Just In
- 1 hr ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 2 hrs ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 3 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 4 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- Movies குழந்தை இருந்தாலும் பரவாயில்லை..மீனாவை திருமணம் செய்ய தயார்.. புயலை கிளப்பிய யூட்யூபர்
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?
மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோ மாடலுக்கு வழங்கி வந்த பப்ரிக்கா ஆரஞ்ச் நிறத்தேர்வை இந்திய சந்தையில் நிறுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
மாருதி சுஸுகி நிறுவனம் பிஎஸ்6 தரத்தில் செலிரியோ மாடலை ரூ.4.41 லட்சம் என்ற விலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. முன்பு இந்த ஹேட்ச்பேக் மாடலில் டீசல் என்ஜினும் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக டீசல் என்ஜின்களை அப்டேட் செய்வது செலவு மிகுந்த வேலையாக இருந்ததால் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் தயாரிப்புகளில் டீசல் வேரியண்ட்களை வழங்குவதை நிறுத்தி இருந்தது. இந்த வகையில் செலிரியோவும் பிஎஸ்6 அறிமுகத்தின்போது பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் தான் வெளிவந்தது.
மேலும் மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோஎக்ஸ் என்ற பெயரில் இதன் க்ராஸ்ஓவர் வெர்சனையும் விற்பனை செய்து வருகிறது. இதன் எக்ஸ்ஷோம் விலை ரூ.4.90 லட்சமாக உள்ளது. இயந்திர பாகங்களில் செலிரியோ மாடலுடன் இந்த எக்ஸ் செர்சனுக்கு எந்த வேறுபாடும் கிடையாது.
ஆனால் கூடுதலாக காஸ்மெட்டிக் மற்றும் நிறத்தேர்வுகள் செலிரியோஎக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ஏஜிஎஸ் (ஆட்டோ கியர் ஷிஃப்ட்) தேர்வும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இதன் நிறத்தேர்வுகளில் ஒன்றான பப்ரிக்கா ஆரஞ்ச் நிறம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் செலிரியோஎக்ஸ் மாடல் இனி டார்க் ப்ளூ, ஒளிரும் க்ரே, காஃபைன் ப்ரவுன் மற்றும் ஆர்டிக் வொய்ட் என்ற நான்கு நிறங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். அதுவே வழக்கமான செலிரியோவிற்கு டங்கோ ஆரஞ்ச், ஆர்டிக் வொய்ட், ஒளிரும் க்ரே, ப்ளாஸிங் ரெட், சில்கி சில்வர் மற்றும் டார்க் ப்ளூ என்ற ஆறு நிறங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
செலிரியோஎக்ஸ் மாடலின் பப்ரிக்கா ஆரஞ்ச் நிறம் நிறுத்தப்பட்டதற்கு, 2020 செலிரியோ மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 2020 செலிரியோ சந்தையில் அறிமுகமாகுவதற்கு அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது.
2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த 2020 மாடல் சமீபத்தில் கூட முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் 2020 செலிரியோ அறிமுகம் குறித்த அறிவிப்புகளும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து AREA டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த 2020 மாடலின் அறிமுகம் மிக விரைவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருக்கலாம். சோதனையில் கார் முழுக்க முழுக்க மறைக்கப்பட்டிருந்தாலும், புதிய சக்கரங்கள், அப்டேட்டான லைட்டிங் க்ளஸ்ட்டர்கள், திருத்தியமைக்கப்பட்ட பம்பர்கள் உள்ளிட்டவற்றை காண முடிந்திருந்தது.
அதேபோல் உட்புறத்திலும் குறிப்பிடத்தகுந்த அளவில் தொடுத்திரை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா + சென்சார்கள் போன்றவற்றையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம். மற்றப்படி தற்போதைய 1.0 லிட்டர் கே10பி பெட்ரோல் என்ஜினில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.
இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 67 பிஎச்பி பவரையும், 3500 ஆர்பிஎம்-ல் 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது.
இந்த 2020 மாடலின் ஆரம்ப விலை ரூ.4.5 லட்சமாகவும் அதிகப்பட்சமாக ரூ.4.7 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. விற்பனையில் இதற்கு போட்டியாக டாடா டியாகோ பிஎஸ்6 மற்றும் ஹூண்டாய் சாண்ட்ரோ பிஎஸ்6 உள்ளிட்டவை உள்ளன. புதிய தலைமுறை செலிரியோ எக்ஸ் மாடலை பற்றிய எந்த தகவலும் தற்போதைக்கு இல்லை.
-
ஒரு புறாவுக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா!! இலவச பஸ் டிக்கெட் இருந்தும் பெரிய தொகையை செலவழித்த பாட்டி - பேத்தி!
-
இந்த விமான நிலையம் மும்பை நகரத்தை விட பெருசு... எங்கு அமைந்துள்ளது? அதன் அளவு என்ன?
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?