Just In
- 3 min ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 2 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 6 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 7 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
Don't Miss!
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- News சீமானின் மைக் சின்னத்தை முன்வைத்து பாஜக நடிகர் எஸ்.வி.சேகர் ஆடும் 'மங்காத்தா' நாடகம்!
- Sports RR VS DC - பேட்ஸ்மேன்களை குறை சொன்ன ரிஷப் பண்ட்.. பவுலிங்கில் அந்த வீரரும் சொதப்பிவிட்டார் என குட்டு
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்தியாவில் மோதி கொள்ளும் தென்கொரிய மற்றும் ஜப்பான் கார் நிறுவனங்கள்!! க்ரெட்டாவை சமாளிக்க புது வியூகம்!
டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்கள் இணைந்து 2022ல் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டி மாடலை தயாரிக்கவுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
ஒழுங்குமுறை தாக்கல் அறிக்கை ஒன்றில், மாருதி சுசுகி 2022 முதல் கூட்டணி நிறுவனமான டொயோட்டாவின் ஆலையில் விட்டாரா பிரெஸ்ஸாவை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களில் திருத்தம் செய்வது குறித்து சந்தைக்கு அறிவித்துள்ளது.
கர்நாடகாவின் பிடாடியில் உள்ள டொயோட்டாவின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட வேண்டிய விட்டாரா பிரெஸ்ஸா இப்போது மற்றொரு மாடலாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்டோகார் இந்தியா செய்திதளம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸுக்கு ஜப்பானிய கார் தயாரிப்பாளர்களின் போட்டியாக மாடலாக இருக்கலாம்.
இந்த வகையில் வெளிவரும் மாருதி சுசுகி மற்றும் டொயோட்டாவின் முற்றிலும் புதிய நடுத்தர அளவிலான எஸ்யூவி இரு நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு வளர்ச்சியின் முதல் நிகழ்வாக இருக்கும். இந்த மாடல் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ் (டி.கே.எம்) தொழிற்சாலையில் 2022 முதல் ஆலை-2 இல் தயாரிக்கப்படவுள்ளது. இதை நிர்வகிக்க மாருதிக்கு அனுமதி வழங்கப்படும்.
டி.கே.எம்மின் பிடாடி உற்பத்தி அமைப்பு இரண்டு ஆலைகளைக் கொண்டுள்ளது. முதலாவது இன்னோவா மற்றும் பார்ச்சூனரை உருவாக்குவதற்கும், இரண்டாவது தற்சமயம் டொயோட்டா யாரிஸ் மற்றும் கேம்ரி ஹைப்ரிட் உற்பத்தியைக் கையாளுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டு சந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட டொயோட்டாவின் டிஎன்சிஏ ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் 4.3 மீட்டர் நீளத்தில் இந்த எஸ்யூவி தயாரிக்கப்படவுள்ளது. இந்த எஸ்யூவியின் மாருதி & டொயோட்டா வெர்சன்கள் நிறுவனத்திற்கு தகுந்தாற்போல் டிசைன் மொழியினை கொண்டிருக்கும்.
சுஸுகி வெர்சனில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என பேச்சுக்கள் எழுகின்றன. டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்பட வாய்ப்பில்லை. இந்த புதிய எஸ்யூவிகள் இரு ஜப்பான் நிறுவனத்திற்கும் இந்தியாவில் அவற்றின் போர்ட்ஃபோலியோவில் உள்ள மிக பெரிய வெற்றிடத்தை நிரப்ப உதவியாக இருக்கும்.
மேலும் தொழிற்சாலையை பகிர்ந்து கொள்ளவதால் தயாரிப்பு செலவும் குறையும். ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் எஸ்யூவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை தாங்களும் பெறவே விட்டாரா பிரெஸ்ஸாவில் இருந்து சுஸுகி- டொயோட்டாவின் நோக்கம் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி மீது சென்றுள்ளது.