Just In
- 9 min ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 56 min ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 1 hr ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- 1 hr ago "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Movies தங்கலான் திரைப்பட இசை..ஜிவி பிரகாஷ் என்ன சொல்றாரு பாருங்க.. சம்பவம் இருக்காம்
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
செல்டோஸ் மார்க்கெட்டிற்கு குறி... மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி!
கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்கு போட்டியாக புதிய மிட்சைஸ் எஸ்யூவியை மாருதி - டொயோட்டா கூட்டணி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய கார் சந்தையில் மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கார் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. புதிய கார்களை உருவாக்குவதற்கான முதலீடுகளை வெகுவாக குறைக்கும் வகையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. முதலீட்டை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கும், புதிய மாடல்களை உருவாக்கும் கால அளவை குறைப்பதற்கும் இது வழிவகுத்துள்ளது.
இந்த கூட்டணியில் முதல்கட்டமாக, மாருதி நிறுவனத்தின் பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா கார் நிறுவனம் ரீபேட்ஜ் செய்து முறையே க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் என்ற பெயர்களில் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவியை மாருதி - டொயோட்டா கூட்டணி உருவாக்கி வருவதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது. இதன்படி, டொயோட்டா ஆலையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு பதிலாக புதிய மிட்சைஸ் எஸ்யூவியை உற்பத்தி செய்வதற்கு மாருதி - டொயோட்டா கூட்டணி முடிவு செய்திருப்பதுடன், இதற்கான அரசு அனுமதிக்கும் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெங்களூர் அருகே பிடதியில் டொயோட்டா நிறுவனம் இரண்டு கார் ஆலைகளில் கார் உற்பத்தி செய்து வருகிறது. முதல் ஆலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் ஆகிய மாடல்களும், இரண்டாவது ஆலையில் யாரிஸ், கேம்ரி ஹைப்ரிட் ஆகிய மாடல்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புதிய மிட்சைஸ் எஸ்யூவியானது டொயோட்டாவின் பிடதி கார் ஆலையில் உற்பத்தி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
புதிதாக உருவாக்கப்படும் மிட்சைஸ் எஸ்யூவியானது மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா பிராண்டுகளில் விற்பனைக்கு செல்லும். இந்த புதிய மாடல் டொயோட்டா நிறுவனத்தின் DGNA எனப்படும் கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய மாடலில் இடம்பெற இருக்கும் எஞ்சின் குறித்த எந்த தகவலும் இல்லை. ஆனால், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது டர்போ சார்ஜர் துணையுடன் செயல்படும் பெட்ரோல் எஞ்சின் தேர்வு இடம்பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் அடுத்த ஆண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
குறிப்பு: மாதிரிக்காக டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!