Just In
- 11 min ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 52 min ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 3 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- 3 hrs ago ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
Don't Miss!
- News சிவப்பு நிறத்திலிருந்து "காவி"க்கு தாவிய DD.. எதிலும் காவி, இதிலேயுமே? தூர்தர்ஷனுக்கு என்னதான் ஆச்சு
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா கொடுத்த அடுத்த ஷாக்... கடும் நெருக்கடியில் மாருதி கார் நிறுவனம்!
கொரோனாவால் மூடப்பட்டு இருந்த மாருதி சுஸுகி ஆலை மீண்டும் திறக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அந்நிறுவனம் உற்பத்தியை தொடர்வதில் அடுத்த சிக்கல் எழுந்துள்ளது.
கொரோனா பிரச்னையால் கடந்த ஒன்றைரை மாதத்திற்கு மேலாக மாருதி கார் ஆலைகள் மூடப்பட்டு இருந்தது. ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, அந்நிறுவனத்தின் மானேசர் ஆலையில், கடந்த வாரம் முதல் உற்பத்தி துவங்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி குறைவான பணியாளர்களுடன் உற்பத்தி நடந்து வருகிறது.
இந்த நிலையில், அங்கு பணியாற்றும் தொழிலாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்றுமுன்தினம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான அந்த மாருதி தொழிலாளர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
கடந்த 15ந் தேதி வரை அவர் மாருதியின் மானேசர் ஆலையில் பணிக்கு வந்துள்ளார். அதன் பிறகு அவரது குடியிருப்புப் பகுதியானது கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதால், வீட்டில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மானேசர் ஆலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவருடன் உடன் பணியாற்றியவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாருதியின் மானேசர் ஆலையில் கிருமி நாசினி மூலமாக சுத்தப்படுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. அங்கு பணியாற்றிய தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால், அவருடன் பணியாற்றியவர்களுக்கும் கலக்கத்தில் உள்ளனர்.
மேலும், அந்த ஆலையில் கொரோனா தடுப்புக்காக பல்வேறு வழிகாட்டு முறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. கிருமி நாசினி மூலமும் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே ஊழியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தினசரி ஊழியர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னரே ஆலைக்குள் பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த சூழலில், ஒன்றரை மாதத்திற்கு மேலாக உற்பத்தி இல்லாமல் பெரும் இழப்பை சந்தித்த மாருதி நிறுவனத்திற்கு, ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அடுத்த சிக்கலையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
பல ஆயிரம் பேர் பணியாற்றும் மாருதி கார் ஆலையில் கொரோனா பிரச்னையால் பெரும் இழப்புகளை தொடர்ந்து கொடுத்து வருவது பணியாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் கவலையை தந்துள்ளது. இருப்பினும், ஊழியருக்கு கொரோனா பாதிப்பால் எந்த பிரச்னையும் ஏற்படாது என்று கருதுவதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?