Just In
- 25 min ago ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- 1 hr ago 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- 3 hrs ago கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- 4 hrs ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
Don't Miss!
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மாருதி கார் ஆலையில் பாதுகாவலர்கள் 17 பேருக்கு கொரோனா உறுதி... தலைமறைவானதால் பதட்டம்!
மாருதி கார் ஆலையில் பணிபுரிந்து வரும் 17 பாதுகாவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. அவர்கள் தலைமறைவாக உள்ளதால், அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொரோனா தொற்று வேகம் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. ஊரடங்கு போடப்பட்டும் பிரயோஜனமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் தொழில்துறையினர் பாதுகாப்பு விதிமுறைகளுடன் ஆலைகளையும், அலுவலகங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டனர்.
இதனால், அனைத்து தொழில் நிறுவனங்களும் செயல்பட துவங்கி உள்ளன. இந்த நிலையில், ஊரடங்கு விதி தளர்வுகளை பயன்படுத்தி கடந்த மாதம் முதல் பெரும்பாலான கார் உற்பத்தி ஆலைகள் மீண்டும் திறக்கப்பட்டு உற்பத்திப் பணிகள் நடந்து வருகின்றன.
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு சொந்தமான ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள கார் ஆலையிலும் கடந்த மாதம் முதல் உற்பத்திப் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. ஆலைக்கு வரும் பணியாளர்கள் நுழைவாயிலிலேயே வைத்து கடுமையான பரிசோதனைக்கு பின்னர் பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் ஆலை பணியாளர்கள் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால், உடனடியாக அங்கு உற்பத்திப் பணிகள் நிறுத்தப்பட்டு ஆலையை சுத்திகரிக்கும் பணிகள் நடந்ததுடன், அந்த தொழிலாளர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது அங்கு பணிபுரிந்து வந்த பாதுகாவலர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களை தனிமைப்படுத்துவதற்காக போலீசார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்றபோது அங்கு அவர்கள் இல்லை.
ஆனால், கொரோனா உறுதியான பின்னர் அவர்கள் அங்கிருந்து தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக, மானேசர் இன்டஸ்ட்ரியல் செக்டார் 7 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட தலைமறைவாக உள்ள 17 பேரையும் தேடும் பணி நடக்கிறது.
இதுதொடர்பாக, மாருதி சுஸுகி நிறுவனம் அளித்துள்ள தகவலில், ஆலையின் பாதுகாப்புப் பணிகளில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தை சேர்ந்த 17 பேரும்தான் மானேசர் ஆலையின் பாதுகாப்புப் பணியில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்த தகவலும் தெரிவிக்காமல், அங்கிருந்து தலைமுறைவானர்களை தேடும் பணியில் சுகாதாரத் துறையினரும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆலையில் உற்பத்திப் பணிகளில் எதுவும் பாதிப்பில்லை என்று மாருதி சுஸுகி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல் அரசாங்க விதிகளை வைத்து தொடர்ந்து சுத்திகரிப்புப் பணிகளுடன் உற்பத்தி அங்கு நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
-
ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
-
தேர்தல் அதிகாரி சோதனை செய்யாமல் விட்ட எம்எல்ஏ காரில் சட்டவிரோதமாக இவ்வளவு விஷயங்கள் இருந்ததா?
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!