Just In
- 37 min ago 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- 2 hrs ago இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- 3 hrs ago சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- 3 hrs ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
Don't Miss!
- Movies அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
வேகன்ஆர்-ஐ பாதுகாப்பில் மட்டம் தட்டிய டாடா மோட்டார்ஸ்- ஒரே வார்த்தையில் ஆஃப் செய்த மாருதி சுஸுகி
வேகன்ஆரை பற்றிய டாடா நிறுவனத்தின் கிண்டலுக்கு மாருதி சுஸுகி நிறுவனம் தனது பதிலை சூசமாக தெரிவித்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.
டிவிட்டரில் டாடா மோட்டார்ஸ் மாருதி சுஸுகி நிறுவனங்களுக்கு இடையே கருத்து மோதல் தீவிரமாக ஏற்பட்டு வருகிறது. இது இன்னும் முடிந்த பாடில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாருதியின் வேகன்ஆர் ஹேட்ச்பேக் காரை தனது டியாகோ ஹேட்ச்பேக் காருடன் ஒப்பிடும் பாதுகாப்பு விஷயத்தில் கிண்டல் செய்திருந்தது. ஏனெனில் உலகளாவிய என்சிஏபி சோதனையில் டியாகோவின் மதிப்பெண் 4 என இருக்க, வேகன்ஆர் வெறும் 2 நட்சத்திரங்களை மட்டுமே மதிப்பீடுகளாக பெற்றுள்ளது.
இதனை கலாய்க்கும் விதத்தில் காலி மரவண்டி ஒன்று முன்சக்கரம் உடைப்பட்ட நிலையில் இருக்கும் படத்தை டாடா மோட்டார்ஸ் அதன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்த பதிவில் வேகன்ஆரின் பெயர் நேரடியாக குறிப்பிடப்படவில்லை. மாறாக சில குறியீடுகள் மூலம் மறைமுகமாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு தற்போது மாருதி சுஸுகி நிறுவனம் சரியான பதிவுடன் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்த மாருதியின் டிவிட்டர் பதிவில், "இதுதான் நாங்கள் யார் என்பதை எங்களுக்கு உணர்த்துகிறது: முழு வேகன்ஆர் குடும்பத்துடனும் உண்மையிலேயே இதயத்திலிருந்து வலுவான தொடர்பு கொண்டுள்ளோம்!" என்ற வாக்கியங்கள் வேகன்ஆர் காரின் படத்துடன் உள்ளன.
மேலும் இந்த படத்தில் "24 லட்ச குடும்பங்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்" என்ற மாருதியின் கருத்தும் பதிவிடப்பட்டுள்ளது. வேகன்ஆர் இந்திய சந்தையில் மிக அதிகளவில் விற்பனையாகும் காராக விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் இந்த மாருதி மாதந்தோறும் அதிகளவில் விற்பனையாகும் கார்களில் வரிசையில் பெரும்பான்மையான நேரம் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும்.
அதேநேரம் டாடா கார்கள் முதல் 10 இடங்களுக்குள் வருவதே எப்போதவது ஒருமுறைதான் நிகழும். வேகன்ஆருக்கு முன்னதாக மாருதி எஸ்-பிரெஸ்ஸோ, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் கியா செல்டோஸ் கார்களையும் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் டாடா நிறுவனம் மட்டம் தட்டி இருந்தது.
எஸ் பிரேஸ்ஸோவை டாடா கிண்டல் செய்திருந்தபோதும் உடனடியாக பதில் அளித்திருந்த மாருதி சுஸுகி, இந்தியாவின் விருப்பமான ஆட்டோமொபைல் பிராண்ட் என்ற வரிகளை பதிவிட்டிருந்தது. இதற்கு கீழே "This claim is undisputed" என பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு அர்த்தம், இந்த கூற்று மறுக்க முடியாதது என்பது ஆகும்.
மாருதியின் இந்த பதிவு இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான ஆட்டோமொபைல் பிராண்ட் தாங்கள் தான் என்பதை டாடாவிற்கு தெரிவிக்கும்படி இருந்தது. டாடா நிறுவனம் தொடர்ந்து அதன் தயாரிப்புகளின் உலகளாவிய என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீடுகளை மற்ற பிராண்ட்களின் தயாரிப்புகளுடன் ஒப்பிட்டு பதிவுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
-
உபேர் கேப்களில் அதிகம் தொலைக்கப்பட்ட பொருட்கள் இது தான்! எந்த ஊர்ல அதிகம் தெரியுமா?
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!