Just In
- 8 min ago இந்தியாவில் சுஸுகி 2-வீலர்கள் உற்பத்தி 80 இலட்சத்தை கடந்தது!! தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா?
- 1 hr ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 2 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 2 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாருதி செலிரியோ எக்ஸ் மாடலை இனி ஆரஞ்ச் நிறத்தில் வாங்க முடியாது... காரணம் என்ன தெரியுமா..?
மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோ மாடலுக்கு வழங்கி வந்த பப்ரிக்கா ஆரஞ்ச் நிறத்தேர்வை இந்திய சந்தையில் நிறுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
மாருதி சுஸுகி நிறுவனம் பிஎஸ்6 தரத்தில் செலிரியோ மாடலை ரூ.4.41 லட்சம் என்ற விலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. முன்பு இந்த ஹேட்ச்பேக் மாடலில் டீசல் என்ஜினும் வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக டீசல் என்ஜின்களை அப்டேட் செய்வது செலவு மிகுந்த வேலையாக இருந்ததால் மாருதி சுஸுகி நிறுவனம் அதன் தயாரிப்புகளில் டீசல் வேரியண்ட்களை வழங்குவதை நிறுத்தி இருந்தது. இந்த வகையில் செலிரியோவும் பிஎஸ்6 அறிமுகத்தின்போது பெட்ரோல் என்ஜின் உடன் மட்டும் தான் வெளிவந்தது.
மேலும் மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோஎக்ஸ் என்ற பெயரில் இதன் க்ராஸ்ஓவர் வெர்சனையும் விற்பனை செய்து வருகிறது. இதன் எக்ஸ்ஷோம் விலை ரூ.4.90 லட்சமாக உள்ளது. இயந்திர பாகங்களில் செலிரியோ மாடலுடன் இந்த எக்ஸ் செர்சனுக்கு எந்த வேறுபாடும் கிடையாது.
ஆனால் கூடுதலாக காஸ்மெட்டிக் மற்றும் நிறத்தேர்வுகள் செலிரியோஎக்ஸ் மாடலில் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் ஏஜிஎஸ் (ஆட்டோ கியர் ஷிஃப்ட்) தேர்வும் கூடுதலாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இதன் நிறத்தேர்வுகளில் ஒன்றான பப்ரிக்கா ஆரஞ்ச் நிறம் இந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் செலிரியோஎக்ஸ் மாடல் இனி டார்க் ப்ளூ, ஒளிரும் க்ரே, காஃபைன் ப்ரவுன் மற்றும் ஆர்டிக் வொய்ட் என்ற நான்கு நிறங்களில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். அதுவே வழக்கமான செலிரியோவிற்கு டங்கோ ஆரஞ்ச், ஆர்டிக் வொய்ட், ஒளிரும் க்ரே, ப்ளாஸிங் ரெட், சில்கி சில்வர் மற்றும் டார்க் ப்ளூ என்ற ஆறு நிறங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
செலிரியோஎக்ஸ் மாடலின் பப்ரிக்கா ஆரஞ்ச் நிறம் நிறுத்தப்பட்டதற்கு, 2020 செலிரியோ மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 2020 செலிரியோ சந்தையில் அறிமுகமாகுவதற்கு அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது.
2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த 2020 மாடல் சமீபத்தில் கூட முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் 2020 செலிரியோ அறிமுகம் குறித்த அறிவிப்புகளும் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து AREA டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த 2020 மாடலின் அறிமுகம் மிக விரைவில் வரும் அக்டோபர் மாதத்தில் இருக்கலாம். சோதனையில் கார் முழுக்க முழுக்க மறைக்கப்பட்டிருந்தாலும், புதிய சக்கரங்கள், அப்டேட்டான லைட்டிங் க்ளஸ்ட்டர்கள், திருத்தியமைக்கப்பட்ட பம்பர்கள் உள்ளிட்டவற்றை காண முடிந்திருந்தது.
அதேபோல் உட்புறத்திலும் குறிப்பிடத்தகுந்த அளவில் தொடுத்திரை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா + சென்சார்கள் போன்றவற்றையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம். மற்றப்படி தற்போதைய 1.0 லிட்டர் கே10பி பெட்ரோல் என்ஜினில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை.
இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 6000 ஆர்பிஎம்-ல் 67 பிஎச்பி பவரையும், 3500 ஆர்பிஎம்-ல் 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஜிஎஸ் ஏஎம்டி யூனிட் வழங்கப்படுகிறது.
இந்த 2020 மாடலின் ஆரம்ப விலை ரூ.4.5 லட்சமாகவும் அதிகப்பட்சமாக ரூ.4.7 லட்சம் வரையிலும் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது. விற்பனையில் இதற்கு போட்டியாக டாடா டியாகோ பிஎஸ்6 மற்றும் ஹூண்டாய் சாண்ட்ரோ பிஎஸ்6 உள்ளிட்டவை உள்ளன. புதிய தலைமுறை செலிரியோ எக்ஸ் மாடலை பற்றிய எந்த தகவலும் தற்போதைக்கு இல்லை.