Just In
- 48 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 1 hr ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Movies நீங்கள் என் படத்தை பார்த்திருக்க மாட்டீங்க.. ஹரியிடம் ஓபனாக சொன்ன கமல் ஹாசன்
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்தியாவிற்கு பெருமிதம்! பாதுகாப்பான கார்களின் டாப்-10 பட்டியலில் இணைந்த மற்றொரு மஹிந்திரா தயாரிப்பு
இந்தியாவின் பாதுகாப்பான டாப்-10 கார்களின் பட்டியலை, புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி மாற்றியமைத்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் சோதனைகளில், மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யூவி 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என இருவருக்குமான பாதுகாப்பிலும், மஹிந்திரா தார் எஸ்யூவி 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று, இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது.
அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பான டாப்-10 கார்களின் பட்டியலையும், இதன் மூலம் மஹிந்திரா தார் எஸ்யூவி மாற்றியமைத்துள்ளது. 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் உடன் இந்த பட்டியலில், மஹிந்திரா தார் எஸ்யூவி தற்போது 4வது இடத்தில் உள்ளது. எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் மராஸ்ஸோ எம்பிவி ஆகிய கார்களுக்கு பிறகு, இந்தியாவின் பாதுகாப்பான டாப்-10 கார்களின் பட்டியலில் இடம்பிடிக்கும் மூன்றாவது மஹிந்திரா தயாரிப்பு என்ற பெருமையை 2020 தார் எஸ்யூவி பெறுகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
இதுவே இந்தியாவின் பாதுகாப்பான டாப்-5 கார்கள் என எடுத்து கொண்டால், எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் தார் எஸ்யூவி என மஹிந்திரா நிறுவனம் 2 கார்களை கொண்டுள்ளது. அத்துடன் இந்தியாவின் பாதுகாப்பான ஆஃப்ரோடு கார் எனவும் 2020 மஹிந்திரா தார் எஸ்யூவியை தற்போது அதிகாரப்பூர்வமாக நம்மால் அழைக்க முடியும்.
குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளின் அடிப்படையில், இந்தியாவின் பாதுகாப்பான டாப்-10 கார்களின் பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காம்பேக்ட் எஸ்யூவி முதலிடத்தில் தொடர்கிறது. இரண்டாவது இடத்தில் டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக்கும், மூன்றாவது இடத்தில் டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியும் உள்ளன.
நான்காவது இடத்தை தற்போது மஹிந்திரா தார் எஸ்யூவி சொந்தமாக்கி கொண்டுள்ளது. 5வது இடத்தை டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி பிடித்துள்ளது. டாடா நிறுவனம் முதலில் நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியை குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளுக்கு அனுப்பியபோது, பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் மட்டுமே பெற்றது.
ஆனால் டாடா நிறுவனம் இதில் திருப்தியடையவில்லை. எனவே நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியின் பாதுகாப்பை இன்னும் மேம்படுத்தி, மீண்டும் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளுக்கு அனுப்பியது. இம்முறை டாடா நெக்ஸான் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் முழுமையாக 5 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் பெற்று அசத்தியது.
6வது இடத்தில் டாடா நிறுவனத்தின் டிகோர்/டியாகோ கார்கள் உள்ளன. 7வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் போலோவும், 8வது இடத்தில் மஹிந்திரா மராஸ்ஸோவும் உள்ளன. 9வது இடத்தை டொயோட்டா எட்டியோஸ் காரும், 10வது இடத்தை மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காரும் பிடித்துள்ளன. குளோபல் என்சிஏபி அமைப்பு கடந்த 6 ஆண்டுகளில் (2014-2020) 40க்கும் மேற்பட்ட கார்களை மோதல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் டாப்-10 கார்களை நாங்கள் வழங்கியுள்ளோம். முழுமையான பட்டியலை நீங்கள் கீழே காணலாம்.
தற்போது டாப்-10 பட்டியலில் புதிதாக இணைந்துள்ள மஹிந்திரா தார் கடந்த அக்டோபர் 2ம் தேதிதான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பழைய தார் எஸ்யூவியை மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் மேம்படுத்தி புதிய தலைமுறை மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. எனவே தற்போது இந்த எஸ்யூவியின் காத்திருப்பு காலம் 9 மாதங்களாக நீண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!