Just In
- 26 min ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 2 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 9 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஐசிஐசிஐ வங்கி மூலமாக சிறப்பு கார் கடன் திட்டங்கள்: மாருதி அறிவிப்பு
கொரோனா சூழலை கருத்தில்கொண்டு, ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கான எளிய கடன் திட்டங்களை மாருதி கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா பிடியில் சிக்கி உலகம் திண்டாடி வருகிறது. அனைத்து தொழில்துறைகளும் பெரும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்துள்ளன. இந்த சூழலில், ஆட்டோமொபைல் துறையிலும் பெரும் பொருளாதார தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தி உள்ளது.
மேலும், மக்களும் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர். இதனை மனதில் வைத்து கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சிறப்பு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!
அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி அண்மையில் சிறப்பு கார் கடன் திட்டங்களை அறிவித்தது. தற்போது ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து மேலும் சில சிறப்பு திட்டங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி மூலமாக தரப்படும் இந்த கார் கடன் திட்டங்கள் வாடிக்கையாளர்களின் பொருளாதார நெருக்கடிகளை பொறுத்து தேர்வு செய்து கொள்ளும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
முதல் திட்டத்தின்படி, லட்ச ரூபாய் கடனுக்கு மாதத் தவணையாக ரூ.899 மட்டுமே செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு மட்டும் இது பொருந்தும். நான்காவது மாதத்திலிருந்து மீதமுள்ள கடன் தொகை மற்றும் வட்டி கணக்கிடப்பட்டு, சாதாரணமான வகையில் செலுத்த வேண்டி இருக்கும். தற்போதைய நிலையில் சம்பள பிரச்னை அல்லது தொழில் நசிவு இருப்பவர்களுக்கு தற்காலிக தீர்வை இந்த திட்டம் வழங்கும்.
அடுத்து பலூன் மாதத் தவணை திட்டத்தின் அடிப்படையில், லட்ச ரூபாய் கடனுக்கு மாதத் தவணையாக ரூ.1,797 செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படும். அதேநேரத்தில், நான்கில் ஒரு பங்கு கடன் தொகையை கடைசி மாதத் தவணையாக செலுத்த வேண்டி இருக்கும்.
மூன்றாவதாக ஸ்டெப் அப் கடன் திட்டத்தின் மூலமாக, ஆண்டுக்கு 10 சதவீதம் அளவுக்கு மாதத் தவணையானது உயர்த்தப்படும். அதாவது, முதல் ஆண்டு சற்று குறைவாக மாதத் தவணையை செலுத்தும் வாய்ப்பை இந்த திட்டம் வழங்கும். லட்ச ரூபாய்க்கு ரூ.1,752 வரை மாதத் தவணையாக இந்த திட்டத்தில் கணக்கிடப்படும். 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் கால அவகாசத்துடன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து தப்பிக்க சொந்த கார் வாங்க திட்டம் போடுபவர்களுக்கு இந்த திட்டங்கள் நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை அருகாமையிலுள்ள மாருதி கார் டீலரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!