Just In
- 1 hr ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 3 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 6 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 8 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு
கொரோனா சூழலை கருத்தில்கொண்டு, ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கான எளிய கடன் திட்டங்களை மாருதி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பிடியில் சிக்கி உலகம் திண்டாடி வருகிறது. அனைத்து தொழில்துறைகளும் பெரும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்த சூழலில், ஆட்டோமொபைல் துறையிலும் பெரும் பொருளாதார தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மக்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை மனதில் வைத்து கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சிறப்பு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி அண்மையில் சிறப்பு கார் கடன் திட்டங்களை அறிவித்தது. தற்போது ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து மேலும் சில சிறப்பு திட்டங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி மூலமாக தரப்படும் இந்த கார் கடன் திட்டங்கள் வாடிக்கையாளர்களின் பொருளாதார நெருக்கடிகளை பொறுத்து தேர்வு செய்து கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
முதல் திட்டத்தின்படி, லட்ச ரூபாய் கடனுக்கு மாதத் தவணையாக ரூ.899 மட்டுமே செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும் இது பொருந்தும். நான்காவது மாதத்திலிருந்து மீதமுள்ள கடன் தொகை மற்றும் வட்டி கணக்கிடப்பட்டு, சாதாரணமான வகையில் செலுத்த வேண்டி இருக்கும். தற்போதைய நிலையில் சம்பள பிரச்னை அல்லது தொழில் நசிவு இருப்பவர்களுக்கு தற்காலிக தீர்வை இந்த திட்டம் வழங்கும்.
அடுத்து பலூன் மாதத் தவணை திட்டத்தின் அடிப்படையில், லட்ச ரூபாய் கடனுக்கு மாதத் தவணையாக ரூ.1,797 செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். அதேநேரத்தில், நான்கில் ஒரு பங்கு கடன் தொகையை கடைசி மாதத் தவணையாக செலுத்த வேண்டி இருக்கும்.
மூன்றாவதாக ஸ்டெப் அப் கடன் திட்டத்தின் மூலமாக, ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு மாதத் தவணையானது உயர்த்தப்படும். அதாவது, முதல் ஆண்டு சற்று குறைவாக மாதத் தவணையை செலுத்தும் வாய்ப்பை இந்த திட்டம் வழங்கும். லட்ச ரூபாய்க்கு ரூ.1,752 வரை மாதத் தவணையாக இந்த திட்டத்தில் கணக்கிடப்படும். 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்துடன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க சொந்த கார் வாங்க திட்டம் போடுபவர்களுக்கு இந்த திட்டங்கள் நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள மாருதி கார் டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
35 கிமீ மைலேஜ் குடுக்கற மாருதி கார்லாம் இந்தியால இருக்குதா! விலை இதை விட ஆச்சரியப்படுத்துதே! அவ்ளோ கம்மி!