Just In
- 4 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 4 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 5 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 6 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாகன உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கு ஆறுதல் கொடுத்த ஐஆர்டிஏ!
கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலை குலைந்து போயுள்ள வாகன நிறுவனங்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் ஆறுதல் தரும் செய்தியை காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) வழங்கி இருக்கிறது.
கொரோனா பாதிப்பால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சுருண்டு கிடக்கின்றன. தற்போதைய சூழலில் வர்த்தகம் எப்போது சீராகும், பொருளாதார இழப்புகளை எப்படி சரி செய்வது என்ற குழப்பத்தில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும், டீலர்களும் உள்ளனர்.
இந்த நிலையில், ஆண்டுதோறும் நிதி ஆண்டு துவங்கும்போது வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த நிதி ஆண்டுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை உயர்த்துவதற்கு ஐஆர்டிஏ அமைப்பு திட்டமிட்டிருந்தது.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பை சுட்டிக் காட்டி, 2020-21ம் நிதி ஆண்டில் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று சியாம் அமைப்பு ஐஆர்டிஏ அமைப்பிடம் வேண்டுகோள் வைத்திருந்தது.
இதனை பரிசீலித்த ஐஆர்டிஏ அமைப்பு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணத்தை உயர்த்தப்பட மாட்டாது என்று சியாம் அமைப்புக்கு உறுதி அளித்துள்ளது. அனைத்து வகை வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் இந்த நிதி ஆண்டில் உயர்த்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது உள்ள பிரிமீயம் தொகையே தக்க வைக்கப்படும்.
இதனால், வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும், வாகன உரிமையாளர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இல்லையெனில், வாகன உரிமையாளர் தலையில் இந்த கூடுதல் சுமை விழும். அத்துடன், புதிய வாகனங்கள் வாங்குவோரும் தள்ளிப்போடும் வாய்ப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்த்தப்பட்டால், அது பெரும் சுமையாக, குறிப்பாக, புதிய வாகனங்கள் வாங்குவோருக்கு அதிக சுமையை ஏற்படுத்தும். இந்த நிலையில், இந்த முடிவு வரவேற்கப்படுவதாகவும், ஐஆர்டிஏவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சியாம் அமைப்பு தெரிவித்துள்ளது. இது நிச்சயம் வாகன உரிமையாளர்களுக்கும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருக்கும்.