Just In
- 1 hr ago 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- 3 hrs ago வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- 3 hrs ago கேரளாவுக்கு சென்றால் இந்த சொர்க்கத்தை மட்டும் அனுபவிக்காம வந்துடாதீங்க!! வெறும் ரூ.20இல் கிடைக்குது!
- 4 hrs ago அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
Don't Miss!
- Movies ஹீரோவான லோகேஷ் கனகராஜ்.. கமல் ஹாசன் வெளியிட்ட சூப்பர் அப்டேட்.. இது லிஸ்ட்லயே இல்லையே
- News வாய்தா மேல் வாய்தா! நடிகை விஜயலட்சுமி ஏப்ரல் 2ல் ஆஜராக அவகாசம்.. சீமான் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Education இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டத்தில் பங்கேற்க ஆசையா...!!
- Sports IPL - சிஎஸ்கேவில் களமிறங்கிய வங்கதேச புலி.. நேற்று காயமடைந்த நிலையில், இன்று சென்னைக்கு வந்தார்
- Technology தட்டித்தூக்கும் விலை.. AMOLED டிஸ்பிளே.. 5ATM ரெசிஸ்டன்ஸ்.. 14 நாட்கள் பேக்கப்.. எந்த மாடல்?
- Finance தேர்தல் பத்திரம்: தனிநபர்கள் நன்கொடை செய்த ரூ.358.91 கோடி.. முதல் இடத்தில் யார் தெரியுமா..?
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
செகண்ட் ஹேண்ட்ல கார் வாங்க போறீங்களா? அதுக்கு முன்னாடி இந்த வீடியோவை கொஞ்சம் பாத்துடுங்க!
பழைய கார்களில் இருக்கும் சிக்கலை விளக்குகின்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில், புது முக கார்களுக்கு இணையான வரவேற்பை செகண்ட் ஹேண்ட் கார்களும் பெற்று வருகின்றன. பழைய மாடல்கள் அதிக மைலேஜை தருவதாலும், அவற்றின் விலை மிகக் குறைந்தளவில் இருப்பதாலும் இந்தியர்கள் மத்தியில் செகண்ட் ஹேண்ட் கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. ஆனால், செகண்ட் ஹேண்டில் வாங்கப்படும் பழைய கார்களில் பாதுகாப்பு என்பது கேள்விக் குறிதான்.
இதை உறுதிச் செய்கின்ற வகையிலான வீடியோ ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை 4டிரைவ் டைம் எனும் யுடியூப் தளம் வெளியிட்டிருக்கின்றது. இந்த வீடியோவில், பழைய மற்றும் மாடர்ன் கார்கள் இரண்டும் மோதி விபத்தைச் சந்திக்கின்ற மாதிரியான காட்சிகள் அடங்கியிருக்கின்றன. இதன்மூலம் இரு கார்களுக்கு இடையேயான பாதுகாப்பு வித்தியாசங்கள் தெரியவந்துள்ளன.
இதற்காக, முதலில் 1992 நிஸ்ஸான் சுரு மற்றும் 2016 நிஸ்ஸான் வெர்ஷா செடான் ஆகிய இரு கார்களும் கிராஷ் டெஸ்டில் ஈடுபடுத்தப்பட்டன. இதில், பழைய மாடல் நிஸ்ஸான் சுருவின் முன் பக்கம் முழுமையாக சிதிலமடைந்தது. இத்துடன், அக்காரின் ஏ பிள்ளர் மற்றும் ஓட்டுநரின் பக்கவாட்டு பகுதி காகிதத்தைப் போல் அடுக்கடுக்காக மடிந்து காணப்பட்டது. மேலும், அக்காரில் நிலை நிறுத்தப்பட்டிருந்த டம்மிக்கும் எதிர்பாராத வகையிலான சேதம் ஏற்பட்டிருந்தது.
டம்மியின் இத்தகைய சேசத்திற்கு காரில் ஏர் பேக் இல்லாததே முக்கிய காரணம். அதேசமயம், இதனுடன் மோதிய நிஸ்ஸான் வெர்ஷா செடான் ரக காரை பார்த்தோமேயானால், அக்காரில் வைக்கப்பட்டிருந்த டம்மி பெரியளவில் சேதத்தைச் சந்திக்கவில்லை. காரில் பொருத்தப்பட்டிருந்த ஏர் பேக்குகள் சேதத்தில் இருந்து காப்பாற்றின. இதேபோன்று, நிஸ்ஸான் சுரு உடன் ஒப்பிடுகையில் நிஸ்ஸான் வெர்ஷா செடான் சற்று குறைந்தளவிலேயே உருக்குலைந்து காணப்படுகின்றது. ஆனால், நிஸ்ஸான் சுரு நிலை படு மோசமானதாக இருந்தது.
நிஸ்ஸான் சுருவின் இந்த நிலைக்கு அப்கிரேட் ஆகாததே முக்கிய காரணமாக உள்ளது. இதை வைத்துதான் பழைய காரைக் காட்டிலும் புதிய மாடல் கார்கள் அதிக பாதுகாப்பு நிறைந்தவை என கூறப்படுகின்றன. இதனை நிஸ்ஸான் சுரு மற்றும் 2016 நிஸ்ஸான் வெர்ஷா செடான் ஆகிய இரு கார்களின் கிராஷ் டெஸ்டை வைத்து மட்டுமே நாங்கள் கூறிவிடவில்லை.
இக்கார்களைத் தொடர்ந்து, 1959 செவ்ரோலே பெல் ஏர் மற்றும் 2009 செவ்ரோலே மலிபு செடான் ஆகிய கார்களின் மோதல் பரிசோதனைக்கு பின்னர் கிடைத்த தகவலை வைத்தும்தான் அதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.
இந்த கார்களிலும் பழைய மாடலைக் காட்டிலும் புதிய மாடல் சற்று குறைந்த சேதத்தையும், சற்று கூடுதல் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் இருந்தது.
இவற்றை த்தொடர்ந்து, 1998 மாடல் ஃபோர்டு ஃபியஸ்டா ஹேட்ச்பேக் மற்றும் புதிய தலைமுறை ஃபோர்டு ஃபியஸ்டாவும் கிராஷ் டெஸ்டில் ஈடுபடுத்தப்பட்டது. இக்கார்கள் மணிக்கு 64 கிமீ எனும் வேகத்தில் மோதலுக்கு உட்படுத்தப்பட்டன.
இதில், 1998 மாடல் முழுவதுமாக உருக்குலைந்தது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், உடற்கூடு முழுவதுமாக அப்பளம் போல் நொறுங்கியது. டிரைவரின் பக்கம் அடையாளம் காண முடியாத வகையில் சிதைந்தது.
இவ்வாறு பல ஆராய்ச்சிகளை முன் வைத்தை பழைய மாடலைக் காட்டிலும் புதிய மாடல் கார்கள் பயணத்தின்போது அதிக பாதுகாப்பை வழங்கும் என வல்லுநர்கள் மிக உறுதியாக தெரிவிக்கின்றனர். நாங்களும் அதையேதான் கூறுகின்றோம்.
பழைய வாகனங்களின் இந்த நிலைக்கு உடற்கூடுகள் மிக மெல்லிய இழை எஃகு தகட்டால் உருவாக்கப்பட்டதும், ஏர் பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.
எனவேதான், பழைய வாகனங்களை வாங்கச் செல்லும்போது சற்று கூடுதல் கவனம் தேவை என கூறப்படுகின்றது.
சரி, புதிய மாடலில் மட்டும் எப்படி பாதுகாப்பு அம்சங்கள் அதிகம் இடம்பெறுகின்றன என்ற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். அதற்கான பதில் பின்வருமாறு,
பொதுவாக, வாகன உற்பத்தி நிறுவனங்கள், அதன் புகழ்வாய்ந்த மாடல்களை ஒவ்வொரு வருடமும் அப்கிரேட் செய்து அதனை மீண்டும் புதிய மாடலாக சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்கின்றன. இந்த அப்கிரேஷன் மூலம் முந்தைய வெர்ஷனில் இருக்கும் குறைகளை நீக்குவதே அதன் முதல் இலக்காகும். இத்துடன், சந்தையின் தேவைக்கேற்ப புதிய அம்சங்கள் சிலவும் கூடுதலாக சேர்க்கப்படும்.
அந்தவகையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்கின்ற அம்சத்திற்கே இதில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு இந்தியாவில் அதிகம் பாதுகாப்பு நிறைந்த காராக விற்பனைக்கு வந்த கார்தான் டாடா நெக்ஸான்.
இது குளோபல் என்சிஏபி நடத்திய கிராஷ் டெஸ்டில் உச்சபட்ச மதிப்பான 5 நட்சத்திரத்தைப் பெற்றது. இதேபோன்று, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் டாடா அல்ட்ராஸ் ஆகிய கார்களும் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.