Just In
- 45 min ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 11 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 12 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 13 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
Don't Miss!
- News
கொடுமையை பாருங்க.. ஐந்து நாளில் இரண்டு முறை.. 9 பேரால் சிக்கி சீரழிந்த 13 வயது சிறுமி.. ஷாக்!
- Sports
எப்படி போட்டாலும் அடிக்கிறான்.. ஆஸி.யை திணற வைக்கும் சென்னையின் "வாஷிங்க்டன்".. சூறாவளி சுந்தர்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Movies
அனிதாவோட அப்பாவுக்கு என்னை ரொம்ப பிடிக்குமாம்.. கமலிடம் நெகிழ்ந்த ஆரி.. என்ன சொன்னார் பாருங்க!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டாலும் கவலை இல்லை... இந்த வேன் அவ்ளோ ஸ்பெஷலானது... ஏன் தெரியுமா?
மாருதி ஆம்னி வேன் ஒன்று சோலார் வாகனமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்காலம்.

அண்மைக் காலங்களாக பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் கொள்முதல் விலைக் குறைந்து காணப்பட்டாலும் இந்தியாவில் எரிபொருளின் விலை ஏறு முகத்திலேயேக் காட்சியளிக்கின்றது. இது, வாகன ஓட்டிகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

ஆனால், இங்கு ஓர் வேன் டிரைவர் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டாளும் எனக்கு கவலையில்லை என கூறி வருகின்றார். மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த திலிப் சித்ரே, இவரே பெட்ரோல்-டீசல் விலையுயர்வைக் கண்டு துளியளவும் கவலைக் கொள்ளாமல் பழைய மாருதி ஆம்னி வேன் ஒன்றைப் பயன்படுத்தி வருகின்றார்.

68 வயதான இவர், தானே தன்னுடைய வேனை சோலாரால் இயங்கும் வேனாக மாற்றியிருக்கின்றார். அதாவது, மாருதி ஆம்னி வேனை மின்சாரத்தால் இயங்கும் வாகனமாக மாற்றி அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த வேனிற்கான பேட்டரியை சார்ஜ் செய்யவே சோலார் பேனல்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இதனை வேனின் மேற்கூரைப் பகுதியில் அவர் நிறுவியிருக்கின்றார். மாற்றம் செய்யப்பட்ட இந்த வேனைக் கொண்டு அவர் இதுவரை 4,500 கிலோ மீட்டர் வரை பயணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த பயணத்தின்போது ஒரு முறைக் கூட அவர் எந்தவிதமான சிக்கலைச் சந்திக்கவில்லை என பெருமையுடன் கூறுகின்றார்.

காரில் மின்சாரத்தைச் சேமித்து வைக்க லித்தியம் அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு ஆம்னி வேனை முழுமையான சோலார் வாகனமாக மாற்றியமைப்பதற்கு மிகக் குறைந்த காலங்களே தனக்கு தேவைப்பட்டதாக திலிப் சித்ரே கூறியிருக்கின்றார்.

ஏற்கனவே சிறிய ரக சோலார் கருவிகளை உருவாக்கியதால் இவருக்கு ஆம்னி வேனை சோலார் வாகனமாக மாற்றுவதில் எந்த சிரமும் நேரவில்லை என தெரிவித்திருக்கின்றார். முன்னதாக இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடுவதைத் தடுக்கும் கருவியை இவர் வடிவமைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்தே தற்போது சோலார் திறனால் இயங்கக்கூடியவற்றை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சோலார் வேனை உருவாக்கியதைப் போல் முன்பு ஆட்டோ ஒன்றையும் திலிப் வடிவமைத்திருக்கின்றார்.

ஆனால், இதற்கு அரசு சார்பில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. பல முறை முயற்சி மேற்கொண்டும் அதற்கான எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. இருப்பினும், மனம் தளராத திலிப் தன்னுடைய அடுத்த தயாரிப்புகளை வடிவமைத்த வண்ணம் இருக்கின்றார்.
குறிப்பு: 5 முதல் 8 வரையிலான படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.