Just In
- 2 hrs ago ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
- 2 hrs ago சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- 3 hrs ago குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- 3 hrs ago ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ரூ.1 கோடியை கடந்து செல்லும் 2020 மஹிந்திரா தாரின் முதல் யூனிட்டிற்கான ஏலம்... வெற்றி பெற போவது யார்?
தார் #1 என அழைக்கப்படும் 2020 மஹிந்திரா தார் மாடலின் முதல் யூனிட் ஏல தொகை ரூ.1 கோடியை கடந்து வாடிக்கையாளர்கள் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக 2020 தார் வருகிற அக்டோபர் 2, காந்து ஜெயந்தி தினத்தின்போது வெளியிடப்படவுள்ளது. மேலும் இந்த தினம் மஹிந்திரா நிறுவனத்தின் நிறுவன நாளும் ஆகும்.
இந்த சிறப்புமிக்க நாளை முன்னிட்டுதான் 2020 தார் அந்த நாளில் அறிமுகமாகுகிறது. இதற்கு முன்னதாக தயாரிப்பு பணிகள் முடிக்கப்பட்ட முதல் 2020 தார் கடந்த 24ஆம் தேதியில் இருந்து இணையத்தில் ஏலம் விடப்பட்டு வருகிறது. இன்றுடன் (செப்.29) நிறைவு பெறவுள்ள இந்த ஏலம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
நேற்று ரூ.90 லட்சத்தை தாண்டிய இதன் ஏலத்தொகை தற்போது, நிறைவு பெறும் நேரத்தில் ரூ.1 கோடியை கடந்துள்ளது. ஏலத்தை இந்த தொகையில் டெல்லியை சேர்ந்த ஆகாஷ் மிண்டா என்பவர் நிறுத்தினார். ஆனால் இவரையும் முந்தி கொண்டு மெடினாபூரை சேர்ந்த அபிஷேக் தத்தா என்பவர் ரூ.1.02 கோடியில் தார் #1-ஐ ஏலம் எடுத்துள்ளார்.
இந்த ஏலத்தில் மொத்தம் 5444 பேர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஏலம் ரூ.25,000-ல் இருந்து ஆரம்பித்தது. இதுவரை மொத்தம் எத்தனை ஏலம் பதிவாகியுள்ளது என்பது குறித்த தகவல் எதுவும் கிடைக்க பெறவில்லை. நாங்கள் முன்பே சொன்னது போலதான், தார் #1-இன் இந்த ஏலம் ஒரு நல்ல காரணத்திற்காக நடத்தப்படுகிறது.
அதாவது இதன் மூலம் கிடைக்கும் தொகை கோவிட்-19 நிவாரணப் பணிகள் தொடர்பான உன்னதமான காரணத்திற்காக செலவிடப்படவுள்ளது. மஹிந்திரா ஏலத்தில் திரட்டப்பட்ட முழு வருமானமும் கோவிட்-19 நிவாரணத்தை ஆதரிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த ஏலத்தில் இறுதியாக வெற்றி பெறுவர் #1 முத்திரை பொறிக்க முதல் 2020 தாரை ஐந்து வேரியண்ட்கள் மற்றும் ஆறு நிறத்தேர்வுகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல் தொண்டு நிறுவனங்களையும் மூன்றில் ஒன்றை வெற்றி பெறும் வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம்.
இந்த மூன்றில், தற்போதைய கோவிட்-19 காலத்தில் உணவு மற்றும் வேளாண் துறைகளில் நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கும் நந்தி அறக்கட்டளை, கோவிட்-19 நிவாரண மற்றும் மீட்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமப்புற வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை கட்டமைக்கும் ஸ்வேட்ஸ் அறக்கட்டளை மற்றும் பிரதமர் நிவாரண நிதி உள்ளிட்டவை அடங்குகின்றன.
இந்த ஏலத்தில் வெற்றி பெறும் வாடிக்கையாளர் குறித்த விபரங்களை வருகிற அக்டோபர் 2ஆம் தேதி 2020 தாரின் அறிமுகத்தின்போது மஹிந்திரா நிறுவனம் வெளியிடவுள்ளது. 2020 தாரின் முதல் வாடிக்கையாளராக அங்கீகரிக்கபடவுள்ள அவரது பெயரின் முதல் எழுத்தும் அவர் பெறும் தார் வாகனத்தில் பொறிக்கபட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இவருக்கு இது மறுபிறவி!! எவ்வளவு லட்சம் செலவாகினாலும் பரவாயில்லை, வாங்கினால் இப்படியொரு காரை வாங்கனும்!!
-
ரூ1.66 லட்சம் கம்மி விலையில் ஹூண்டாய் கிரெட்டா காரை வாங்கலாம்! இப்படி ஒரு வழி இருப்பது பலருக்கும் தெரியாது!
-
ஹீரோ மேவ்ரிக் டெலிவரி பணிகள் தொடங்கிருச்சு... சந்தோஷமா வந்து வாங்கிட்டு போன வாடிக்கையாளர்கள்!! எவ்ளோ சந்தோஷம்!