Just In
- 32 min ago
மக்களை தைரியமாக எலெக்ட்ரிக் கார் வாங்க வைக்க அதிரடி... கோவையை தொடர்ந்து மற்றொரு நகரிலும் தரமான சம்பவம்...
- 2 hrs ago
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- 12 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 14 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
Don't Miss!
- Sports
விக்கெட் எடுக்க முடியவில்லை.. கடும் விரக்தி.. பதற்றத்தில் ஆஸி. மூத்த வீரர் செய்த காரியம்.. போச்சு
- News
வாட்ஸ் அப்ல ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருப்பீங்க.. வாட்ஸ்அப்பே ஸ்டேட்டஸ் போட்டு பார்த்திருக்கீங்களா?
- Movies
மணிகர்னிகா ரிட்டர்ன்ஸ் இந்த புத்தகக் கதைதானாமே.. நடிகை கங்கனா மீது எழுத்தாளர் காப்புரிமை புகார்!
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க திட்டமிட்டவர்களுக்கு அடுத்த ஷாக்... நாளை முதல் விலை உயர்கிறது?
புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி வாங்க காத்திருந்தவர்களுக்கு அடுத்து ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. நாளை முதல் விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி வடிவமைப்பிலும், வசதிகளிலும் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக மாறியது. இந்த காருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 20,000க்கும் மேற்பட்டோர் புக்கிங் செய்துள்ளனர்.

மேலும், அடுத்த ஆண்டு மே மாதம் வரை முன்பதிவு முடிந்து விட்டதாகவும் மஹிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி பவன் கோயங்கோ தெரிவித்தார். இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மஹிந்திரா தார் குறித்து அடுத்து ஒரு ஏமாற்றமான செய்தி வந்துள்ளது. அதாவது, நாளை முதல் (டிசம்பர் 1) புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. டீலர் வட்டாரத் தகவல்களும் விலை உயர்வை உறுதிப்படுத்தி உள்ளன.

அதேநேரத்தில், இன்று வரை முன்பதிவு செய்வோருக்கு மட்டுமே, அறிமுகச் சலுகையாக அறிவிக்கப்பட்ட விலை பொருந்தும் என்றும் டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு குறித்து மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

ஆனால், மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.40,000 வரை விலை உயர்வு இருக்கும் என்று டீலர் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இது புதிதாக மஹிந்திரா தார் எஸ்யூவியை முன்பதிவு செய்ய திட்டமிட்டிருப்போருக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இதனிடையே, புதிய மஹிந்திரா தார் எஸ்யூவியின் விலை குறைவான ஏஎக்ஸ் வேரியண்ட்டுகளுக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த முன்பதிவும் விலை உயர்வுக்கு பின்னர் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி ரூ.9.80 லட்சம் முதல் ரூ.13.75 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், பேஸ் வேரியண்ட்டுகளுக்கான புக்கிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஆரம்ப விலை 11.90 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இப்போது கிடைக்கிறது.