Just In
- 38 min ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 2 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- Movies Baakiyalakshmi: பளார்.. என்னா அடி.. ஜெனி காலில் விழுந்து சரணடைந்த செழியன்!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
3 வீலராக மாறிய மாருதி சுஸுகி 800... இதுதான் உலகின் மிக குறுகிய மாருதி 800... இதோ வீடியோ!
இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்களில் ஒன்றான மாருதி 800 மாடலை இளைஞர் ஒருவர் த்ரீ வீலர் வாகனமாக மாடிஃபை செய்துள்ளார். இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.
இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்களில் ஒன்றாக மாருதி சுசுகி 800 இருக்கின்றது. இது பல தசாப்தங்களாக இந்தியாவில் விற்பனையில் இருந்த கார் ஆகும். ஆனால், குறிப்பிட்ட காரணங்களுக்காக மாருதி சுசுகி நிறுவனம் அதனை விற்பனையில் இருந்து விளக்கிக் கொண்டது.
இருப்பினும், நாடு முழுவதும் ஒரு சிலர் இக்காரை தற்போது வரை பயன்படுத்திய வண்ணம் இருக்கின்றனர்.
அதிலும், குறிப்பாக தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மாருதி சுசுகியின் பழைய தலைமுறை காரை இன்றும் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அந்தவகையிலான ஓர் காரைதான் இளைஞர்கள் சிலர் தற்போது 3 வீலர் வாகனமாக மாற்றியிருக்கின்றனர். இளைஞர்களின் இந்த முயற்சியால் நாட்டின் முதல் நீளம் குறைந்த மற்றும் வித்தியாசமான காராக அது மாறியிருக்கின்றது.
இந்த மாடிஃபிகேஷனை அந்த இளைஞர்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்காக செய்திருப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால், இந்த விளையாட்டால் அந்த கார் எக்ட்ரீம் லெவலில் உரு மாறியிருக்கின்றது. இந்த உருமாற்றம் குறித்த வீடியோவை மேக்னடோ 11 என்ற யுடியூப் தளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், வாகனத்தை உருமாற்றம் செய்ய தொடங்கியது முதல் இறுதி வரையிலான அனைத்து காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.
எனவே, அந்த வீடியோவில் உருமாற்றத்திற்கான ஒவ்வொரு அசைவும் எப்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. சரி வாருங்கள் மெயின் ஸ்டோரிக்குள் செல்லலாம்.
இளைஞர்கள் மாருதி 800 காருக்கு மாறுபட்ட தோற்றத்தை வழங்க வேண்டும் என்பதற்காக, அரை பாதியாக துண்டாக்கியுள்ளனர்.
அதாவது, பின்னிருக்கை இல்லாமல் முன்னிருக்கை மட்டுமே இருக்கின்ற வகையில் அது நறுக்கப்பட்டிருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, மூன்று சக்கர ஆட்டோ தோற்றத்தை அக்காருக்கு வழங்கும் வகையில் மூன்றாவது வீல், காரின் பின்பக்க மையப் பகுதியில் இணைக்கப்பட்டது. இதற்காக இருசக்கர வாகனத்தின் வீல் மற்றும் டயர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதுமாதிரியான தோற்றத்தை இதற்கு முன்பாக எந்தவொரு மாருதி 800 காரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேசமயம், மாருதி 800 முன் வீல் இயக்கம் கொண்ட கார் என்பதால் பின் பக்க வீல் பொருத்தப்பட்டதோடு வேலை 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மேலும், காரை பாதியாக வெட்டியதனால் அதன் இயக்கம் எந்தவொரு பாதிப்பையும் பெறவில்லை.
ஆனால், இத்தகைய மாடிஃபிகேஷன்களை இந்திய மோட்டார் வாகன சட்டம் அனுமதிப்பதில்லை. இருப்பினும், இதுமாதிரியான விநோத மாடிஃபிகேஷன்களை நம்மால் வெறுக்க முடிவதில்லை.
நான்கு சக்கர வாகனமாக இருந்து மூன்று சக்கர வாகனமாக மாறியிருக்கும் இந்த மாருதி 800 காரை, மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவிருப்பதாகவும் அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அது எப்போது மாற்றம் செய்யப்படும் என்ற தகவல்கள் அவர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், நிச்சயம் மீண்டும் புதிய மாற்றத்துடன் அதனை இணைப்போம் என கூறியிருக்கின்றனர்.
பாதுகாப்பு சிக்கல் காரணமாகவே இத்தகைய மாடிஃபிகேஷன்களுக்கு இந்திய மோட்டார் வாகன சட்டம் அனுமதி வழங்குவதில்லை.
உண்மைத் தோற்றத்தை இழந்து வேறு உருவத்திற்கு மாறும் வாகனங்களை இனம் கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகின்றது. இதன் காரணத்தினாலயே மாடிஃபிகேஷன் மற்றும் கலப்பினங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், அராய் மற்றும் ஐகேட் ஆகிய அமைப்புகளின் குறிப்பிட்ட பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் இதுமாதிரியான வாகனங்களை சாலையில் அதிகாரப்பூர்வமானதாக மாற்ற முடியும். அதாவது, இந்த அமைப்புகள் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனத்தை இந்திய சாலைக்கு உகந்ததா என பரிசோதனைக்கு மேற்கொள்ளும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அது ஆர்டிஓ பதிவிற்கு அங்கீகாரம் பெற முடியும்.
இதில், அனுமதி பெறாமல் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களை இந்திய சாலைகளில் வைத்து இயக்க முடியாது. மேலும், அனுமதி பெறாமல் அந்த வாகனத்தை இயக்கினால் காவல்துறையினர் பறிமுதல் மற்றும் அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வழிவகுக்கும்.
-
இந்தியாவை ஆட்சி செய்தது போதும்.. ஜப்பான் பக்கம் ஒதுங்குவோம்.. தமிழகத்துல இருந்து ஜப்பான் போகும் புல்லட் 350
-
டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்