Just In
- 1 hr ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 1 hr ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- 1 hr ago கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- 4 hrs ago இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொரோனா நோயாளிகளை காப்பாற்ற களமிறங்கும் மாருதி சுஸுகி!
நம் நாட்டில் கொரோனா பாதித்தவர்களை காப்பதற்கான திட்டத்தில் மாருதி சுஸுகி களமிறங்க உள்ளது. இந்த நல்லெண்ண அடிப்படையிலான முயற்சி பற்றியும், அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
உலகையே முடங்க வைத்துள்ள கொரோனாவை முடங்க வைப்பதற்கு மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் முயற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால், அடங்க மறுத்து அத்துமீறி வருகிறது. இந்த சூழலில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. மேலும், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக இருப்பதும், கொரோனா பாதித்தவர்களை காப்பதற்கான வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இல்லாததும் முக்கிய விஷயமாக தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, முன்னெச்சரிக்கையாக மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக, கார் நிறுவனங்கள் தங்களது பொறியாளர்கள் துணையுடன், தங்களது ஆலைகளில் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து கொடுப்பதற்கு தயாராகி வருகின்றன. அண்மையில் மஹிந்திரா நிறுவனம் முதலாவதாக இந்த திட்டத்தில் இறங்க இருப்பதாக தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியும் மருத்துவ உபகரணங்களை தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுக்க உள்ளது தெரிய வந்துள்ளது.
கொரோனாவை எதிர்த்து போராட தேவையான சில உதவிகளை செய்து தருமாறு, கார் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மாருதி சுஸுகி தலைவர் ஆர்.சி.பர்கவா, வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயாரித்து கொடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இரண்டொரு நாளில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனால், மாருதி நிறுவனத்தின் பொறியாளர்கள் வென்டிலேட்டர் உள்ளிட்ட கருவிகளை உருவாக்கி, அந்த கருவிகள் மாருதி கார் ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டெல்லி அருகே குர்கான் மற்றும் மானேசரில் மாருதி கார் ஆலைகள் உள்ளன.
தற்போது கார் உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தீவிரத்தை பொறுத்து, மருத்துவ உபகரணங்கள் தயாரித்துக் கொடுக்கும் பணிகள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
Source: NDTV
-
கலாநிதி மாறன் மகள் காவ்யா வைத்திருக்கும் இந்த காரோட விலை 12கோடியா! ஒற்றை குடும்பத்திடம் மட்டும் இவ்ளோ கார்களா!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?