Just In
- 3 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 9 min ago ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- 2 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 2 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
குர்கான் கார் ஆலையை வேறு இடத்திற்கு மாற்ற மாருதி முடிவு... புதிய இடத்தை தேர்வு செய்யும் பணி தீவிரம்
போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்கள், குர்கான் ஆலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மாருதி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. புதிய ஆலைக்கான இடத்தை தேர்வு செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறது.
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிரது. இந்நிறுவனத்திற்கு ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் கார் உற்பத்தி ஆலைகள் உள்ளன. மேலும், குஜராத் மாநிலத்தில் மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி நேரடியாக ஒரு ஆலையை அமைத்து மாருதிக்கு கார் உற்பத்தி செய்து கொடுத்து வருகிறது.
இந்த சூழலில், குர்கான் நகரில் உள்ள மாருதி கார் ஆலை நகரப் பகுதியில் அமைந்துள்ளது. 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஆலை அமைக்கப்பட்டு 39 ஆண்டுகள் ஆகும் நிலையில், ஆண்டுக்கு 7 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். தற்போது ஆலை அமைந்துள்ள பகுதியானது பெரும் மக்கள் தொகை பெருக்கமும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
கடந்த தசாப்தத்தில் குர்கான் நகரில் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் தங்களது அலுவலகங்களை அமைத்ததுடன், குடியிருப்புப் பகுதிகளுடன் பெரும் விரிவாக்கம் கண்டுள்ளது. இதனால், கார் ஆலைக்கு வரும் நீண்ட டிரக்குகள் மற்றும் பணியாளர்கள் போக்குவரத்தில் அதிக சிரமம் ஏற்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்வதிலும் அதிக சிக்கல்கள் உள்ளன.
இதையடுத்து, குர்கான் கார் ஆலையை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு மாருதி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், ஹரியானா மாநிலத்திலேயே புதிய ஆலையை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, ஹரியானா மாநில அரசுடன் மாருதி சுஸுகி நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது. மேலும், எதிர்கால தேவையை மனதில் வைத்து, புதிய கார் ஆலையை 700 முதல் 1000 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிதாக அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
மாருதி கார் நிறுவனத்திற்கான புதிய ஆலை அமைப்பதற்காக தற்போது மற்றொரு ஆலை அமைந்துள்ள மானேசரிலும், தவிர்த்து சோன்ஹா மற்றும் சோனிபத்தில் உள்ள கர்கோடா ஆகிய மூன்று இடங்களை ஹரியானா அரசு காட்டி இருக்கிறது. இதில், கர்கோடா பகுதியில் மாருதி எதிர்பார்க்கும் அளவுக்கு நிலம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுதொடர்பாக, மாருதி கார் நிறுவனம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சோன்ஹா பகுதியில் எடுக்கப்பட்ட மண் பரிசோதனையில் கார் ஆலை அமைப்பதற்கு போதுமான தரத்தை அந்த மண் பெற்றிருக்கவில்லை என தெரிகிறது. எனவே, மானேசர் அல்லது கர்கோடாவில் புதிய ஆலையை அமைப்பது குறித்து மாருதி விரைவில் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் வெளியான செய்தியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்