Just In
- 1 hr ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 1 hr ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 1 hr ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- 2 hrs ago பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
Don't Miss!
- News கொக்கரிக்கிறார் சிவக்குமார்.. பேசாமலிருக்கிறார் ஸ்டாலின்.. காங்கிரஸ் வந்தாலே பிரச்சனை.. யார் பாருங்க
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கொரோனாவாவது ஒண்ணாவது... ஹெக்டர் ப்ளஸ் அறிமுகத்தில் திடமாக இருக்கும் எம்ஜி!
கொரோனா பிரச்னை தலை விரித்தாடும் நிலையில், ஹெக்டர் ப்ளஸ் மற்றும் க்ளோஸ்டர் எஸ்யூவிகள் திட்டமிட்டபடி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பிரச்னையால் வாகன நிறுவனங்கள் தவித்து வருகின்றன. மிகப்பெரிய அளவிலான முதலீடுகளை செய்துள்ள அந்த நிறுவனங்கள் கொரோனா பிரச்னை ஊரடங்கால் ஆலைகளை மூடி வைத்துள்ளன. இதனால், நாள் தோறும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை ஒவ்வொரு நிறுவனமும் சந்தித்து வருகின்றன.
அதேநேரத்தில், கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் அரசாங்கம் மற்றும் சிகிச்சை மையங்களுக்கு தேவையான விஷயங்களில் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றன. அதேபோன்று, வாடிக்கையாளர் நலன் கருதியும் பல்வேறு கூடுதல் கால அவகாச திட்டங்களையும் அறிவித்துள்ளன.
கொரோனா பிரச்னையால் உலகின் பிரபலமான வாகன கண்காட்சிகள், விளையாட்டு மற்றும் மோட்டார் பந்தயங்கள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. மேலும், புதிய கார், பைக் அறிமுகங்களையும் ஒத்தி வைத்து வருகின்றன.
இந்த நிலையில், எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய கார்களை அறிமுகத்தை திட்டத்தில் எந்த மாறுதல்களும் இருக்காது என்று தெரிவித்துள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி மாதம் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த ஹெக்டர் ப்ளஸ் மற்றும் க்ளோஸ்டர் எஸ்யூவி மாடல்களை ஏற்கனவே திட்டமிட்டது போன்று குறித்த காலத்தில் களமிறக்கவும் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே திட்டமிட்டது போன்று அடுத்த மூன்று மாதங்களில் ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியும், நவம்பரில் க்ளோஸ்டர் எஸ்யூவியும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக எம்ஜி மோட்டார் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில், ஹெக்டர் ப்ளஸ் எஸ்யூவியானது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹெக்டர் 5 சீட்டர் எஸ்யூவியின் 6 அல்லது 7 சீட்டர் மாடல்களாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இது மஹந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் விரைவில் எதிர்பார்க்கப்படும் டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவிகளுக்கு போட்டியாக இருக்கும்.
அதேபோன்று, மேக்சஸ் டி90 எஸ்யூவியின் ரீபேட்ஜ் மாடலாக ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட எம்ஜி க்ளோஸ்டர் எஸ்யூவியும் நவம்பரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடலானது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு நிகரான சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
இதுதவிர்த்து, ஜி10 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் புத்தம் புதிய கார் மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மாடலானது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்ப உள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.
கார் அறிமுகம் மட்டுமில்லை, இந்த மோசமான சூழலில், பணியாளர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படாது என்ற உறுதியையும் எம்ஜி மோட்டார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், குறைவான விலையில் வென்டிலேட்டர் என்ற செயற்கை சுவாச கருவியை உருவாக்குவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
-
35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!