Just In
- 1 hr ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 2 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 5 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
கார் உற்பத்தியை மீண்டும் துவங்குவதற்கு மாருதிக்கு சிறப்பு அனுமதி!
நிபந்தனைகளுடன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் துவங்குவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக செயல்பட்டு வரும் மாருதி கார் நிறுவனத்திற்கு ஹரியானா மாநிலம் குர்கான் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் கார் ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில், கார்கள் மற்றும் கார்களுக்கான தேவையான எஞ்சின்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், கடந்த மாத பிற்பாதியில் இருந்து மாருதியின் கார் ஆலைகளில் உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான கார்களை உற்பத்தி செய்யும் இந்த ஆலைகளில் உற்பத்தி அடியோடு முடங்கியது. இதனால், அந்நிறுவனத்திற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆலைகளில் பணிபுரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் மறைமுகமாக வேலைவாய்ப்பை பெற்று வந்தவர்களின் வாழ்வாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்த சூழலில், கடந்த 15ந் தேதி முதல் வரும் 3ந் தேதி முதல் இரண்டாம் கட்ட ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளதால், பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மாருதி கார் நிறுவனமும் பெரும் இழப்பை தொடர்ந்து சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் உள்ள ஆலைகள் நிபந்தனைகளுடன் செயல்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக, சிறப்பு அனுமதி பெற வேண்டியதும் அவசியம்.
இந்த சூழலில், குர்கான் மாவட்ட நிர்வாகத்திடம் மாருதி கார் நிறுவனம் தனது கார் ஆலைகளில் உற்பத்திப் பணிகளை துவங்குவதற்கு அனுமதிக்க விண்ணப்பம் அளித்திருந்தது. இதனை பரிசீலித்த அம்மாவட்ட நிர்வாகம், சிறப்பு அனுமதியை வழங்கி இருக்கிறது. டீம் பிஎச்பி தள உறுப்பினர் மூலமாக இந்த தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலமாக, அரசு வழிகாட்டுதல்கள் மற்றும் நிபந்தனைகளுடன் மாருதி கார் ஆலைகளில் உற்பத்திப் பணிகள் மீண்டும் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி கார் நிறுவனத்திற்கும், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
ஆனால், ஒரே ஷிஃப்ட் முறையில் 600 பேர் மட்டுமே பணியில் ஈடுபடுத்துவதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு முறைகள் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றி பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
மேலும், ஆலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு பரிசோதனைகள் செய்த பின் அனுமதிப்பது, பணி இடத்தில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும், தொழிலாளர்கள் ஆலைக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்து வசதி அல்லது ஆலையிலேயே அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
இதனிடையே, மாருதி கார் நிறுவனம் தனது மானேசர் ஆலையில் உற்பத்தியை துவங்கும் விதத்தில், பணிக்கு வரும் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் சுரங்கப் பாதை அமைப்பை உருவாக்கி இருக்கிறது. இதனால், மாருதியின் மானேசர் கார் ஆலையில் மீண்டும் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
பெத்த குழந்தையை நடுரோட்டில் இப்படியா செய்வது? கொஞ்சம் மிஸ் ஆகினால் எல்லாமே காலி!!