Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செல்டோஸ் மார்க்கெட்டிற்கு குறி... மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புத்தம் புதிய எஸ்யூவி!
கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா கார்களுக்கு போட்டியாக புதிய மிட்சைஸ் எஸ்யூவியை மாருதி - டொயோட்டா கூட்டணி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய கார் சந்தையில் மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா கார் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. புதிய கார்களை உருவாக்குவதற்கான முதலீடுகளை வெகுவாக குறைக்கும் வகையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. முதலீட்டை குறைத்து லாபத்தை அதிகரிப்பதற்கும், புதிய மாடல்களை உருவாக்கும் கால அளவை குறைப்பதற்கும் இது வழிவகுத்துள்ளது.
இந்த கூட்டணியில் முதல்கட்டமாக, மாருதி நிறுவனத்தின் பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா கார் நிறுவனம் ரீபேட்ஜ் செய்து முறையே க்ளான்ஸா மற்றும் அர்பன் க்ரூஸர் என்ற பெயர்களில் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்தக்கட்டமாக புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவியை மாருதி - டொயோட்டா கூட்டணி உருவாக்கி வருவதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது. இதன்படி, டொயோட்டா ஆலையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு பதிலாக புதிய மிட்சைஸ் எஸ்யூவியை உற்பத்தி செய்வதற்கு மாருதி - டொயோட்டா கூட்டணி முடிவு செய்திருப்பதுடன், இதற்கான அரசு அனுமதிக்கும் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெங்களூர் அருகே பிடதியில் டொயோட்டா நிறுவனம் இரண்டு கார் ஆலைகளில் கார் உற்பத்தி செய்து வருகிறது. முதல் ஆலையில் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, ஃபார்ச்சூனர் ஆகிய மாடல்களும், இரண்டாவது ஆலையில் யாரிஸ், கேம்ரி ஹைப்ரிட் ஆகிய மாடல்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், மாருதி - டொயோட்டா கூட்டணியில் உருவாகும் புதிய மிட்சைஸ் எஸ்யூவியானது டொயோட்டாவின் பிடதி கார் ஆலையில் உற்பத்தி செய்வதற்கு முடிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
புதிதாக உருவாக்கப்படும் மிட்சைஸ் எஸ்யூவியானது மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா பிராண்டுகளில் விற்பனைக்கு செல்லும். இந்த புதிய மாடல் டொயோட்டா நிறுவனத்தின் DGNA எனப்படும் கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய மாடலில் இடம்பெற இருக்கும் எஞ்சின் குறித்த எந்த தகவலும் இல்லை. ஆனால், 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அல்லது டர்போ சார்ஜர் துணையுடன் செயல்படும் பெட்ரோல் எஞ்சின் தேர்வு இடம்பெற வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் அடுத்த ஆண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
குறிப்பு: மாதிரிக்காக டொயோட்டா அர்பன் க்ரூஸர் எஸ்யூவி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
சீனா, ஜப்பான்லாம் ஓரமா போய் விளையாடு... இந்தியாவை பாத்து உலக நாடுகள் எல்லாம் மூக்கின் மேல் விரல் வைக்க போகுது!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!