Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News "ஐயோ பாவம்!" அண்ணாமலை, தமிழிசை.. தனது ஸ்டைலில் ஆளுக்கு ஒரு சொலவடை சொல்லி கலாய்த்த துரைமுருகன்!
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேரும் பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு பேட்டிங் இறங்கிட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான RR
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
என்ஜினிற்கு பதிலாக எலக்ட்ரிக் மோட்டார் உடன் மாருதி 800... இதுவும் நல்லாதான் இருக்கு...
ஒரு காலத்தில் இந்திய சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த மாருதி 800 மாடலின் மாதிரி கார் ஒன்று இவி வெர்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது எரிபொருள் என்ஜினிற்கு மாற்றாக எலக்ட்ரிக் மோட்டாரை பெற்றுள்ள இந்த காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
1983ல் மாருதி நிறுவனத்தால் 800 பெயர்பலகை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் 2014 வரையில் விற்பனையில் தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த 800 மாடல் தற்போதுவரை அதிக வாடிக்கையாளர்களை பெற்ற இரண்டாவது மாடலாக விளங்குகிறது.
கிட்டத்தட்ட 2.7 மில்லியன் வரையில் விற்பனையான 800 மாடல் புதியதாக எலக்ட்ரிக் மோட்டார் உடன் அதே பட்ஜெட் விலையில் மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளதாக முன்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இதுவரை இதுகுறித்த கூடுதல் விபரங்களும் எதுவும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் நிறுவனத்தை சேர்ந்த ஹேமங்க் டெபாட் என்பவரால் மாருதி 800 கார் ஒன்று இவி வெர்சனுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரில் முக்கிய அம்சமாக வழங்கப்பட்டுள்ள ஹில் ஹோல்ட் அசிஸ்ட் செயல்பாடு ஆனது சறுக்கலான பாதைகளில் காரின் ட்ராக்ஷனுக்கு உதவியாக இருக்கும்.
ஸ்டாக் 800 மாடலை போல் அல்லாமல் இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் இரு இருக்கைகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த இருக்கைகளுக்கு அடியில் பொருட்களை வைப்பதற்கு ஏதுவாக வடிவமைத்துள்ளனர். இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எரிபொருள் என்ஜினிற்கு மாற்றாக 16 பேட்டரி செல்கள் வழக்கம்போல் காரின் முன்புறத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
48 வோல்ட் சிஸ்டத்துடன் உள்ள 13.2 கிலோவாட்ஸ் செட்அப் ஆனது 19 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் உடன் இணைந்து செயல்படும். இதன் டார்க் திறன் அதிகப்பட்சமாக 70 என்எம் வரையில் சென்றாலும், இது சில வினாடிகளுக்கு மட்டுமே. பிறகு நிலையாக 54 என்எம்-க்கு வந்துவிடும்.
இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 7:1 ஸ்டெப்-டவுன் ட்ரான்ஸ்மிஷன் சக்கரங்களுக்கு 378 என்எம்-ஐ உறுதியளிக்கிறது. அதிகப்பட்சமாக 85 kmph வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் 800 கார் முழு சார்ஜில் 120 கிமீ வரையில் இயங்கும்.
வேகத்தை சரியான விகித்தத்தில் குறைக்க ரீ-ஜெனரேட்டிவ் ப்ரேக்கிங் சிஸ்டத்தை கொண்டுள்ள இந்த மாருதி 800 இவி காரில் டெஸ்லா தயாரிப்புகளுக்கு இணையான தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிஸ்டத்தின் மூலம் ட்ரைவ், நியூட்ரல் மற்றும் ரிவர்ஸ் உள்ளிட்ட ட்ரைவிங் மோட் செயல்பாடுகளை பெற முடியும்.
மேலும், பேட்டரியின் சார்ஜ் நிலை, ரேஞ்ச் இண்டிகேஷன், அப்போதைக்கு இருக்கும் பயன்பாடு, வெப்பநிலை அளவு உள்ளிட்ட தகவல்களை காட்டும் விதத்திலான மென்பொருளையும் இதன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் பெற்றுள்ளது. முன்னதாகவே இதே நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் நிறுவனம் ஹோண்டா ஆக்டிவா மற்றும் செவ்ரோலெட் பீட் உள்ளிட்ட மாடல்களையும் எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?