Just In
- 27 min ago சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- 1 hr ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 1 hr ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 2 hrs ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
Don't Miss!
- News பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் கேள்வி
- Movies மொத்தம் ரூ 7 கோடி.. ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
"ஸ்பீடு கன்ட்ரோல் பண்ண முடியலை".. சாலையோரம் நின்ற கார்களை வந்த வேகத்தில் அடித்து தூக்கிய பிரபலம்...
அதி-திறன் வாய்ந்த காரின் ஸ்பீடை கன்ட்ரோல் பண்ண முடியாமல் சாலையோரத்தில் இருந்த கார் மற்றும் பாதசாரிகளை உலகறிந்த பிரபலம் ஒருவர் காரினால் அடித்து தூக்கியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.
உலக புகழ்வாய்ந்த கார் தயாரிக்கும் நிறுவனங்களில் போர்ஷேவும் ஒன்று. இது சொகுசு மற்றும் திறன் மிகுந்த கார்களை தயாரிப்பதில் பெயர்போன நிறுவனமாக உள்ளது. இதனாலேயே இந்நிறுவனத்தின் கார்களுக்கு உலக பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. அதிலும், இந்நிறுவனத்தின் சூப்பர் கார்களுக்கு ஏகபோகமான வரவேற்பு உலகம் முழுவதிலும் காணப்படுகின்றது.
அந்தவகையில், அதிக வரவேற்பைப் பெற்ற மாடலாகவும், அதி-திறன் வாய்ந்த மாடலாகவும் ஃபோர்ஷே கர்ரேரா ஜிடி இருக்கின்றது.
இந்த காரை ஓர் முக்கிய புள்ளி அதிக வேகத்தில் இயக்கி, கட்டுப்படுத்த முடியாமல் விபத்தை ஏற்படுத்தியிருக்கின்றார். இதனால் பல கோடி மதிப்புள்ள அந்த கார் அப்பளம்போல் நொறுங்கியிருக்கின்றது.
அவர் வேறு யாரும் அல்ல, கோல்ட்ரஷ் ரேலி நிறுவனர் பெஞ்சமின் பென் சென்தான். இவர் செய்த அதி பயங்கர விபத்தின் காரணமாக அவரடைய கார் மட்டுமின்றி ஏறக்குறைய 12 கார்கள் மற்றும் 1 பாதசாரி கடுமையாக பாதிப்படைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துகுறித்து வெளியாகியிருக்கும் புகைப்படத்தை பார்க்கும்போதே தெரிகின்றது, இந்த சம்பவம் எந்தளவிற்கு கோரமானாதாக இருந்திருக்கும் என.
பெஞ்சமின் விபத்தை ஏற்படுத்தியபோது மது போதையில் இருந்ததாக கூறப்படுகின்றது. போலீஸாரும் இதையே உறுதி செய்துள்ளனர்.
ஏற்கனவே அதி சக்தி வாய்ந்த காராக இருக்கும் போர்ஷே கர்ரேரா ஜிடி காரை, கம்பேல்லா கார் ட்யூனிங் மூலம் கூடுதல் சக்தி வாய்ந்த மாடலாக பெஞ்ஜமின் மாற்றியிருக்கின்றார்.
இதனால், முன்பிருந்ததைக் காட்டிலும் தற்போது பல மடங்கு அதிக சக்தியை வெளிப்படுத்தும் ஓர் மாடலாக அது உருவாகியிருக்கின்றது. இதுவே விபத்து ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இவர் இதைவிட அதிக திறனுடைய கார்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இருப்பினும், இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.
சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் அன்றைய தினம் (ஏப்ரல் 7ம் தேதி) பொது சாலையில் பெஞ்ஜமின் அதிவேகத்தில் பறந்துள்ளார். அப்போது அவர் மது போதையில் இருந்த காரணத்தால், காரின் அதிக திறனை கன்ட்ரோல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் மீது கர்ரேரா ஜிடி, கண் மூடித்தனமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. இவருக்கு சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்கள் ஏராளம் என்பதால், அவரின் ரசிகர்கள்கூட விபத்து சம்பவம் காரணமாக அவரைத் திட்டி தீர்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.
33 வயதான பென்ஜமின், பல அதி வேக கார்களுக்கு சொந்தக்காரராக இருந்து வருகின்றார். இவரிடத்தில் மிராஜ் ஜிடி போன்று பல்வேறு மிக மிக அதிக விலையுடைய மற்றும் திறன் கொண்ட கார்கள் இருக்கின்றன. அதில் ஒன்றான போர்ஷே கர்ரேராதான் தற்போது விபத்தில் உருக்குலைந்து நிற்கின்றது. இந்த விபத்தினால், போர்ஷே கர்ரேரா கார்தானா என்ற கேள்வியை எழுப்புமளவிற்கு அந்த கார் சேதமடைந்திருக்கின்றது.
கார்கள்மீது அதிகம் ஆர்வம் கொண்டிருப்பதன் காரணத்தினாலயே இவரிடத்தில் ஏரளமான கார்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி அவரிடத்தில் இருக்கும் பல கார்கள் அதன் உண்மை திறனைக் காட்டிலும் கூடுதல் திறன் வழங்கும் வகையில் ட்யூன்-அப் செய்யப்பட்டவையாக இருக்கின்றன.
View this post on InstagramA post shared by TURNPIKE RACING LEAGUE®️ (@trlrace) on
இதனாலயே அவை பொது சாலையில் இயக்குவது சற்று கடினமான ஒன்றாக இருக்கின்றன. ஆனால் பெஞ்ஜமின் ரேலி போன்ற அதிவேக கார் போட்டியில் பங்கேற்றவர் என்பதால் இதுபோன்ற அதி வேக திறனுடைய கார்களை அவர் மிகவும் அசால்டாக கையாளுவார். இருப்பினும் மதுபோதையில் இருந்த காரணத்தினால் விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார்.
Source: indianauto
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!