Just In
- 3 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 3 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 4 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 4 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சூப்பர்... இந்திய ரயில்வே - மாருதி சுஸுகி கூட்டாக இணைந்து செய்த நல்ல காரியம்... என்னனு தெரியுமா?
இந்திய ரயில்வே மற்றும் மாருதி சுஸுகி நிறுவனங்கள் கூட்டாக சேர்ந்து பணியாற்றியதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைத்துள்ளன.
இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி திகழ்கிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களை இந்திய வாடிக்கையாளர்கள் விரும்புவதற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், மைலேஜ் மற்றும் குறைவான விலை ஆகியவை மிகவும் முக்கியமானவை. இதன் காரணமாகதான் மாருதி சுஸுகி நிறுவனத்தால் இங்கு நம்பர்-1 ஆக இருக்க முடிகிறது.
இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு, ஹரியானா மாநிலம் குர்கான், மனேசர் உள்ளிட்ட இடங்களில் கார் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இதில், குர்கான் ஆலையில், வேகன் ஆர், எர்டிகா, எக்ஸ்எல்-6, எஸ்-க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா, இக்னிஸ் மற்றும் ஈக்கோ ஆகிய கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
அதே சமயம் மனேசர் ஆலையில், ஸ்விஃப்ட், சியாஸ், பலேனோ மற்றும் செலிரியோ ஆகிய கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அனைத்து தொழிற்சாலைகளிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ஒரு ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் கார்களை சப்ளை செய்து வருகிறது.
கார்களை சப்ளை செய்வதற்கு லாரிகள் மட்டுமல்லாது, இந்திய ரயில்வேயின் உதவியையும் மாருதி சுஸுகி நிறுவனம் பெற்று வருகிறது. இந்த வகையில் கடந்த 6 ஆறு ஆண்டுகளில் இந்திய ரயில்வே மூலம் 6.70 லட்சம் கார்களை அனுப்பியுள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை மாருதி சுஸுகி இன்று (ஜூலை 8ம் தேதி) வெளியிட்டது.
இந்த செயல்முறையின் மூலம் 3,000 மில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது. இது இந்த செயல்முறையின் முக்கியமான பலனாக பார்க்கப்படுகிறது. இதுதவிர 100 மில்லியன் லிட்டர் எரிபொருளும் சேமிக்கப்பட்டுள்ளது. இந்தியா எரிபொருளுக்கு பெரும்பாலும் வெளிநாடுகளைதான் நம்பியுள்ளது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் இறக்குமதியின் மூலமாகவே பூர்த்தியாகிறது. எனவே இதுவும் ஒரு நல்ல விஷயம்தான். அத்துடன் தேசிய நெடுஞ்சாலைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரி டிரிப்களும் தவிர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக ரயில்வே மூலமாக கார்கள் அனுப்பப்பட்டதில் இருந்து, தற்போது வரையிலான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாருதி சுஸுகி நிறுவனம் ரயில் போக்குவரத்து மூலம் கார்களை அனுப்புவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்படி கடந்த நிதியாண்டில், மாருதி சுஸுகி நிறுவனம் 1.78 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்களை இந்திய ரயில்வே மூலம் அனுப்பியுள்ளது. முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதம் அதிகமாகும்.
சாலை மார்க்கமாக லாரிகளில் கார்களை அனுப்புவதை காட்டிலும், இந்திய ரயில்வே மூலமாக கார்களை அனுப்புவதில் ரிஸ்க் குறைவு எனவும் கூறப்படுகிறது. அதாவது சாலை விபத்து போன்ற அபாயங்களை தவிர்த்து கொள்ள முடியும். எனவே இந்திய ரயில்வே மூலம் கார்களை அனுப்புவதில், மாருதி சுஸுகி நிறுவனம் அதிக ஆர்வம் காட்டுகிறது.
-
ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
-
இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?