளிவரும் நச்சு கலந்த புகையே முக்கிய காரணமாக இருக்கின்றது.
இதனைக் கருத்தில் கொண்ட மத்திய அரசு மாசுபாட்டினைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில், காற்று மாசுப்பட்டினைக் கட்டுபடுத்துவதற்காக புதிய பிஎஸ்-6 தர உமிழ்வு அறிமுகம் செய்யப்பட்டது. இது, பிஎஸ்-4 எஞ்ஜினுடைய வாகனங்களைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவு மாசையே வெளிப்படுத்தும்.
ஆகையால், இதனை கட்டாயம் நாடு முழுவதும் அமலுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதை மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் பிஎஸ்-6 வாகனங்களை தயாரிக்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கு காலக்கெடு ஏப்ரல் 1ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இம்மாதம் இறுதி (மார்ச் 31) வரை மட்டுமே வாகன உற்பத்தி நிறுவனங்களால் பிஎஸ்-4 தரத்திலான எஞ்ஜினைக் கொண்ட வாகனங்களை விற்பனைச் செய்ய முடியும். இதன் பின்னர், அவர்களால் பிஎஸ்-6க்கு கீழுள்ள எந்தவொரு வாகனத்தையும் விற்க முடியாது.
இதன் காரணமாக ஏற்கனவே பல்வேறு பிரபல வாகனங்கள் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டுவிட்டன. இதில், அதிகபட்சம் சிறிய மற்றும் டீசல் எஞ்ஜின்களே வெளியேறியிருக்கின்றன.
பிஎஸ்-6 தரத்திற்கு டீசல் எஞ்ஜினை உயர்த்துவது அதிக செலவீணத்தை ஏற்படுத்தும். இது, தற்போது குறைந்த விலையில் காணப்படும் டீசல் எஞ்ஜின் வாகனங்களைக்காட்டிலும் மிக மிக உயர்ந்த விலையைக் கொண்ட மாடலாக மாற்றிவிடும். ஆகையால், டீசல் வாகனங்களை அணுகும் நுகர்வோர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும்.
எனவே, பிஎஸ்-6 தரத்திற்கு டீசல் எஞ்ஜினை உயர்த்துவது மிகப்பெரிய நஷ்டத்திற்கு வழி வகுக்கும் என எண்ணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவற்றை சந்தையை விட்டு வெளியேற்றி வருகின்றன.
விரைவில் இந்தியாவில் இருந்து விடைபெறும் பிரபல கார்கள்... என்ன இந்த காருமா லிஸ்ட்ல இருக்கு..?
மாருதி சுசுகி பலினோ ஆர்எஸ்
மாருதி சுசுகி நிறுனத்தின் பிரபல கார்களில் பலினோ மாடலும் ஒன்று. இந்த பிராண்டில் விற்பனையாகும் ஆர்எஸ் என்ற மாடலை மாருதி சுசுகி சந்தையை விட்டு வெளியேற்ற இருக்கின்றது. இது இந்தியாவில் பிரிமியம் ஹேட்ச்பேக் வரிசையில் விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றாக இருக்கின்றது.
அதேசமயம், இந்த பிராண்டில் விற்பனையாகும் மற்ற சில வேரியண்டுகளை பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மாருதி சுசுகி அப்கிரேட் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆனால், ஆர்எஸ் வேரியண்டை மட்டும் அதனால் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக அப்கிரேட் செய்ய முடியவில்லை.
இதை அப்கிரேட் செய்தால் தற்போது இருப்பதைக் காட்டிலும் அதிக விலைக் கொண்ட மாடலாக அது மாறிவிடும். இது இந்தியச் சந்தையில் எந்தவிதமான பலனும் அளிக்காது.
ஆகையால், 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் எஞ்ஜினுடைய பலினோ ஆர்எஸ் காரை சந்தையை விட்டு வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
டாடா போல்ட் மற்றும் டாடா ஜெஸ்ட்
ஜாம்பவான் நிறுவனமான டாடா ஏற்கனவே பிஎஸ்-6 காரணம் காட்டி பல வாகனங்களைச் சந்தையை விட்டு வெளியற்றியிருக்கின்றது. இந்த வரிசையில் விரைவில் இரு பிரபல மடால்களான டாடா போல்ட் மற்றும் டாடா ஜெஸ்ட் ஆகிய இரு மடால்களையும் இணைக்க இருக்கின்றது.
இவ்விரு மாடல்களும் டாடா நிறுவனத்தின்கீழ் பல ஆண்டுகளாக விற்பனையில் இருந்து வருவது குறிப்பிடத்தகுந்தது. இவ்விரு மாடல்களும் 2015 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் டாடா அறிமுகம் செய்தது.
மேலும், இவ்விரு மாடல்களும் டாடாவின் பழைமையான டிசைன் தாத்பரியங்களைக் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டவையாகும். ஆனால், தற்போது வெளிவரும் அனைத்து தயாரிப்புகளும் தற்காலத்திற்கு ஏற்பு புதிய டிசைன் அம்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
ஆகையால், பழைய மாடல்களான ஜெஸ்ட் மற்றும் போல்ட் போன்ற மாடல்களுக்கு விற்பனை மிக குறைவாக இருக்கின்றது.
இந்த நிலையில், இந்த விற்பனைக் குறைந்துக் கொண்டு வரும் வாகனங்களை மிகப்பெரிய செலவீணத்தில் அப்கிரேட் செய்வது நல்ல பலனை அளிக்காது என்பதை உணர்ந்த டாடா, அதனை சந்தையை விட்டு வெளியேற்ற முடிவு செய்திருக்கின்றது.
இதனடிப்படையிலேயே பழைய டிசைனிங் தோற்றத்தைக் கொண்ட ஜெஸ்ட் மற்றும் போல்ட் கார்கள் சந்தையை விட்டு வெளியேற்றப்பட இருக்கின்றன.
டாடா சுமோ
இந்திய வாகன சந்தையில் மிக நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்து வாகனங்களில் டாடா சுமோவும் ஒன்று. இது எஸ்யூவி ரக காரை டாடா நிறுவனம் கடந்த 1994ம் ஆண்டு முதல் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த கார் இந்திய சந்தையில் அதிகப்படியான புதுப்பில்கள் மற்றும் மாற்றியமைத்தலைப் பெற்று வெகு நீண்ட காலமாக விற்பனையில் இருந்தது.
இதனை குறிப்பிடும் வகையில் கடந்த 2011ம் ஆண்டு இந்த கார் சுமோ கோல்டு என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.
பயணிக்க வேண்டிய எஸ்யூவி கார்களில் டாடா சுமோ ஒன்றாக இருக்கின்றது. இந்த காரின் ஓடு திறன் அதாவது குதிரை திறன் மிக அதிகம் ஆகும். இவ்வாறு பல ஆண்டுகளாக சந்தையில் பயன்பாட்டை அளித்து வந்த இந்த கார் 2019ம் ஆண்டில் அதன் இறுதி நாளைச் சந்தித்துவிட்டது.
டாடா சஃபாரி ஸ்டோர்ம்
டாடா நிறுவனத்தின் சுமோ எஸ்யூவி மாடலை ஒத்த மடாலாக சஃபாரி ஸ்டோர்மே காட்சியளிக்கின்றது. இதுவும், டாடா நிறுவனத்தின் மிகவும் வாய்ந்த மாடலில் ஒன்றாகும். இந்த கார் கடந்த 1998ம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்து வருகின்றது. இந்த அறிமுகத்திற்கு பின்னர் மிகப்பெரிய மாற்றங்களை 2012ம் ஆண்டிலேயே டாடா செய்தது.
இந்த மாற்றத்தினால் சஃபாரி கார் மிக பொலிவான தோற்றத்தைப் பெற்றது. இது சந்தையில் கூடுல் உத்வேகமான விற்பனையை வழங்க ஏதுவாக இருந்தது.
ஆனால், அண்மைக் காலங்களாக புதிய கார்களின் படையெடுப்பால் இந்த காருக்கான வரவேற்பு அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. மேலும், இதன் தோற்றம் காலவாதியான ஒன்றாக தற்போது தோன்றுகின்றது. ஆகையால், இந்த காருக்கான இறுதி நாளும் தற்போது தொடங்கிவிட்டது.
இந்த காரின் மறு உருவாக்கம் பற்றி தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. இருப்பினும், இது புதிய தோற்றத்தில் வெளியாகலாம் என்ற தகவல் டாடா நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்கப்படுகின்றது.
ஃபோக்ஸ்வேகன் அமியோ
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் சப்-4 மீட்டர் காம்பேக்ட் செடான் என்ற பெறுமையைக் கொண்டதுதான் இந்த அமியோ கார். இந்த கார் பிரத்யேகமாக இந்தியர்களின் இந்தியாவிலேயே வைத்து கட்டமைக்கப்பட்ட காராகும். இதனை பிரதமர் நரேந்திர மோடியின் 'மேக் இன் இந்தியா' என்ற கேம்பைன் மூலம் ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
ஆனால், இந்த காருக்கான விற்பனை அண்மைக் காலங்களாக குறைந்த வண்ணமே காணப்படுகின்றது. அதேசமயம், அறிமுகம் செய்த புதிதில் அமோகமான வரவேற்பை இந்த கார் எட்டியது. இதற்கு அமியோ காரில் வழங்கப்பட்ட அசாத்தியமான திறனை வெளிப்படுத்தும் எஞ்ஜின் மற்றும் அதிக சொகுசு அம்சங்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.
இந்த நிலையில், இந்த காரை புதிய மாசு உமிழ்வு விதிக்கு அப்கிரேட் செய்வது எந்தவிதமான பலனையும் அளிக்காது என்று எண்ணிய ஃபோக்ஸ்வேகன் இதனை சந்தையை விட்டு வெளியேற்ற முடிவு செய்திருக்கின்றது.
டொயோட்டா இடியோஸ், லிவா மற்றும் க்ராஸ்
பிரபல டொயோட்டா நிறுவனமும் அதன் புகழ்வாய்ந்த மாடல்களான இடியோஸ், லிவோ மற்றும் க்ராஸ் பிரபல மாடல்களை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்ற முடிவு செய்திருக்கின்றது. இதில், இடியோஸ் செடான் ரக காரை அது கடந்த 2010ம் ஆண்டே இந்திய சந்தையில் முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதையடுத்து, ஹேட்ச்பேக் வெர்ஷனாக இடியோஸ் லிவாவையும் இந்தியாவில் டொயோட்டா அறிமுகம் செய்தது.
இவையிரண்டும் என்ட்ரீ லெவல் தயாரிப்புகளாகும். இந்த கார்கல் அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் நல்ல விற்பனை விகிதத்தை டொயோட்டாவிற்கு பெற்று தந்தது. மேலும், போட்டியாளர்களுக்கு கடுமையான டஃபை வழங்கி வந்தது. இதேபோன்று, இடியோஸ் க்ராஸ் மாடலும் ஆரம்பத்தில் கணிசமான வரவேற்பைப் பெற்றது. ஆனால், தற்போது மிகக் கொடுமையான விற்பனை விகிதத்தைப் பெற்று வருகின்றது.
இந்தநிலையில், இந்த இடியோஸ் பிராண்டில் விற்பனையாகும் கார்களை பெரும் மதிப்பில் அப்கிரேட் செய்வது அந்தளவிற்கு நல்ல பலனை வழங்காது என எண்ணிய டொயட்டா இந்த மூன்று வேரியண்டுகளையும் சந்தையை விட்டு விளக்க முடிவு செய்திருக்கின்றது.
ஹூண்டாய் எக்ஸ்சென்ட்
தென்கொரிய நிறுவனமான ஹூண்டாயிடம் இருந்து வெளிவந்த முதல் காம்பேக்ட் செடன் ரக காராக எக்ஸ்சென்ட் இருக்கின்றது. இந்த காரும் அறிமுகத்தின்போது நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, வணிகத்துறைச் சார்ந்த பயன்பாட்டில் அமோகமான வரவேற்பைப் பெற்றது.
ஆனால், இந்த நிலை கடந்த சில மாதங்களாக அப்படியே தலைகீழாக மாறியிருக்கின்றது.
ஆகையால், இதனை ரீபிளேஸ் செய்யும் விதமாக ஹூண்டாய் நிறுவனம் அவ்ரா என்ற புதிய காம்பேக்ட் செடான் ரக காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது, எக்ஸ்சென்ட் மாடலைக் காட்டிலும் அதிக மாடர்னாகவும், கூடுதல் தொழில்நுட்பங்களைக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றது.
இதன் அறிமுகத்தைத் தொடர்ந்து, எக்ஸ்சென்டை காரை இந்தியாவை வெளியேற்ற ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.
மஹிந்திரா வெரிட்டோ
மஹிந்திரா நிறுவனம் அண்மையில் மின்சார காராக வெரிட்டோ மாடலை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் எரிபொருள் எஞ்ஜின் வேரியண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ததுபோது இந்திய சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, வாடகை வாகன சந்தையில் அமோகமான விற்பனையைப் பெற்றது. ஆனால், இந்த நிலை தற்போது காணப்படவில்லை.
ஆகையால், மஹிந்திரா நிறுவனம் இந்த வெரிட்டோ கார்களை புதிய உமிழ்வு விதிக்கு ஏற்ப அப்கிரேட் செய்யாமல் சந்தையை விட்டு விளக்க முடிவு செய்திருக்கின்றது.
மஹிந்திரா கேயூவி100
மஹிந்திரா நிறுவனம் வெரிட்டோ மாடலுக்கு அடுத்தபடியாக அதன் புகழ்வாய்ந்த ஆரம்பநிலை எஸ்யூவி காரான கேயூவி100 மாடலையும் இந்திய சந்தையைவிட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளது.
இந்த கார் எக்ஸ்யூவி300-க்கு கீழாக நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது. இந்த காரையும் மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த மைக்ரோ லெவல் எஸ்யூவி காரான கேயூவி100-க்கு அண்மைக் காலங்களாக விற்பனைக் குறைந்தவாறே காணப்படுகின்றது. இதன் காரணமாகவே இந்தியாவிற்கான விற்பனைப் பட்டியலில் இருந்து இந்த காரை தூக்க மஹிந்திரா முடிவெடுத்துள்ளது.
ரெனால்ட் லாட்ஜி
ரெனால்ட் நிறுவனம் இந்தியாவில் மிக நீண்ட காலமாக விற்பனையில் தத்தளித்துக் கொண்டு வருகின்றது. நல்ல விற்பனையை எட்டமுடியாமல் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சிக்கலை சந்தித்த வண்ணம் இருக்கின்றது அந்நிறுவனம. ஆனால், இப்போது சற்றே இந்நிலை மாறியிருக்கின்றது. குறிப்பாக, மலிவு விலைகளை உடைய ரெனால்ட் ட்ரைபர் எம்பிவி மற்றும் க்விட் ஹேட்ச் பேக் கார்கள் விற்பனை விகிதத்தை மாற்றியமைத்திருக்கின்றன.
இருப்பினும், ரெனால்ட் நிறுவனத்தின் ஒரு சில தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு நிலவாத சூழலே உள்ளது. அதில் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் லாட்ஜி என்ற எம்பிவி காரை சந்தையை விட்டு தூக்க ரெனால்ட் முடிவு செய்திருக்கின்றது. இந்த காரை ரெனால்ட் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டே முதல் முறையாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
மேற்கூறிய அனைத்து பிரபல கார்களும் ஒரு காலத்தில் அமோகமான விற்பனயைப் பெற்ற கார்களாகவே இருக்கின்றன. ஆனால், புது முக நிறுவனங்களின் வருகையாலும், புதுப்பிக்கப்பட்ட மாடல்களின் படையெடுப்பாலும் அனைத்தும் தலைகீழாக மாறியிருக்கின்றது.
ஆகையால், புதிய மாசு உமிழ்வு விதி வருகையைப் பயன்படுத்தி விற்பனைப் பெறாத பிரபல மாடல்களை சந்தையை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன.