Just In
- 55 min ago பேடிஎம் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை இப்பவும் பயன்படுத்த முடியுமா? அதுல இருக்குற பணத்தை எடுப்பது எப்படி?
- 2 hrs ago எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- 8 hrs ago ஜாக்பாட்... 4,000 எலெக்ட்ரிக் கார்களுக்கு ஆர்டர் கொடுத்த பிரபல நிறுவனம்... வரிசையா களத்துல எறக்க போறாங்க...
- 8 hrs ago இத்தாலி நாட்டை சேர்ந்த டூ-வீலர் உற்பத்தி நிறுவனத்தின் பெரும் பங்கை வாங்கிய கேடிஎம்-இன் தாய் நிறுவனம்..
Don't Miss!
- Movies Vijay In Kerala - அய்யய்யோ இது என்ன விபரீதம்.. கேரளாவில் நொறுங்கிய விஜய்யின் கார்?.. ட்ரெண்டாகும் வீடியோ
- News தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு இறுதித்தேர்வு எப்போது? பள்ளி கல்வித்துறை சூப்பர் முடிவு
- Finance ஸ்மார்ட் போன் வாங்கப் போறீங்களா? ரூ.60,000க்கு கீழ் கிடைக்கும் உயர்ரக பிராண்டட் போன்கள்..
- Lifestyle இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 66W சார்ஜிங்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. ஆஃபரில் விவோ போன்.. எந்த மாடல்?
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு
கொரோனா சூழலை கருத்தில்கொண்டு, ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கான எளிய கடன் திட்டங்களை மாருதி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பிடியில் சிக்கி உலகம் திண்டாடி வருகிறது. அனைத்து தொழில்துறைகளும் பெரும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்த சூழலில், ஆட்டோமொபைல் துறையிலும் பெரும் பொருளாதார தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மக்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை மனதில் வைத்து கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சிறப்பு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி அண்மையில் சிறப்பு கார் கடன் திட்டங்களை அறிவித்தது. தற்போது ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து மேலும் சில சிறப்பு திட்டங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி மூலமாக தரப்படும் இந்த கார் கடன் திட்டங்கள் வாடிக்கையாளர்களின் பொருளாதார நெருக்கடிகளை பொறுத்து தேர்வு செய்து கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
முதல் திட்டத்தின்படி, லட்ச ரூபாய் கடனுக்கு மாதத் தவணையாக ரூ.899 மட்டுமே செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும் இது பொருந்தும். நான்காவது மாதத்திலிருந்து மீதமுள்ள கடன் தொகை மற்றும் வட்டி கணக்கிடப்பட்டு, சாதாரணமான வகையில் செலுத்த வேண்டி இருக்கும். தற்போதைய நிலையில் சம்பள பிரச்னை அல்லது தொழில் நசிவு இருப்பவர்களுக்கு தற்காலிக தீர்வை இந்த திட்டம் வழங்கும்.
அடுத்து பலூன் மாதத் தவணை திட்டத்தின் அடிப்படையில், லட்ச ரூபாய் கடனுக்கு மாதத் தவணையாக ரூ.1,797 செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். அதேநேரத்தில், நான்கில் ஒரு பங்கு கடன் தொகையை கடைசி மாதத் தவணையாக செலுத்த வேண்டி இருக்கும்.
மூன்றாவதாக ஸ்டெப் அப் கடன் திட்டத்தின் மூலமாக, ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு மாதத் தவணையானது உயர்த்தப்படும். அதாவது, முதல் ஆண்டு சற்று குறைவாக மாதத் தவணையை செலுத்தும் வாய்ப்பை இந்த திட்டம் வழங்கும். லட்ச ரூபாய்க்கு ரூ.1,752 வரை மாதத் தவணையாக இந்த திட்டத்தில் கணக்கிடப்படும். 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்துடன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க சொந்த கார் வாங்க திட்டம் போடுபவர்களுக்கு இந்த திட்டங்கள் நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள மாருதி கார் டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
-
ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
-
இனி தடுக்கி விழுந்தா கூட இவங்க ஷோரும்லதான் விழுகணும்! மாருதி, டாடாக்கு போட்டியா கடை திறக்க போறது அவங்களா!
-
அடிபட்டு வரவங்ககிட்ட இனி லட்சகணக்குல பில் போட முடியாது! தனியார் மருத்துவமனைகளுக்கு ஆப்பு வச்ச மோடி அரசு!