Just In
- 1 hr ago குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- 1 hr ago வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்! இந்த காருக்கா இப்படி ஒரு நிலைமை?
- 2 hrs ago பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!
- 3 hrs ago ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
Don't Miss!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Movies Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாகன உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கு ஆறுதல் கொடுத்த ஐஆர்டிஏ!
கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலை குலைந்து போயுள்ள வாகன நிறுவனங்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் ஆறுதல் தரும் செய்தியை காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) வழங்கி இருக்கிறது.
கொரோனா பாதிப்பால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சுருண்டு கிடக்கின்றன. தற்போதைய சூழலில் வர்த்தகம் எப்போது சீராகும், பொருளாதார இழப்புகளை எப்படி சரி செய்வது என்ற குழப்பத்தில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும், டீலர்களும் உள்ளனர்.
இந்த நிலையில், ஆண்டுதோறும் நிதி ஆண்டு துவங்கும்போது வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த நிதி ஆண்டுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை உயர்த்துவதற்கு ஐஆர்டிஏ அமைப்பு திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பை சுட்டிக் காட்டி, 2020-21ம் நிதி ஆண்டில் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று சியாம் அமைப்பு ஐஆர்டிஏ அமைப்பிடம் வேண்டுகோள் வைத்திருந்தது.
இதனை பரிசீலித்த ஐஆர்டிஏ அமைப்பு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை உயர்த்தப்பட மாட்டாது என்று சியாம் அமைப்புக்கு உறுதி அளித்துள்ளது. அனைத்து வகை வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் இந்த நிதி ஆண்டில் உயர்த்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது உள்ள பிரிமீயம் தொகையே தக்க வைக்கப்படும்.
இதனால், வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும், வாகன உரிமையாளர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இல்லையெனில், வாகன உரிமையாளர் தலையில் இந்த கூடுதல் சுமை விழும். அத்துடன், புதிய வாகனங்கள் வாங்குவோரும் தள்ளிப்போடும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்த்தப்பட்டால், அது பெரும் சுமையாக, குறிப்பாக, புதிய வாகனங்கள் வாங்குவோருக்கு அதிக சுமையை ஏற்படுத்தும். இந்த நிலையில், இந்த முடிவு வரவேற்கப்படுவதாகவும், ஐஆர்டிஏவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சியாம் அமைப்பு தெரிவித்துள்ளது. இது நிச்சயம் வாகன உரிமையாளர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கும்.
-
நானோ காரை நமக்கு தெரியும்! ஆனா இது அது கிடையாது... டாடா உருவாக்கிய இந்த கார் கடைசி வர வெளியே வராமல் போய்டுச்சே
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!
-
செஞ்சது என்னமோ சின்ன உதவிதான்.. ஆனா அந்த சமையல்கார அம்மா குடும்பத்துக்கு அது ரொம்ப பெருசு! செம ஸ்டோரி!!