Just In
- 15 min ago ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- 1 hr ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- 3 hrs ago ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- 3 hrs ago இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணி கொண்டு போலாம்!
Don't Miss!
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போலீசார் மீதான அக்கறையில் எம்ஜி மோட்டார் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!
கொரோனா தடுப்புப் பணியில் இரவு பகல் பாராமல் உழைத்து வரும் போலீசார் மீதான அக்கறையில், ஒரு சூப்பர் அறிவிப்பை எம்ஜி மோட்டார் அறிவித்துள்ளது.
கொரோனா பிரச்னை சினிமாவை விஞ்சிய நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருப்பதுடன், அத்தியாவசியப் பணிகளை தவிர்த்து பிற அனைத்தும் பொது முடக்கத்தின் கீழ் செயலற்று கிடக்கின்றன.
இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணியை மருத்துவப் பணியாளர்களுக்கு இணையாக போலீசாரும் இணைந்து நிற்கின்றனர். ஊரடங்கு காலத்தில் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, மேலும் பரவாத வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு பல்வேறு வகையிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில், கொரோனா தடுப்புப் பணிகளில் கார் நிறுவனங்கள் முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகின்றன. அந்த வகையில், கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் மீதான அக்கறையில் எம்ஜி மோட்டார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் போலீசார் பயன்பாட்டில் உள்ள 4,000 வாகனங்களளை சுத்தப்படுத்தி, கிருமி நீக்கம் செய்து தருவதாக அறிவித்துள்ளது. போலீசாரின் வாகனங்களின் வெளிப்புறமும், உட்புறமும் கிருமி நீக்க முறைகளின்படி, சுத்தப்படுத்தப்படும்.
அதேபோன்று, வாகனங்களின் கைப்பிடிகள், ஏசி சிஸ்டம், உட்புறத்தில் கை வைக்கும் பகுதிகள் அனைத்துமே சுத்தப்படுத்தி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, கொரோனா தடுப்புப் பணியில் தனது பங்களிப்பை அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது எம்ஜி மோட்டார்.
கார் கழுவுதல், உட்புறத்தில் கிருமி நாசினி மூலமாக சுத்தபடுத்தும் பணிகள் கட்டணமில்லாமல் போலீசாரின் வாகனங்களுக்கு செய்து தரப்படும் என்று எம்ஜி மோட்டார் தெரிவித்துள்ளது. இன்று முதல் இந்த பணியை துவங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதால், நல்லெண்ண அடிப்படையில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது நிச்சயம் வரவேற்கத்தக்க விஷயமாகவே இருக்கும்.
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!
-
அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!