Just In
- 1 hr ago மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- 1 hr ago நம்ம இந்திய நிறுவனத்தின் தயாரிப்பா இதுனு எல்லாரும் வாயடைச்சு போயிட்டாங்க! எஃப்77 மேக்2 இ-பைக் அறிமுகம்!
- 2 hrs ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 4 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
Don't Miss!
- Movies வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
புதிய தலைமுறை மஹிந்திரா தார், எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம்?
கொரோனா பாதிப்பு காரணமாக, தடங்கலான புதிய தலைமுறை மஹிந்திரா தார் மற்றும் எக்ஸ்யூவி500 எஸ்யூவிகள் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பது குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
எஸ்யூவி தயாரிப்பில் ஸ்பெஷலிஸ்ட்டாக விளங்கும் மஹிந்திரா வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் தனது பிரபல மாடல்களை முற்றிலும் புதிய தலைமுறைக்கு கொண்டு செல்ல இருக்கிறது. அதன்படி, தார் மற்றும் எக்ஸ்யூவி500 ஆகியவை புதிய தலைமுறை மாடல்களாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
வாடிக்கையாளர்கள் மத்தியில் பேராவலை ஏற்படுத்தி உள்ள இந்த மாடல்களின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எக்கனாமிக் டைம்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி வீஜே நக்ரா," புதிய தலைமுறை தார், எக்ஸ்யூவி500 மாடல்கள் அறிமுகம் குறித்த புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில்,"கொரோனாவுக்கு முந்தைய நிலைமையை ஒப்பிட்டுபோது, தற்போது 40 சதவீதம் அளவுக்கு வாடிக்கையாளர்கள் ஷோரூம்களுக்கு வருகை தருகின்றனர். 75 சதவீதம் அளவுக்கு விசாரணைகளும் வருகின்றன. அதாவது, நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக வேகமாகவே வாடிக்கையாளர்களின் வரவும், விசாரணைகளும் அதிகரித்து வருகின்றன.
அதேநேரத்தில், எங்களது வாகன உற்பத்திக்கான உதிரிபாகங்களை பெறுவதில் தொடர்ந்து சில தடங்கல்கள் உள்ளன. எங்களது உற்பத்தி சீரடைவதற்கு 30 முதல் 45 நாட்கள் பிடிக்கும். அதுவும், எந்த லாக்டவுனும் போடவில்லை என்றால் மட்டுமே இது சாத்தியம்.
ஊரக பகுதிகளில்தான் எங்களுக்கு 50 சதவீதம் அளவுக்கு விற்பனை உள்ளது. கொரோனா லாக்டவுன் தளர்வுகளுக்கு பிறகு ஊரகப் பகுதிகளில் எங்களது கார் விற்பனை அதிகரித்து வருகிறது.
சீனாவிலிருந்து சில முக்கிய உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வருகிறோம். அதனை இந்தியாவிலிருந்து பெறுவதற்கு திட்டமிட்டுள்ளோம். அதாவது, 100 சதவீத இந்தியாவில் உற்பத்தியாகும் உதிரிபாகங்களுடன் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
கார் உற்பத்தியில் எழுந்துள்ள நடைமுறை சிக்கல்களால் எங்களது புதிய வாகனங்களின் அறிமுகங்கள் தள்ளிப் போகும். புதிய தலைமுறை எக்ஸ்யூவி500 மற்றும் தார் எஸ்யூவிகள் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு மற்றும் நான்காவது காலாண்டில் அறிமுகம் செய்வதற்கான திட்டம் உள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு பண்டிகை கால துவக்கத்திற்கு முன்னதாகவே எதிர்பார்க்கப்பட்ட இந்த மாடல்களின் அறிமுகம் சில மாதங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனினும், அடுத்த சில மாதங்களில் நிலைமை சீராகும்போது இந்த புதிய மாடல்களை களமிறக்குவது உசிதம் என்று மஹிந்திரா கருதுகிறது.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!