Just In
- 58 min ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டாலும் கவலை இல்லை... இந்த வேன் அவ்ளோ ஸ்பெஷலானது... ஏன் தெரியுமா?
மாருதி ஆம்னி வேன் ஒன்று சோலார் வாகனமாக மாற்றப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்காலம்.
அண்மைக் காலங்களாக பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுமளவிற்கு உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் கொள்முதல் விலைக் குறைந்து காணப்பட்டாலும் இந்தியாவில் எரிபொருளின் விலை ஏறு முகத்திலேயேக் காட்சியளிக்கின்றது. இது, வாகன ஓட்டிகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
ஆனால், இங்கு ஓர் வேன் டிரைவர் பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொட்டாளும் எனக்கு கவலையில்லை என கூறி வருகின்றார். மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த திலிப் சித்ரே, இவரே பெட்ரோல்-டீசல் விலையுயர்வைக் கண்டு துளியளவும் கவலைக் கொள்ளாமல் பழைய மாருதி ஆம்னி வேன் ஒன்றைப் பயன்படுத்தி வருகின்றார்.
68 வயதான இவர், தானே தன்னுடைய வேனை சோலாரால் இயங்கும் வேனாக மாற்றியிருக்கின்றார். அதாவது, மாருதி ஆம்னி வேனை மின்சாரத்தால் இயங்கும் வாகனமாக மாற்றி அவர் பயன்படுத்தி வருகின்றார். இந்த வேனிற்கான பேட்டரியை சார்ஜ் செய்யவே சோலார் பேனல்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்.
இதனை வேனின் மேற்கூரைப் பகுதியில் அவர் நிறுவியிருக்கின்றார். மாற்றம் செய்யப்பட்ட இந்த வேனைக் கொண்டு அவர் இதுவரை 4,500 கிலோ மீட்டர் வரை பயணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த பயணத்தின்போது ஒரு முறைக் கூட அவர் எந்தவிதமான சிக்கலைச் சந்திக்கவில்லை என பெருமையுடன் கூறுகின்றார்.
காரில் மின்சாரத்தைச் சேமித்து வைக்க லித்தியம் அயன் பேட்டரிகளைப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு ஆம்னி வேனை முழுமையான சோலார் வாகனமாக மாற்றியமைப்பதற்கு மிகக் குறைந்த காலங்களே தனக்கு தேவைப்பட்டதாக திலிப் சித்ரே கூறியிருக்கின்றார்.
ஏற்கனவே சிறிய ரக சோலார் கருவிகளை உருவாக்கியதால் இவருக்கு ஆம்னி வேனை சோலார் வாகனமாக மாற்றுவதில் எந்த சிரமும் நேரவில்லை என தெரிவித்திருக்கின்றார். முன்னதாக இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடுவதைத் தடுக்கும் கருவியை இவர் வடிவமைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்தே தற்போது சோலார் திறனால் இயங்கக்கூடியவற்றை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சோலார் வேனை உருவாக்கியதைப் போல் முன்பு ஆட்டோ ஒன்றையும் திலிப் வடிவமைத்திருக்கின்றார்.
ஆனால், இதற்கு அரசு சார்பில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது. பல முறை முயற்சி மேற்கொண்டும் அதற்கான எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. இருப்பினும், மனம் தளராத திலிப் தன்னுடைய அடுத்த தயாரிப்புகளை வடிவமைத்த வண்ணம் இருக்கின்றார்.
குறிப்பு: 5 முதல் 8 வரையிலான படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.
-
ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!