Just In
- 49 min ago இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- 1 hr ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 2 hrs ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 3 hrs ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
Don't Miss!
- News ராமஜெயம் நினைவு நாள்.. 12 ஆண்டுகளாக விலகாத மர்மம்.. பிரச்சாரத்திற்கு இடையே மாலையுடன் போன கேஎன் நேரு!
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பிஎஸ்6 டீசல் என்ஜினுடன் 2020 மாருதி எர்டிகா சோதனை ஓட்டம்...!
மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான எர்டிகா மாடலின் பிஎஸ்6 டீசல் வேரியண்ட் சமீபத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிவந்துள்ள தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.
மாருதி சுசுகி நிறுவனம் 1.3 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்களை பிஎஸ்6 தரத்தில் தயாரிப்பு கார்களில் தற்போதைக்கு பொருத்த போவதில்லை என சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது பிஎஸ்6 இணக்கமான எர்டிகாவின் டீசல் மாடல் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மாருதி நிறுவனம் தனது கொள்கையில் இருந்து பின்வாங்கியிருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. மேலும் மாருதியின் இத்தகைய பிஎஸ்6 டீசல் வேரியண்ட்கள் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள எர்டிகா மாடலில் பிஎஸ்6 இணக்கமான 1.5 லிட்டர் இ15ஏ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிஎஸ்6 தரத்தில் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் ஃபியாட்டின் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூடுதல் என்ஜின் தேர்வை எர்டிகா மட்டுமின்றி பிஎஸ்6 எக்ஸ்எல்6 மாடலும் பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
பிஎஸ்4 தரத்தில் இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 94 பிஎச்பி பவரையும் 225 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தி வருகிறது. இந்த பிஎஸ்4 என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்நிறுவனத்தில் இருந்து பிஎஸ்6 தரத்தில் எர்டிகா மாடலின் சிஎன்ஜி வேரியண்ட் அறிமுகமாகியிருந்தது. விஎக்ஸ்ஐ என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே கூடுதல் தேர்வாக வழங்கப்பட்டுள்ள எர்டிகா மாடலின் இந்த சிஎன்ஜி வேரியண்ட்டின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.8.95 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாருதி நிறுவனம் தனது கொள்கையில் பின்வாங்கி மீண்டும் பிஎஸ்6 டீசல் வேரியண்ட்களை தயாரிக்க ஆரம்பித்திருப்பது, கூட்டணி நிறுவனங்களின் விற்பனை போட்டியை சமாளிக்க என்ற ஒற்றை காரணத்தினால் தான் இருக்கும்.
இதனால் தான் எர்டிகா மாடலுடன் விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் சியாஸ் உள்ளிட்டவற்றின் பிஎஸ்6 வெர்சன்களிலும் டீசல் வேரியண்ட்டை மாருதி நிறுவனம் வழங்கியுள்ளது.
இருப்பினும் ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசைர் உள்ளிட்ட சிறிய அளவிலான கார்களில் இந்த 1.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வு, விலை உயர்த்த வேண்டிய கட்டாயத்தால் கொண்டுவரப்படவில்லை.
Source: Gaadiwaadi
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
இந்தியாவுக்கு எதாவது பாதிப்பா? ஒரு சின்ன மிஸ்டேக் எங்க கொண்டுவந்து நிறுத்தி இருக்கு!!