Just In
- 40 min ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 2 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 3 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Movies கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கியா, எம்ஜி-ஐ தொடர்ந்து இந்தியாவில் நுழைய வரிசைக்கட்டி நிற்கும் நிறுவனங்கள்...
கொரோனாவினால் இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்திலும் ஆட்டோமொபைல் துறை மிக பெரிய அளவில் சரிவை கண்டு வருகிறது. இது கடந்த 2 மாதங்களாக தான். ஏனெனில் இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டை சேர்ந்த பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் புதியதாக நுழைந்துள்ளன.
இதனை தொடர்ந்து தற்போதைய இக்கட்டான சூழ்நிலை சரியானவுடன் இந்தியாவில் களம்புக காத்திருக்கும் வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
சிட்ரோன்
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிஎஸ்ஏ க்ரூப் இந்தியாவில் தயாரிப்புகளை விற்பனை செய்ய சிகே பிர்லா க்ரூப் உடன் இணைந்துள்ளதின் விளைவாக பிஎஸ்ஏ க்ரூப்பின் சிட்ரோன் ப்ராண்ட் 2021ஆம் ஆண்டில் அறிமுகமாகவுள்ளது. இதன்படி இந்நிறுவனத்தின் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
மேலும் இந்த ப்ராண்ட்டில் பெரும்பான்மையான தயாரிப்புகள் பசுமை போக்குவரத்திற்கு வழி வகுக்கும் விதத்தில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் பிஎஸ்ஏ க்ரூப்பின் முதல் தயாரிப்பு மாடலாக சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி ரூ.30 லட்சம் விலையில் சிபியூ முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இதற்கு அடுத்த மாடல்கள் தான் 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது.
டெஸ்லா
எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் மாடல்3 எலக்ட்ரிக் செடான் கார் மூலமாக நுழையவுள்ளது. கடந்த 2016லேயே உலகளவில் அறிமுகமாகிவிட்ட டெஸ்லா மாடல்3 காருக்கு உலகம் முழுவதில் இருந்தும் முன்பதிவுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஏனெனில் இந்த செடான் மாடலின் விலையை டெஸ்லா நிறுவனம் மிகவும் மலிவாக நிர்ணயித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்நிறுவனத்தின் நெவாடா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் சிபியூ முறையில் சந்தைப்படுத்தப்படவுள்ள மாடல்3 எலக்ட்ரிக் காருக்கு இந்திய சந்தையில் ரூ.40-50 லட்சத்தில் விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
க்ரேட்வால் மோட்டார்ஸ்
சீன ப்ராண்ட்டான க்ரேட்வால், எஸ்யூவி மற்றும் பிக்-அப் வாகன தயாரிப்பிற்கு பிரபலமானது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2022ஆம் ஆண்டின் துவக்கதிலோ வருகை தரவுள்ள இந்த ப்ராண்ட், எஸ்யூவி கார்களை ஹாவல் பெயர்பலகையில் விற்பனை செய்யவுள்ளது.
இத்தகைய பணிகளை முன்னுறுத்தி செல்ல க்ரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவின் நம்பர்-1 ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகியில் இருந்து கௌசிக் கங்குலி என்பவரை பணியில் அமர்த்தவுள்ளது. இதுமட்டுமின்றி இந்தியாவில் நுழைவதற்கு முன்னதாக நம் நாட்டு சந்தையை பற்றி தீவிரமாக ஆராய்ந்தும் வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடந்து முடிந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் எஸ்யூவி மாடல்களும், எலக்ட்ரிக் கார்களும் காட்சிக்காக வைக்கப்பட்டன. இந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்த எச் எஸ்யூவி கான்செப்ட்டின் அடிப்படையில் எஸ்யூவி கார் இந்தியாவில் களமிறக்கப்படவுள்ளது.
செரி
சீன ஆட்டோ நிறுவனமான செரி, இந்தியாவில் டாடா மோட்டார்ஸின் உதவியின் மூலமாக நுழையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. செரி நிறுவனம் கடந்த 2012-லேயே டாடாவின் சொந்த ஜேஎல்ஆர் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் 50% நுழைந்துவிட்டதை பெரும்பான்மையானர்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
டாடாவின் ஜேஎல்ஆர் நிறுவனத்தின் மூலமாக தான் செரி நிறுவனம் சீனாவில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் மாடல்களை தயாரித்து வருகிறது. இதன் விளைவாக ப்ளாக்பேர்டு என்ற பெயரில் டாடா நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய எஸ்யூவி மாடல், செரி டிக்கோ 5எக்ஸ் எஸ்யூவி மாடலின் ப்ளாட்ஃபாரம் மற்றும் என்ஜின் தொழிற்நுட்பங்களை பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
ஃபா ஹெய்மா
மற்றொரு சீன நிறுவனமாக ஃபா ஹெய்மா ஆட்டோமொபைல்ஸ் இந்தியாவில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்நிறுவனம், பிஎம்டபிள்யூ மற்றும் மினி நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ள பேர்டு ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் இந்திய செயல்பாடுகளுக்காக இணையவுள்ளது.
கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்நிறுவனத்தின் சார்பில் ஹெய்மா 7எக்ஸ், ஹெய்மா 8எஸ் மற்றும் பேர்டு இ1 மாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்த மூன்று மாடல்களும் இந்தியாவில் அடுத்த 2-3 ஆண்டுகளில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ரூ1.5 லட்சம் தள்ளுபடி விலையில் குடும்பத்துடன் பயணிக்கும் எக்ஸ்யூவி 700 காரை வாங்கலாம்! வெயிட்டிங் டைமும் கம்மி