Just In
- 6 min ago வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- 36 min ago பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- 1 hr ago பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- 2 hrs ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
Don't Miss!
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Movies மண்டைமேல இருக்க கொண்டையை மறைங்க பாஸ்.. வாரிசு நடிகையால் வந்த வினை.. அட்ஜெஸ்ட் செய்யும் இயக்குநர்?
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு
கொரோனா சூழலை கருத்தில்கொண்டு, ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கான எளிய கடன் திட்டங்களை மாருதி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பிடியில் சிக்கி உலகம் திண்டாடி வருகிறது. அனைத்து தொழில்துறைகளும் பெரும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்த சூழலில், ஆட்டோமொபைல் துறையிலும் பெரும் பொருளாதார தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மக்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை மனதில் வைத்து கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சிறப்பு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி அண்மையில் சிறப்பு கார் கடன் திட்டங்களை அறிவித்தது. தற்போது ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து மேலும் சில சிறப்பு திட்டங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி மூலமாக தரப்படும் இந்த கார் கடன் திட்டங்கள் வாடிக்கையாளர்களின் பொருளாதார நெருக்கடிகளை பொறுத்து தேர்வு செய்து கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
முதல் திட்டத்தின்படி, லட்ச ரூபாய் கடனுக்கு மாதத் தவணையாக ரூ.899 மட்டுமே செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும் இது பொருந்தும். நான்காவது மாதத்திலிருந்து மீதமுள்ள கடன் தொகை மற்றும் வட்டி கணக்கிடப்பட்டு, சாதாரணமான வகையில் செலுத்த வேண்டி இருக்கும். தற்போதைய நிலையில் சம்பள பிரச்னை அல்லது தொழில் நசிவு இருப்பவர்களுக்கு தற்காலிக தீர்வை இந்த திட்டம் வழங்கும்.
அடுத்து பலூன் மாதத் தவணை திட்டத்தின் அடிப்படையில், லட்ச ரூபாய் கடனுக்கு மாதத் தவணையாக ரூ.1,797 செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். அதேநேரத்தில், நான்கில் ஒரு பங்கு கடன் தொகையை கடைசி மாதத் தவணையாக செலுத்த வேண்டி இருக்கும்.
மூன்றாவதாக ஸ்டெப் அப் கடன் திட்டத்தின் மூலமாக, ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு மாதத் தவணையானது உயர்த்தப்படும். அதாவது, முதல் ஆண்டு சற்று குறைவாக மாதத் தவணையை செலுத்தும் வாய்ப்பை இந்த திட்டம் வழங்கும். லட்ச ரூபாய்க்கு ரூ.1,752 வரை மாதத் தவணையாக இந்த திட்டத்தில் கணக்கிடப்படும். 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்துடன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க சொந்த கார் வாங்க திட்டம் போடுபவர்களுக்கு இந்த திட்டங்கள் நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள மாருதி கார் டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
-
ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
-
ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
-
ஊரே இந்த காரை வாங்க ஆசைப்படுது!இப்ப கையில பணம் இருந்தாலும் உடனே இதை வாங்க முடியாது!