Just In
- 9 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 22 min ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 56 min ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 1 hr ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- News மொத்தமாக புரட்டி போடும்.. எல்லாம் மாறும்.. இந்த ஒரு ராசியை அடிச்சிக்க முடியாது.. குரு பெயர்ச்சி பலன்
- Movies இழுத்தடித்த த.செ.ஞானவேல்?.. உச்சக்கட்ட டென்ஷனான ரஜினிகாந்த்?.. வேட்டையன் நிலைமை இதுவா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஆனந்த் மஹிந்திராவையே ஈர்த்த ஆட்டோ... கொரோனா போராளியாக மாறிய மூன்று சக்கரக்காரன்... வீடியோ!
பிரபல தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவின் கவனத்தை சாதாரண மூன்று சக்கர ஆட்டோ ஒன்று ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை கீழே காணலாம்.
ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா ஒட்டுமொத்த மனித இனத்தின் வாழ்க்கையையே தலை கீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. இதனால் ஏற்பட்டு வரும் இழப்புகள் அளப்பறியாதது. உலக நாடுகள் நாளுக்கு நாள் சந்திக்கும் இழப்புகளும் ஏராளம். ஆகையால், வைரசுக்கு எதிரான போரை துரிதப்படுத்துவது மிக மிக அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.
அந்தவகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என நினைத்து ஆட்டோக்காரர், தனது மூன்று சக்கர ஆட்டோவையே கொரோனா போராளியாக மாற்றியிருக்கின்றார். கொரோனாவிற்கு எதிராக இவர் எடுத்திருக்கும் முயற்சி நாட்டு மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களை மட்டுமின்றி சில பெரும் புள்ளிகளையும் அது கவரத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், ஆட்டோக்காரரின் வியத்தகு முயற்சியைக் கண்டு பிரம்மித்துபோன ஆனந்த் மஹிந்திரா, கொரோனா போராளியாக மாறியிருக்கும் ஆட்டோகுறித்த வீடியோவை தனது தனிப்பட்ட டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எனவே நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வரும் இந்த தகவல் தற்போது கூடுதல் கவனத்தை மக்களிடம் பெறத் தொடங்கியுள்ளது. அப்படி என்னதான் இருக்கு அந்த ஆட்டோவில் என்று கேட்கிறீர்களா? வாருங்கள் தகவலுக்குள் செல்லலாம்.
மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக பரவி வரும் வைரசை பரவாமல் தடுப்பதற்காக பல யுக்திகள் கையாளப்பட்டு வருகின்றன.
அதவாது, சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் விதமாக கண்ணாடி திரைகள், கிருமி நாசினிகள் மற்றும் மாஸ்க் போன்ற கிருமி பரவல் தடுப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில்தான், சற்று வித்தியாசமான முறையில் யோசித்த ஆட்டோக்காரர் ஒருவர், தனது ஆட்டோவில் கிருமியை அழிக்கும் விதமாக கை கழுவும் வாஷ் பேஷனை உருவாக்கியிருக்கின்றார்.
அத்துடன், சானிட்டைசர் மற்றும் கைகளைத் துடைப்பதற்கான டிஸ்யூக்களும் அந்த ஆட்டோவில் இடம்பெற்றிருக்கின்றன. எனவே, இந்த ஆட்டோ இந்தியாவின் ஸ்வச் பாரத் ஆட்டோவாக மாறியிருக்கின்றது. இதையேதான் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் குறிப்பிட்டுள்ளார்.
வைரசை நாசம் செய்வதற்கான வசதிகளை மட்டுமின்றி எப்படி கிருமி தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது என்பது பற்றிய வழிகாட்டுதல்களையும் ஆட்டோக்களில் அவர் ஒட்டியிருக்கின்றார்.
இந்த விநோத சம்பவம் மஹாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறியிருக்கின்றது. இந்த தனித்துவமான வசதியை ஆட்டோ உரிமையாளர் கொண்டிருப்பதால், அவர் மக்கள் மத்தியிலும் பிரபலமடையத் தொடங்கியுள்ளார்.
அதேசமயம், அந்த இளைஞர் ஆட்டோவில் Wi-Fi வசதியையும் வழங்கி வருகின்றார். ஆட்டோவை மிகத் தூய்மையாக பராமரித்து வரும் அவர், அதனுள் கார்டனைப் போன்று சிறிய செடித் தொட்டிகளையும் வைத்திருக்கின்றார். எனவே, இந்த ஆட்டோவில் பயணிப்பது மனதுக்கு அமைதியை வழங்குவதாக ரெகுலர் கஸ்டமர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த ஆட்டோக்காரர் அந்த சற்று பிரபலமான மனிதராக திகழ்ந்து வருகின்றார். கோவிட்19 வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் மக்கள் மத்தியில் பொதுபோக்குவரத்து வாகனங்கள் பற்றி தவறான கருத்துக்கள் பரவிய வண்ணம் இருக்கின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் பொதுபோக்குவரத்து வாகனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நோய் தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது.
இதனாலயே பலர் சொந்தமாக வாகனங்களை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதிரியான சூழ்நிலையில் மக்களை தங்கள் வசம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக வாடகை வாகன உரிமைதாரர்கள் சில விநோதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது மக்களின் கவனத்தை ஈர்ப்பதோடு, வாடகை வாகன பயணத்தையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
-
கேரளா கேரளாதான்யா! 100 வயசு கார் டிரைவரை பார்த்து மிரண்டு நிற்கும் மக்கள்! காருக்கே 50 வயசு ஆச்சுங்க!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!
-
பணங்காரங்க கண்ணு முழுக்க இந்த கார் மேல தான்! பிஒய்டி சீல் கார் எப்படி இருக்குது?