Just In
- 49 min ago ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- 1 hr ago ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- 3 hrs ago 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- 8 hrs ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
Don't Miss!
- Movies படு மோசமான படுக்கையறை காட்சி.. ரஜினியின் ரீல் மகளை திட்டிதீர்க்கும் பேன்ஸ்!
- News எடப்பாடி பேசுவதை விடுங்க!ரிசல்ட்டுக்கு முன்பே அதிமுக பெரிய தலை போட்டுடைத்த மேட்டர்!இரட்டை இலை பதறுதே
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
புனே அருகே கொரோனா மருத்துவமனையை அமைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!
புனே அருகே 1,500 படுக்கைகளுடன் தற்காலிக கொரோனா மருத்துவமனையை அமைத்து தர உள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சொகுசு கார் சந்தையில் முதலிடம் வகிக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலம், புனே அருகே சகன் பகுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளையும், ஒத்துழைப்பையும் கார் நிறுவனங்கள் பெரிய அளவில் வழங்கி வருகின்றன.
அந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, சகன் கெத் பகுதியில் உள்ள மலன்ச் இன்கலே என்ற கிராமத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்காக தற்காலிக மருத்துவமனையை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த புதிய கொரோனா மருத்துவமனையை அமைக்க உள்ளது. இந்த மருத்துவமனை 1,500 படுக்கை வசதியை கொண்டதாக இருக்கும். மஹாராஷ்டிர வீட்டு வசதி வாரிய மேம்பாட்டு வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இந்த மருத்துவமனை அமைத்து தரப்பட உள்ளது. இந்த கட்டடத்தில் 374 அறைகள் உள்ளன.
இந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தனிமைப்படுத்துவதற்கான இடமாகவும், சிகிச்சை அளிக்கும் மையமாகவும் பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டமைக்கப்படும்.
இந்த கொரோனா மருத்துவமனையை அமைக்கும் பணிக்கு தேவையான பொருட்களை எடுத்து வருவதற்கான போக்குவரத்து செலவையும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏற்க உள்ளது.
மேலும், புனே பகுதியில் உள்ள கிராண்ட் மெடிக்கல் பவுண்டேசன் கீழ் செயல்படும் ரூபி ஹால் கிளினிக் என்ற மருத்துமனைக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கப்பட்டு நிலைமை சீரான பின்னர், தற்காலிக மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும், கெத் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்படும். அதேபோன்று, படுக்கைகள் உள்ளிட்ட பர்னிச்சர்கள் அங்குள்ள பழங்குடி மாணவர் விடுதிக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுஸுகி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளன. இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்காலிக மருத்துவமனையை அமைத்து தர முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?