Just In
- 1 min ago ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- 4 hrs ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
Don't Miss!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Sports விளையாட்டு காட்றீங்களா? களத்திலேயே ஹர்திக், ரோகித்தை திட்டிய ஆகாஷ் அம்பானி.. சமாதானம் செய்த சச்சின்
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Movies Kizhen Das:நிச்சயதார்த்தத்தை முடித்த கிஷன் தாஸ்.. நீண்டநாள் தோழியுடன் கைகோர்ப்பு!
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நீங்க நினைக்கிறது ரொம்ப தப்பு... டிரைவர் பத்திரமா இருக்கிறார்... பெருமைப்படுங்க இது இந்திய தயாரிப்பு!
அப்பளம்போல் நொறுங்கிய காரில் இருந்து அதன் ஓட்டுநர் பத்திரமாக மீண்டு வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் எக்ஸ்யூவி 500 காரும் ஒன்று. இந்த காரே அதில் பயணித்தவர்களைப் பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. பீஹார் மாநிலத்தின், தர்பாங்கா எனும் பகுதியிலேயே இந்த விபத்து சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
விபத்தில் அப்பளம் போல் நொறுங்கிக் கிடக்கும் காரைப் பார்க்கையில் பெரும் விபரீதம் நிகழ்ந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகின்றது. பெரும்பாலானோரின் எண்ணம் இதுவாகவே இருக்கின்றது. ஆனால், நம்முடைய எண்ணத்தை தவிடு பொடியாக்குகின்ற வகையில், இந்த சம்பவத்தில் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆமாங்க, காரில் இருந்த பாதுகாப்பு கவசங்கள் அதன் பயணிகளைப் பத்திரமாக காப்பாற்றியிருக்கின்றது. காரின் பக்கவாட்டு பகுதி முழுமையாக உருக்குலைந்து காட்சியளிக்கின்றநிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என தகவல் வெளியாகியிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. மேலும், இந்த கார் இவ்வளவு பாதுகாப்பு திறன் வாய்ந்ததா என்ற பிரம்மிப்பையும் எழும்ப செய்திருக்கின்றது.
மஹிந்திரா நிறுவனம் இக்காரில் பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக பல்வேறு அம்சங்களை வழங்கியிருக்கின்றது. ஏர் பேக், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக் என பல சிறப்பு வசதிகள் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றன. இந்த அம்சங்களே தற்போது காரில் பயணித்தவர்களைப் பெரும் விபத்தில் இருந்து காப்பாற்றியிருக்கின்றது.
இக்கார், ஏசியன் என்சிஏபி அமைப்பு நிகழ்த்திய மோதல் பரிசோதனையில் நான்கு நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்ற கார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதை நிஜ வாழ்க்கையில் உறுதிப்படுத்தும் வகையில் இக்கார் பெரும் விபத்தில் இருந்து தன்னுள் பயணித்தவர்களை பத்திரமாக பாதுகாத்திருக்கின்றது.
இந்தியர்கள் மத்தியில் நல்ல வரேவற்பைப் பெற்று வரும் மஹிந்திர கார்களில் எக்ஸ்யூவி 500 காரும் ஒன்று. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரையே மஹிந்திரா நிறுவனம் தற்போது நவீன யுகத்திற்கு புதுப்பித்து வருகின்றது. விரைவில் இந்த புதுப்பிக்கப்பட்டு வரும் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றது.
இம்மாதிரியான சூழ்நிலையில் இந்தியர்களின் மனதைக் கவருகின்ற வகையில் அதன் பாதுகாப்பு தரத்தை மஹிந்திரா எக்ஸ்யூவி500 நிரூபித்திருக்கின்றது. புதிய தலைமுறையாக அப்கிரேட்டாகி வரும் எக்ஸ்யூவி காரில் கூடுதல் சிறப்பு வசதிகளாக 2ம் லெவல் தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்பம், டிஜிட்டல் காக்பிட், பிரீமியம் வசதிகள் என எண்ணற்ற அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
இந்திய சாலைகளைப் பொருத்தவரை விபத்து என்பது மிகவும் வழக்கமான நிகழ்வுகளில் ஒன்றாக மாறி வருகின்றது. இதனைத் தவிர்க்க நினைத்தாலும் விதிமீறல் வாதிகளின் கட்டுக்கடங்கா நிலைப்பாட்டின் காரணமாக ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையில் விபத்துகள் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. இதனால் மஹிந்திரா நிறுவனத்தின் இதுமாதிரியான பாதுகாப்பான கார்களைப் பயன்படுத்துவது கட்டாயமாக மாறியிருக்கின்றது. இதற்கேற்ப இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பாதுகாப்பான கார்களைப் பற்றி அறிந்து கொள்ளே இங்கே க்ளிக் செய்யவும்.
-
பைக்கின் விலை பல இலட்சம்... ஆனா ஒருத்தர் மட்டும்தான் போக முடியும்!! பிரபல பாடகர் ஆசையோடு வாங்கிய பைக்!
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
இன்சூரன்ஸ் இல்லாத வெளிநாட்டு காரில் பயணித்த நாம் தமிழர் வேட்பாளர்! வைரலாகும் புகைப்படம்!