Just In
- 37 min ago இந்தியாவில் சுஸுகி 2-வீலர்கள் உற்பத்தி 80 இலட்சத்தை கடந்தது!! தொழிற்சாலை எங்கு உள்ளது தெரியுமா?
- 2 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- 3 hrs ago தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- 3 hrs ago இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புனே அருகே கொரோனா மருத்துவமனையை அமைக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!
புனே அருகே 1,500 படுக்கைகளுடன் தற்காலிக கொரோனா மருத்துவமனையை அமைத்து தர உள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சொகுசு கார் சந்தையில் முதலிடம் வகிக்கிறது. மஹாராஷ்டிரா மாநிலம், புனே அருகே சகன் பகுதியில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளையும், ஒத்துழைப்பையும் கார் நிறுவனங்கள் பெரிய அளவில் வழங்கி வருகின்றன.
அந்த வகையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, சகன் கெத் பகுதியில் உள்ள மலன்ச் இன்கலே என்ற கிராமத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்காக தற்காலிக மருத்துவமனையை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த புதிய கொரோனா மருத்துவமனையை அமைக்க உள்ளது. இந்த மருத்துவமனை 1,500 படுக்கை வசதியை கொண்டதாக இருக்கும். மஹாராஷ்டிர வீட்டு வசதி வாரிய மேம்பாட்டு வளாகத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தில் இந்த மருத்துவமனை அமைத்து தரப்பட உள்ளது. இந்த கட்டடத்தில் 374 அறைகள் உள்ளன.
இந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் தனிமைப்படுத்துவதற்கான இடமாகவும், சிகிச்சை அளிக்கும் மையமாகவும் பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டமைக்கப்படும்.
இந்த கொரோனா மருத்துவமனையை அமைக்கும் பணிக்கு தேவையான பொருட்களை எடுத்து வருவதற்கான போக்குவரத்து செலவையும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏற்க உள்ளது.
மேலும், புனே பகுதியில் உள்ள கிராண்ட் மெடிக்கல் பவுண்டேசன் கீழ் செயல்படும் ரூபி ஹால் கிளினிக் என்ற மருத்துமனைக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கப்பட்டு நிலைமை சீரான பின்னர், தற்காலிக மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும், கெத் பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு வழங்கப்படும். அதேபோன்று, படுக்கைகள் உள்ளிட்ட பர்னிச்சர்கள் அங்குள்ள பழங்குடி மாணவர் விடுதிக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மாருதி சுஸுகி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் செயற்கை சுவாசக் கருவி (வென்டிலேட்டர்) தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக இறங்கி உள்ளன. இந்த நிலையில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தற்காலிக மருத்துவமனையை அமைத்து தர முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹோண்டா தயாரித்த மின்சார காரா இது! பெரிய பெரிய சூப்பர் கார் பிராண்டுகளே இதோட ஸ்டைலுக்கு முன்னாடி மண்டியிடனும்!
-
ஸ்கோடா கார்களை வாங்க ஆள் இல்ல!! கம்மியான விலையில் கார்களை விற்பனை செய்தும் பயன் இல்லை!
-
மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?