வீட்டின் மொட்டை மாடியில் ஸ்கார்பியோ காரை நிறுத்திய உரிமையாளர்..! காரணத்தை கேட்டு வியந்துபோன மக்கள்!

ஸ்கார்பியோ காரின் மீதிருக்கும் அதீத காதலை வெளிப்படுத்தும் விதமாக பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் நபர், அக்காரின் உருவத்தை வீட்டின் மொட்டை மாடியில் நிலை நிறுத்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த வீட்டை அண்ணாந்து பாக்காம கடக்கவே முடியாது... ஏன்னா வீட்டோட மொட்டை மாடிலதான் அதோட ஸ்பெஷலே இருக்கு...

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான காராக ஸ்கார்பியோ உள்ளது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் இந்தியர்களின் மிகவும் பிரியமான வாகனமாகும். இதனை பரைசாற்றும் வகையில் ஓர் சம்பவம் இந்தியாவில் அரங்கேறியிருக்கின்றது. ஆம், மஹிந்திரா ஸ்கார்பியோ கார் மீதிருக்கும் அளவு கடந்த காதலை வெளிப்படுத்தும் விதமாக ஓர் நபர், அக்காரின் உருவத்தை வீட்டின் மொட்டை மாடி பகுதியில் நிறுவியிருக்கின்றார்.

இந்த வீட்டை அண்ணாந்து பாக்காம கடக்கவே முடியாது... ஏன்னா வீட்டோட மொட்டை மாடிலதான் அதோட ஸ்பெஷலே இருக்கு...

ஆம், இது உருவம் மட்டும்தான், கார் அல்ல. பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் சேமிப்பு தொட்டி பிளாஸ்டிக் அல்லது சதுரங்க கான்கிரீட் ஆகியவற்றினாலே அமைக்கப்படுகின்றது. ஆனால், நாம் பார்க்கவிருக்கும் இந்த சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் மஹிந்திரா ஸ்கார்பியோ வடிவிலான தண்ணீர் சேமிப்பு தொட்டியை தனது வீட்டின் மேல் பகுதியில் நிறுவியிருக்கின்றார்.

இந்த வீட்டை அண்ணாந்து பாக்காம கடக்கவே முடியாது... ஏன்னா வீட்டோட மொட்டை மாடிலதான் அதோட ஸ்பெஷலே இருக்கு...

இதுகுறித்த புகைப்படமே தற்போது இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கின்றது. இந்த வீடு பீஹார் மாநிலம், பஹகல்பூர் எனும் பகுதியில் அமைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலை வாசிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் வாகன ஆர்வலர்களை இந்த வீடு வெகுவாக கவர்ந்ததை அடுத்து, கார் மற்றும் வீடுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

இந்த வீட்டை அண்ணாந்து பாக்காம கடக்கவே முடியாது... ஏன்னா வீட்டோட மொட்டை மாடிலதான் அதோட ஸ்பெஷலே இருக்கு...

இந்த வீட்டின் உரிமையாளரின் பெயர் இன்டாசர் அலாம் என கூறப்படுகின்றது. இவர் மிகப்பெரிய மிகுந்த வாகன பிரியர் என அப்பகுதி வாசிகள் கூறுகின்றனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அவர் தனது வீட்டின் தண்ணீர் தொட்டியை மஹிந்திரா கார் உருவத்தில் உருவாக்கியிருக்கின்றார். துளிகூட அச்சுபிசுகாமல் உண்மையான மஹிந்திரா ஸ்கார்பியோ காரை மொட்டை மாடியில் நிறுத்தி வைத்திருப்பதைப் போன்று அது காட்சியளிக்கின்றது.

இந்த வீட்டை அண்ணாந்து பாக்காம கடக்கவே முடியாது... ஏன்னா வீட்டோட மொட்டை மாடிலதான் அதோட ஸ்பெஷலே இருக்கு...

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் திடீரென பார்போருக்கு இது நிஜ காரை போன்று காட்சியளிக்கும் வகையில் உள்ளது. பதிவெண், சைடு மிர்ரர், இன்டிகேட்டர், வீல், டயர் என சிறு அங்கம்கூட விடுபடாமல் அதில் நிறுவப்பட்டிருக்கின்றன. எனவேதான் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த வீடு கவர்ந்து வருகின்றது. மேலும், ஒவ்வொரு முறையும் வீட்டைக் கடக்கும்போது ஒரு முறையாவது வீட்டை அண்ணாந்து பார்க்க வைத்துவிடுகின்றது.

இந்த வீட்டை அண்ணாந்து பாக்காம கடக்கவே முடியாது... ஏன்னா வீட்டோட மொட்டை மாடிலதான் அதோட ஸ்பெஷலே இருக்கு...

இதுபோன்று மஹிந்திரா ஸ்கார்பியோ காரை வாட்டர் டேங்காக இன்டாசர் அலாம்தான் முதல் முறையாக இந்தியாவில் நிறுவியுள்ளாரா என கேட்டால், இல்லை என்றுதான் நாங்கள் கூறுவோம். ஏனெனில் இந்த யோசனையே அவருக்கு ஆக்ராவிற்கு சென்றபோதுதான் தோன்றியிருக்கின்றது. ஆம், அங்கிருந்த வீட்டின் மேற்கூரையில் இதேபோன்று ஓர் நபர் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை தண்ணீர் சேமிப்பு தொட்டியாக நிறுவியிருக்கின்றார்.

இந்த வீட்டை அண்ணாந்து பாக்காம கடக்கவே முடியாது... ஏன்னா வீட்டோட மொட்டை மாடிலதான் அதோட ஸ்பெஷலே இருக்கு...

இதைப் பார்த்த பின்பே தனது வீட்டின் மொட்டை மாடியிலும் இதுபோன்ற நீர் தொட்டியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு கிடைத்துள்ளது. இதனடிப்படையிலேயே தற்போது வாட்டர் டேங்க் தயார் செய்யப்பட்டும் உள்ளது. இதற்கு ரூ. 2.5 லட்சங்கள் வரை அவர் செலவு செய்திருப்பதாக கூறப்படுகின்றது. இதுகுறித்த புகைப்படமே தற்போது அனைத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இந்த வீட்டை அண்ணாந்து பாக்காம கடக்கவே முடியாது... ஏன்னா வீட்டோட மொட்டை மாடிலதான் அதோட ஸ்பெஷலே இருக்கு...

ஒரு சிலர் இந்த புகைப்படத்தை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் சஷி தரூர் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், இந்தியர்கள் சிலர் விமானம், கால்பந்து, குக்கர் மற்றும் மாட்டு வண்டி ஆகிய உருவத்திலும் வாட்டர் டேங்குகளை கட்டமைத்து பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, இந்தியாவின் வடக்கு பகுதிகளிலேயே இதுபோன்ற விநோத சம்பவங்களை அதிகம் காண முடியும்.

இந்த வீட்டை அண்ணாந்து பாக்காம கடக்கவே முடியாது... ஏன்னா வீட்டோட மொட்டை மாடிலதான் அதோட ஸ்பெஷலே இருக்கு...

இதில், புதிய ஈர்ப்பான விஷயமாக மஹிந்திரா ஸ்கார்பியோ அமைந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ காரை பல தசாப்தங்களாக இந்திய சந்தையில் விற்பனையில் ஈடுபடுத்தி வருகின்றது. இந்த நிலையில், அண்மையில்தான் இக்காரின் டாப் வேரியண்டில் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய வசதிகளை அது அறிமுகப்படுத்தியது. இது ஸ்கார்பியோ பிரியர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த வீட்டை அண்ணாந்து பாக்காம கடக்கவே முடியாது... ஏன்னா வீட்டோட மொட்டை மாடிலதான் அதோட ஸ்பெஷலே இருக்கு...

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் எடுத்துக்கொள்ளும் எனகூறப்படுகின்றது. எனவேதான், புதிய தொழில்நுட்ப அவசர அவசரமாக தற்போது வழங்கப்பட்டுள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவியில் பிஎஸ்-6 தரம் கொண்ட 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இது, அதிகபட்சமாக 140 எச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மூலமாக இந்த எஞ்ஜின் செயல்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Man Build Mahindra Scorpio Type Water Tank For Home. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X