Just In
- 1 hr ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கைகொடுத்தது ஆன்லைன் திட்டம்... சரசரவென எகிறும் புக்கிங்... மாருதி ஹேப்பி அண்ணாச்சி!
தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஆன்லைன் புக்கிங் மற்றும் விற்பனை திட்டம் மாருதி கார் நிறுவனத்திற்கு கைகொடுத்துள்ளது. இதனால், அந்நிறுவனம் உற்சாகமடைந்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக, கடந்த மார்ச் 24ம் தேதி முதல் தேசிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் தேசிய ஊரடங்கு சற்றே தளர்த்தப்பட்டு வருகிறது. மேலும், தொழில் நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளை தொடரவும் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இதனை பயன்படுத்தி, கார் உள்ளிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீண்டும் வர்த்தக செயல்பாடுகளை துவங்கி இருக்கின்றனர். நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியும் ஆரஞ்ச், பச்சை மண்டலப் பகுதிகளில் உள்ள டீலர்களை திறந்துள்ளது. மேலும்,மானேசர் ஆலையிலும் கார் உற்பத்தியை துவங்கி இருக்கிறது.
எனினும், தேசிய ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளதால், வாடிக்கையாளர்கள் சகஜமாக ஷோரூம் வந்து செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்து வருகிறது. இதனை மனதில் வைத்து, ஆன்லைன் மூலமாக கார் புக்கிங் மற்றும் விற்பனை நடைமுறைகளை மேற்கொள்வதற்கான அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.
இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது, ஆன்லைன் விற்பனை துவங்கப்பட்டது முதல் இதுவரை 5,000 பேர் தனது புதிய கார்களை புக்கிங் செய்துள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. அத்துடன், மானேசர் ஆலையில் இருந்து 2,300 கார்களை டீலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால், வர்த்தக நடவடிக்கைகள் படிப்படியாக சீரடையும் என்று அந்நிறுவனம் கருதுகிறது. மேலும், நாடு முழுவதும் உள்ள தனது 2,500 சேவை மையங்கள் மற்றும் 1900 சர்வீஸ் மையங்களில் வர்த்தகப் பணிகள் துவங்கப்பட்டுவிட்டதாக மாருதி தெரிவித்துள்ளது.
தற்போது திறக்கப்பட்டுள்ள தனது 60 சதவீத விற்பனை நிலையங்கள் ஊரகப் பகுதிகளில் உள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. மெட்ரோ நகரங்களில் பல ஷோரூம்கள் கொரோனா ரெட் அலர்ட் மண்டலங்களில் உள்ளதால், திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
வரும் 17ந் தேதிக்கு பின்னர் ஊரடங்கு விதிகளில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், படிப்படியாக மெட்ரோ நகரங்களிலும் ஷோரூம்களில் வர்த்தக செயல்பாடுகள் துவங்குவதற்கான திட்டம் மாருதி வசம் உள்ளது.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...